Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, February 26, 2012

நிறம்,மனம்,இதயம்,அரேங்கேற்றம்



நிறம்


தோலில் பார்க்காதவரையில் 
எல்லோர்க்கும் ப்ரியமே!


மனம்


சிலருக்கு
 முகம் பார்க்கும் கண்ணாடியாய் 
சிலருக்கு 
ஊடுருவும் கண்ணாடியாய்!



இதயம்


இருக்கிறதா என்றாய் 
இருந்தது என்றேன்!


அரங்கேற்றம்


உன்னிடம் பேச வேண்டியதை 
நன்கு ஒத்திகை பார்க்கிறேன்
ஆனால் அரங்கேற்றம் 
வேறு விதமாகத்தான் நடக்கிறது!



பேஸ்புக்கில்,டிவிட்டரில் பகிர்ந்தது.
படங்கள்-கூகுள் தேடலில்.......


மேலும் வாசிக்க "நிறம்,மனம்,இதயம்,அரேங்கேற்றம்"

Tuesday, February 14, 2012

எல்லாம் செய்யும் இந்த ________காதல்!!!





ஊனை உருக்கும்
உயிரைக் கரைக்கும்
காலம் மறக்கும்
காத்திருக்கச் சொல்லும்

உறக்கம் அகலும்
உணவு கசக்கும்
கவிதை எழுதச் சொல்லும்
கனவு காணச் சொல்லும்


ஹார்மோன்களைத்
தூண்டிவிட்டு
ஹார்மோனியம் வாசிக்க விட்டு
வேடிக்கை பார்க்கும்

தனிமை பிடிக்கும்
தானாய்ப் பேச வைக்கும்
சிந்திக்க வைக்கும்
சிறகு முளைக்கும்

எதுவுமே இல்லாமல்
ஏதேதோ எண்ணச்சொல்லும்
ஒன்றுமே இல்லாமல்
ஒரு மணிநேரம் கூட பேசச் சொல்லும்


இவை எல்லாம் செய்யும் இந்த_______________ காதல்

டிஸ்கி-எனக்கு போதிய அனுபவம் இல்லாததால் கோடிட்ட இடத்தை தாங்களே நிரப்பிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.(அப்பா தப்பிச்சுட்டேன்)


(சில நண்பர்கள் இத எங்கயோ பாத்தமாதிரி இருக்குன்னு சொல்லுறது கேக்குது,ஆமாங்க மீள்பதிவு.வந்த புதுசுல போட்டது காதலர்தினதுக்காக திரும்பவும்........)


மேலும் வாசிக்க "எல்லாம் செய்யும் இந்த ________காதல்!!!"

Saturday, February 11, 2012

கொரங்கு பெடல்


கார்த்தி அஞ்சாவது வரைக்கும் படிச்சது அவங்க ஊரான மங்களபுரத்திலிருந்து  இருந்து ஒரு அஞ்சு கிலோமீட்டர் தூரத்திலிருக்குற ஆயில்பட்டிங்கற ஊர்ல.ஸ்கூலுக்கு போய் வர்றது எல்லாம் ஸ்கூல் வேன்ல தான்.அதுக்கப்பறம் ஆறாவது போகும் போது இந்த ஊரிலே இருக்குற கவர்மெண்ட் ஸ்கூல்ல சேத்து விட்டுட்டாங்க.இந்த ஸ்கூல் அவனோட வீட்டிலிருந்து ஒரு ஒன்னரை கிலோமீட்டர் தான் இருக்கும்.அக்கம் பக்கதிலிருக்குற பசங்க பொண்ணுங்க கூட சேர்ந்து நடந்தே போயிட்டு வந்துடுவான் வீட்டுக்கு.வழியில் அவரவர் எடுத்து வரும் நொறுக்கு தீனிகளின் பரிமாற்றத்துடன் குதூகலப்பேச்சும்,கேலி,கிண்டலுடன் நடை களைப்பு கரைந்திருக்கும்.

ஏழாவது போகும் போது பக்கத்து வீட்டு பொண்ணு பானு சைக்கிள் வாங்கி ஸ்கூலுக்கு போவதைப்பார்த்து நாமளும் சைக்கிள் ஓட்ட கத்துக்கணும்னு நினைச்சுக்கிட்டான்.அப்ப அவங்க வீட்டில இருந்தது ஒரு பெரிய சைக்கிள்.கால் எட்டாது.பானு கார்த்திக்கை விட கொஞ்சம் உயரமானவ.அதனால அவ ஈஸியா சைக்கிள் கத்துக்கிட்டா. நம்மாளு கொஞ்சம் கூலையா(குள்ளமா) இருப்பான் பெரிய சைக்கிள்ள கொரங்கு பெடல் போட்டு ஒட்டி கத்துக்கிட்டாத்தான் அப்புறம் கம்பி மேல ஒக்காந்து ஓட்ட முடியும்.இதுக்கு நடுவில கீழ விழுந்து முட்டி பேந்து,இன்னும் சைக்கிளுக்கு ஏதாவது ஆகிட்டா அப்பா வேற அடி பின்னிடுவாரே!அதுவுமில்லாம கொரங்கு பெடல் போட்டு சிக்கி ஓட்டுறத பானு பாத்தா அசிங்கமாயிருக்குமே இப்படியெல்லாம் அவன் மனசுக்குள்ள ஓடுச்சு.

                                                                

கார்த்தி பிரண்டு செந்தில் குட்டி சைக்கிள் வைச்சிருந்தான்.அவனுக்கு கோணபுளியாங்கா எல்லாம் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணி டெய்லி ஒரு மணிநேரம் சைக்கிள் பழக சம்மதம் வாங்கிட்டான்.மொத ரெண்டு நாள் செந்தில் பிடிச்சுக்க ஒட்டி பழக ஆரமிச்சான் நாலைஞ்சு நாள்ல அப்படி இப்படின்னு ஓட்ட கத்துக்கிட்டான்.அப்பப்போ வீட்டிலிருந்த பெரிய சைக்கிள்ல யாரும் பாக்காதப்ப கொரங்குபெடலும் போட்டுப்பாத்தான் ஒரு தடவ சைக்கிள்செயின் கடை விழுந்து  இவன் முட்டி பேந்துடுச்சு.அதைக்கூட பாக்காம சைக்கிளுக்கு அதாவது ஆயிடுச்சான்னு பாத்து நைசா கொண்டாந்து வீட்டுல விட்டுட்டான்.வழக்கமா போடுவதை விட கொஞ்சம் கீழே இறக்கி டவுசர் போட்டுக்கிட்டான் காயம் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு.

அதுக்கப்புறம் கொரங்குபெடலை கொஞ்ச நாளைக்கு மறந்து செந்தில் சைக்கிள்லயே பழக ஆரமிச்சான்.அப்படியே அவனையே வைச்சு டபுள்சும் வைச்சு ஓட்ட கத்துக்கிட்டான்.அப்படியே அவங்க அப்பாகிட்டையும் ஒட்டிக்காமிச்சு பெரிய சைக்கிளை எடுத்து பழக அனுமதியும் வாங்கிட்டான்.
                        
குட்டி சைக்கிளோட்டி பழகியிருந்தாலும் பெரிய சைக்கிளில் காலைத்தூக்கி மேலே போட முடியவில்லை இரண்டு பெடலிலும் முழுசாக ஒரு ரவுண்டு அழுத்த கால் எட்டவும் இல்லை.மறுபடியும் கொரங்குபெடல்தான்.குட்டி சைக்கிள் நல்லா ஒட்டி கத்துக்கிட்டதால இப்ப கொரங்கு பெடல்ல கீழ விழாம ஓட்ட ஆரமிச்சான்.

அப்பறமா ஒரு நாள் செந்திலுக்கும் இவனுக்கும் ஒரு போட்டி வந்தது.கொரங்கு பெடல் போட்டு ஸ்பீடா ஓட்ட முடியாதுடா அப்படின்னான் செந்தில்.நான் உன்ன விட ஸ்பீடா போய் காட்டுறேன்னு சொல்லி பொட்டிய ஆரமிச்சாங்க கார்த்திதான் முன்னால போனான் ஆனா கொஞ்ச தூரத்துல பானு வர்றத பாத்து வெக்கப்பட்டுகிட்டு சைக்கில நிறுத்திட்டான்.செந்தில் பாத்தியா நான்தான் ஜெயிச்சேன்னு சொன்னான் .கார்த்தி அதுக்கு இல்ல ஏன் சைக்கிள்ல ஸ்போக்ஸ் கம்பி ஒண்ணு கழன்டுகிச்ச்சு அதான் நின்னுட்டேன்னு சொன்னான்.அதெல்லாம் இல்லேன்னு ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்க பானு பக்கத்துல வந்து என்னான்னு கேட்டா செந்தில் விசயத்த சொல்ல ஆரம்பிக்க கார்த்தி தடுத்தான்ஆனா செந்தில் சொல்லிட்டான்.பானு ஸ்போக்ஸ் கம்பியை பாத்துட்டு கம்பி நல்லாத்தான இருக்கு அப்புறம் ஏன் நின்னுட்ட அப்படின்னு கேக்க,கார்த்தி தயங்கி தயங்கி,உன்ன பாத்ததால தான் நின்னுட்டேன் அப்படின்னான்.பானு அதுக்கு ஏன்னு கேட்டா.இல்ல உன் முன்னாடி கொரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்ட வெக்கமா இருந்துச்சு அதான் அப்படின்னான்.அதுக்கு பானு மக்கு!மக்கு! நானும் மொதல்ல சைக்கிள் கத்துக்கும் போது கொரங்கு பெடல் போட்டுத்தான் கத்துக்கிட்டேன் அப்படின்னா.
அப்போ கார்த்தி ஏதோ பானுவிடம் கேட்க நினைத்து வாயெடுத்து வார்த்தைகளை முழுங்கிக்கொண்டான்.
 __________________________________________________________________________________________________________________________
 கார்த்தி பானுவிடம் என்ன கேட்டிருப்பான்?உங்கள் கற்பனைக்கே.......
சத்தியமாக இதற்கு என்னிடம் பதில் இல்லை.
சில விளக்கங்கள்-கோண புளியாங்கா –கொடுக்காப்புளி
செயின் கடை விழுதல்-கழண்டு விழுதல்
___________________________________________________________________________________________________________________________
கதைக்கு இன்னுமொரு கிளைமாக்ஸ் – பானு அப்படி சொன்னதும் கார்த்தி இப்ப வாடா செந்திலு பாக்கலாம் அப்படின்னு போட்டிய திரும்பவும் ஆரமிச்சாங்க.இப்ப யாரு ஜெயிச்சாங்கன்னு நான் சொல்லனுமா என்ன?
___________________________________________________________________________________________________________________________
மேலும் வாசிக்க "கொரங்கு பெடல்"

Friday, November 25, 2011

இப்படி நன்றி செய்வாயோ?


பிறந்த போது
பேருவகை அடைந்த
தந்தையை
எத்தனையோ இரவுகளில்
தூங்க விடாமல்


தவழ்ந்து நடக்கையில்
அசந்த சமயங்களில்
அடிக்கடி சாலைக்கு ஓடி
பிள்ளையை பத்திரமா பாத்துக்குங்க
என பலரையும் பேச வைத்து


மேலும் வாசிக்க "இப்படி நன்றி செய்வாயோ?"

Thursday, November 17, 2011

விட்டுப்போவது எதை?




சமீப காலமாக நம்மிடையே ஒரு கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது.  அது என்னன்னா, 

நீங்க கூட பாத்திருப்பிங்க, முன்பெல்லாம் கல்யாணம்,காதுகுத்து,வளைகாப்பு,வரவேற்ப்பு இப்படி சுபகாரியங்களின் போது நடக்கும் விருந்துகளில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர் வைப்பர்.(சிறு வயதில் நான் இது போன்ற விசேசங்களில் ஜக்கில் தண்ணீர் எடுத்து ஊற்ற அப்போது என் வயது பொடுசுகளோடு போட்டியிட்ட ஞாபகம்)

(யாராவது டம்ளரை திருப்பி தண்ணி ஊத்துங்க )


ஆனா இப்ப என்னை நடக்குது,கொஞ்ச நாள் முன்னாடி வரை சில்வர் தம்ளருக்கு பதில் பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தினர்,
இப்ப உலகம் ரொம்ப வேகமா சுத்துதோ என்னமோ தெரியலசாப்பிட போறத்துக்கு முன்னாலேயே இலையப்போட்டு எல்லா பதார்த்தங்களையும் வைத்துவிட்டு(நமக்கு பிடிக்குதோ இல்லையோ சாப்பிடுறமோ இல்லையோ.இதில் கொடுமை என்னான்னா குழந்தைகள் உட்காரும் இலைகளிலும் பெரியவர்கள் சாப்பிடும் அளவுக்கு பரிமாறப்பட்டிருக்கும்.ஒக்கே.இதைப்பற்றி இன்னொரு பதிவு போடலாம் இப்ப மேட்டேருக்கு வரேன்)கூடவே தண்ணியை ஒரு பெட் பாட்டிலில் வைத்து விடுகிறார்கள்.நாமும் குடித்துவிட்டு வந்துவிடுகிறோம்.


நாம்குடித்துவிட்டு பாட்டிலை விட்டுவிட்டு வருங்காலத்திற்கு என்னத்த எடுத்து சென்று விடப்போகிறோம்.இது போன்ற பிளாஸ்டிக் குப்பைகளின் கூடாரத்தையா?

சமீபத்தில் ஒரு மண்டபத்தில் ஒராமாக காலியிடத்தில் இது போன்ற பாட்டில்களின் குவியல் இருந்தது.இதை என்னை செய்ய போகிறீர்கள் என்று நிர்வாகிகளிடம் கேட்டேன்.அவர்களிடமிருந்து தெளிவான பதில் இல்லை.(யார் கண்டா அடுத்த கல்யாணத்தில் நீங்கள் முன்பு குடித்த பாட்டிலிலே மீட்டும் தண்ணீர் குடிக்க நேரிடலாம்)


இது இல்லாமல் நாம் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள இயற்க்கை வளங்களை  நம்மால் முடிந்த வரை இந்த பாட்டில்கள் மூலம் அழித்து வருகிறோம்.இந்த பத்திவின் மூள அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்னன்னா அடுத்த முறை நம்ம வீட்லயோ,நண்பர்கள் வீட்லயோ விருந்து நடக்கும் போது இது போன்ற பாட்டில்களை பயன்படுத்த மாட்டோம்னும்,சுற்றுலா செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்னும் உறுதி எடுத்துக்குவோம்.




சமீபத்துல பெய்த மழையில் வெள்ளம் வடியாமல் அலைகழித்ததில் இது போன்ற பிளாஸ்டிக் குப்பைகளும் பெரும்பங்கு வகித்தன.அதேபோல் ஓரிரு நாட்களுக்கு முன் பேப்பரில் கண்ட விசயத்தை நண்பர் சம்பத்குமார் சொன்னார் ராமேஸ்வரத்தில் பிளாஸ்டிக் கவர்களை தின்று இரு பசுமாடுகள் இறந்து போனதாக.


நாம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுசெல்லப்போவது எதை?
வசந்ததையா?குப்பைகளின் கூடாரங்களையா?


மீள்வு-சில மாற்றங்களுடன்
படங்கள்-கூகுளில் பிடித்தது.
                                                                             
மேலும் வாசிக்க "விட்டுப்போவது எதை?"

Wednesday, November 9, 2011

தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?



பதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ 

கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொத்தத்தில் 

ஒரு சினிமா ரசிகன் அவ்வளவுதான்(அப்பாடா நடுநிலை விளக்கம் கொடுத்தாச்சு)



தமிழ் சினிமாவுல யாருதான் தோல்விப்படம் கொடுக்கல?நம்ம சூப்பர்ஸ்டாரே தோல்வி 

கண்டிருக்கிறார்.அப்பறம் ஏன் விஜய் மட்டும் எஸ்.எம்.எஸ்களிலும், facebook,twitter,blog 

இன்னும் என்னென்ன இருக்கிறதோ எல்லாவற்றிலும் கண்ணாபின்னாவென்று கலாய்க்கப்பட 

என்ன காரணம்?அப்படி கலாய்ப்பவர்கள் தல ரசிகர்களா?அப்படினா தல படம் வரும் போது 

தளபதி ரசிகர்களால் படாத பாடு படனுமே?படுது ஆனா ரொம்ப கம்மியாத்தான்.அப்படின்னா 

தளபதி ரசிகர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையை ரசிக்கும் 

கண்ணியம்(கடமை,கட்டுப்பாடு இல்லையான்னு கேக்காதீங்க) மிக்கவர்களா?என்ன தான் 

நடக்கிறது?



தல அப்படியென்ன சாதனை செஞ்சுட்டார்? கொஞ்ச நாள் கழித்து திரும்பிப்பார்க்கும் போது 

தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்று என்று இவரது படம் ஏதாவது இருக்குமா?

இல்லை தளபதியைவிட அதிக ஹிட் கொடுத்து விட்டாரா?எனக்குத்தெரிந்து தளபதியை 

விட இவரே அதிக பிளாப்பை கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். 

ஜனா,ராஜா,ஆழ்வார்,ரெட்,ஆஞ்சநேயா,ஜீ போன்றவை உதா”ரணங்கள்”.அவ்வளவா தமிழ் 

சினிமாவின் பெரிய இயக்குனர்கள்  என சொல்லப்படும் இயக்குனர்களின் படங்களிலும் 

நடித்ததில்லை.



நம்ம தளபதி என்ன செய்திருக்கார்?ஆ”ரம்ப” காலங்களில் சங்கவி,சுவாதி போன்றோருடன் 

அவரது அப்பா(டேக்கர்)வின் படங்களில் நடித்து(!) தமிழ் சினிமாவில் தனது இடத்தை தக்க 

வைத்துக்கொண்டார்.அவரை பலருக்கும் எடுத்துச்சென்ற படம் 'லாலா' புகழ் விக்ரமனின் 

பூவே உனக்காக.அப்பறம் காதலுக்கு மரியாதை மூலமாக இளைஞர்களின் குறிப்பாக 

காதலர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.அதன் பிறகு ரஜினி வழியை ,எம்.ஜி.ஆர் வழியை 

பின் பற்றுகிறேன் என்று ஐஞ்சு பாட்டு,நாலு பைட்டு,பார்முலாவில் குதித்து அதையே இன்று 

வரை தொடர்கிறார்.ஆனால் ரஜினி நடுநடுவே பார்முலாவில் இருந்து விலகி நடித்த 

படங்களையும் ஆரம்ப காலங்களில் தர மான படங்களில் நடித்து தன்னை திரையுலகில் 

நிலை நாட்டியதையும் மறந்து விட்டார்(முள்ளும் மலரும்,ஜானி,போன்ற சில படங்கள்).



 தல நடித்(டந்)ததில் அவரை ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சேர்த்தது 

வாலி,அமர்க்களம்,தீனா போன்றவை.ஆனா பாருங்க இதுல எல்லாமே அவரு நெகடிவ் 

ரோல்ல நடிசிருப்பாரு.(பல காலமா நம்ம சினிமாவுல ஹீரோ வில்லன் ரெண்டு பேரும் 

ஒரே வேலைய தான செய்யுறாங்க).இதுல தீனா தல’க்கு ஒரு மாஸ் படம்.அப்படி ஒரு படம் 

தளபதிக்கு கில்லி,அப்பறம் போக்கிரி புண்ணியத்துல ரொம்ப நாள் கழிச்சு தான் கிடைச்சது.




நாலு பைட்டு,ஐஞ்சு பாட்டு பார்முலாவில் இருவருமே இருந்தாலும் அந்த பாட்டுக்கும் 

பைட்டுக்கும் இருக்கும் இடைவெளியில் உள்ள விஷயங்கள்தான் இங்கே 

முக்கியம்.தளபதியாரின் படங்களில் அவை எல்லா 

படங்களிலும்(சிவகாசி,திருப்பாச்சி,குருவி,வேட்டைக்காரன்,சுறா,வில்லு,ஆதி) ஒரே மாதிரி 

வருவது,பைட்டுகளில் அளவுக்கதிகமா தாவிக்குதிக்கறது,அப்பறம் 

அரசியல் ஆர்வம்(அதனாலதான அணில்?),அவங்க அப்பாவோட பேட்டிகள்,டாகுடர் பட்டம் இதெல்லாம் அவரோட 

இமேஜை நடுநிலை ரசிகர்கள் மத்தியில் டேமேஜ் ஆகிடுச்சு.இவர் இடைக்காலங்களில் 

நடித்த து.ம.துள்ளும்,குஷி,பிரண்ட்ஸ் போல தொடர்ந்திருந்தால் கூட இந்த அளவுக்கு ஆகி 

இருக்கிறது என நினைக்கிறேன்.



இந்த ஐஞ்சு பாட்டு நாலு பைட்டுக்கு நடுவுல தல படத்துல ஏதோ கொஞ்சம் 

வித்தியாசத்தை(முகவரி,க.கொ க.கொ,சிட்டிசன்,வரலாறு,வில்லன்,பில்லா,மங்காத்தா)காட்டி 

வருவது,அரசியலில் ‘தல’யிடாதது ஆதரவின்றி திரையுலகில் தடம் பதித்த திறமை,ரசிகர் 

மன்றத்தை கலைத்த அதிரடி,ஒளிவு மறைவில்லா பேச்சு போன்ற சில ஆரோக்கியமான 

விஷயங்கள் இவரை கலாய்க்க யோசிக்க வைக்கிறது.



கவனிக்க பெரும்பாலும் கலாய்ப்பது நடுநிலை ரசிகர்களே.அப்பறம் தளபதி புதிய 

வெற்றியின் மேல நம்பிக்கையில்லாம அதிகம் ரீமேக் பண்றதும் ஒரு 

காரணமாயிருக்கலாம்.இப்ப கொஞ்சம் மாற்றம் இருக்காப்புல தெரியுது தளபதியோட 

மூவ்ல.ஷங்கர்,முருகதாஸ்,கெளதம்மேனன்,விஜய்,சீமான் படங்கள்ல அடுத்தடுத்து 

நடிக்கப்போறதா இருக்கு இது ஒரு நல்ல மாற்றம் போல தெரியுது.பாப்போம்.அப்படி நல்ல 

மாற்றங்கள் வந்தும் தொடர்ந்து கலாய்ப்புகள் தொடர்ந்தா அது நடுநிலை ரசிகர்கள் அல்ல 

என்பது நிச்சயம்.


டிஸ்கி-மீண்டும் ஒரு முறை ஆரம்ப வரிகளைப்படிக்க.   


மேலும் வாசிக்க "தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?"

Tuesday, November 8, 2011

700- மில்லியன் ஆண்டுகள்,முடியுமா?



மாண்புமிகு முன்னாள் குடியரசுதலைவர்,இந்தியர் பலரின் கனவு நாயகன் 

கூடங்குளம் அணுஉலையை ஆய்வு(!)செய்து அணுஉலை பாதுகாப்பானது 

என தனது(?)முடிவை விளக்கியுள்ளார்.கூடங்குளம் மட்டுமல்ல எல்லா 

அணுஉலைகளும் அணுஉலைக்கழிவினைப்பற்றி யாரும் 

கவலைப்படுவதாக தெரியவில்லை!


அணுஉலை மின் உற்பத்தியில் அனல்மின் திட்டதைப்போல சுற்றுச்சூழலை 

மாசுபடுத்தாது,நீர்மின் திட்டங்களைப்போல வாழும் மக்களின் 

வாழ்வாதாரத்தை(இடம் பெயர வேண்டிய சூழல்) அழிக்கும் பிரச்சினைகள் 

கிடையாது.எல்லாம் சரிதான்.அணுமின உற்பத்தியில் உற்பத்திக்குப்பின் 

வெளியாகும் அணுக்கழிவுகளை அழிக்கப்போவது எப்படி?அழிக்க முடியுமா?

அழிக்க முடியாவிடில் பாதுகாப்பது எப்படி?



சாத்தியமான வழி அணுக்கழிவுகளை பாதுகாப்பாக ஒரு பெட்டகத்தில் 

போட்டு காத்துக்கொண்டிருக்க வேண்டியது தான்.சரி,எவ்வளவு நாளைக்கு 

பாதுகாப்பது?யுரேனியம்-235 என்ற அணுஉலையில் பயன்படுத்தப்படும் 

எரிபொருளின் கதிரியக்கம் பாதியாக(half-life period) குறைய ரொம்ப 

இல்லைங்க சுமார் 700 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.கவனிக்கவும் 

பாதியாகக்குறைய.


அவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கூடிய பாதுகாப்புப்பெட்டகம் உள்ளதா 

தெரியவில்லை.அப்படியே இருந்தாலும் நண்பர் ராஜாMVS தனது ஒரு பதிவில் 

கேட்டது போல மனிதக்கழிவுகளையே சரியாக காக்க தெரியாத நாம் 

எப்படி இதனை ஆண்டுகளுக்கு அணுக்கழிவுகளை காக்கப்போகிறோம்?ஐயா 

நான் ஒன்றும் நமது தேசத்த கொசைப்படுத்துனும்னோ,நம்ம நாட்டுக்கு 

அந்த அளவுக்கு சக்தி இல்லேன்னோ சொல்லல,ஒரு உதாரணம் சமீபத்துல 

டெல்லி பல்கலைக்கழகத்துல இருந்து ஆராய்ச்சிக்காகபயன்படுத்தப்படும் 

கதிரியக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கருவி மார்கெட்டுக்கு வந்தது 

உங்களுக்கு நினைவிருக்கிறதா?


பல்கலைக்கழகத்துல அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லே அதனால 

வந்துடுச்சு.ஆனா இந்த விஷயம் அப்படியான்னு கேக்குரிங்களா?ஒரு 

வேளை வந்துடுச்சுன்னா?ரோட்டுல போகும் போது கூட தான் விபத்து 

நேரலாம் அதுக்காக ரோட்டுலையே போகாமையா இருக்குறோம் 

அப்படின்னு கேக்குறிங்களா?ரோட்டுல போகும் போது அடி பட்டா அது 

நம்மளோட முடிஞ்சுடும் ஆனா இந்த விஷயம் அப்படியா?




பூகம்பத்தால் விழும் என நினைத்தா தஞ்சை பெரிய 

கோவிலையும்,கல்லணையையும் கட்டினார்கள் என திரு கலாம் அவர்கள் 

கேட்டிருக்கிறார்.ஐயா அப்படியே பூகம்பத்தில் இவைஎல்லால் அழிய 

நேரிட்டால் பாதிப்பு எத்தனை பேருக்கு?எத்தனை நாளைக்கு?ஆனால் இந்த 

விஷயம் அப்படியா?


2005 வரைக்கும் அமேரிக்கா உருவாக்கியுள்ள அணுக்கழிவுகள் மொத்தம் 

சுமார் ஐம்பதாயிரம் டன்.அவையெல்லாம் பாதுகாப்பாகத்தானே இருக்கிறது?

ஆமாம் இருக்கிறது. இன்றைக்கு


வரும்காலத்தில்?அட அதைப்பற்றி நமக்கென்ன கவலை அது வரை 

நாமென்ன இருக்கப்போகிறோமா?







கீற்று கட்டுரை



மேலும் வாசிக்க "700- மில்லியன் ஆண்டுகள்,முடியுமா?"