Wednesday, October 30, 2013

பல"சரக்கு"கடை 14- 30/10/2013

வணக்கம் நண்பர்களே,

                           இந்த வலைப்பூ வழியே உங்களை சந்தித்து பல நாளாகுது.நேரம் சரி வர ஒத்துழைக்கவில்லை பதிவெழுத முன்பு போல.சோம்பேறித்தனம் வேற.அப்படியே எழுத உட்கார்ந்தாலும் நண்பர்களின் பதிவுகளை படித்தபடியேயும் facebook ல் மேய்ந்தபடியேயும் நேரம் கடந்துவிடுகிறது.நேற்றிரவு ஆரூர் மூனா கனவில் வந்து மிரட்டிய பிறகே எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த பதிவன் விழித்துக்கொண்டான்.தண்ணீர் தெளிக்காமல் கண்ணை உருட்டியே மிரட்டியதால் மிரண்டபடியே எழுத துவங்கிவிட்டேன்.

எழுதாதபோது ஏதேதோ தோன்றினாலும் டைப்ப உக்காந்தவுடன் பாதி மேட்ச்ல மழை பெஞ்ச மைதானம் மாதிரி வெறுமையா இருக்கு,இருக்கவே இருக்கு நம்மகடை பல "சரக்கு" கடை(அட!தே,,,,,,,,,னட!) இதோ திறந்தாச்சு.

**************************************************************************************************************

கடந்த  இரண்டு மாதம், மூன்று சம்பவங்கள் மூன்றும் ஸ்லிப் ஆன சிதறியிருப்ப  இரகம்.

சம்பவம் ஒன்று-பைக்கில் போய்க்கொண்டிருக்கிறேன்,ஒரு குறுக்குச்சந்திலிருந்து ஒரு புது மாப்பிள்ளை  பைக்ல ரோட்டுக்கு விருட்டுன்னு வந்தார்,அதுவும் சனத்திலிருந்து நேரா பாதி ரோட்டுக்கு வந்து லெப்ட்ல திரும்பி போயிட்டே இருந்தார் ,மழை பெய்து முடிந்திருந்தால் நாற்பதில் பிரேக் அடித்தும் டயர் லேசாக இழுத்துக்கொண்டு போய் எப்படியோ நடு ரோட்டில்  சில்லறை பொறுக்க விடாமல் காப்பாற்றியது.

சம்பவம் இரண்டு-பைக்கில் போய்க்கொண்டிருக்கிறேன்,முன்னால் ஒரு புது மாப்பிள்ளை போய்க்கொண்டிருக்கிறார் கிட்டத்தட்ட ஒரு கி.மீ தூரம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அவரை பின்தொடர்ந்தே போய்க்கொண்டிருக்கிறேன் திடீரென அவரது வண்டி வலப்பக்கம் பாதி ரோட்டைக்கடந்து போனது,சரி வலப்பக்கம் கடந்து போவாரென வேகம் குறைத்து இடது பக்கம் ஒதுங்கி போனால் பக்கி திடீரென இடம் திரும்பி குறுக்குச்சந்துக்குள் கரைந்து போனது.இம்முறையும் க்ரீரீரீரீரீச்.......திரும்பிப்பார்த்ததில் இரண்டடி தூரத்துக்கு டயர் தடம்,டயரின் ஆயுளில் சில நூறு கி.மீ தூரம் குறைவது நிச்சயம்.

சம்பவம் மூன்று-அதேதாங்க,பைக்கில் போய்க்கொண்டிருக்கிறேன் இது அதிகாலை ஐந்தரை மணி ஷிப்ட்க்கு போகும்போது எதிரில் வந்த ஒரு வண்டியின் ஹெட்லைட் ஹெல்மெட் க்ளாசில் பட்டு தெறிக்க ஒரு கையால் கிளாஸை தூக்கிவிட்டதும் அதிர்ந்தேன் பத்தடி தூரத்தில் திருட்டு மணல் மாட்டுவண்டி.அதிகாலை இருட்டில் எதிரே வந்த ஹெட்லைட் வெளிச்சத்தில் வண்டி இருந்தது தெரியவே இல்லை,மாட்டுவண்டியில் reflect sticker கூட ஒட்டியிருக்கவில்லை.இந்த தடவை கொஞ்சம் அதீத க்ரீரீரீரீரீச்.....thanks to my bike Tyre.தாண்டிப்போய் மாட்டுக்கிட்ட மணல தான் கொள்ளையடிக்குற ,எங்க உயிர ஏன் எடுக்குற ஸ்டிக்கர் ஒட்டிட்டு  ரோட்டுக்கு வான்னு சொல்லிட்டு போனேன்.மாட்டுக்கு ஒரச்சு இருக்குமா தெரியல. # நிறைய விபத்துகள் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததால் நிகழ்கிறது.
***********************************************************************************************************
பிழை
 நானொன்றும் பிழையில்லாமல் எழுதுபவனல்ல,என் பதிவுகளில் உள்ள பிழைகளை என்னாலே கண்டுபிடிக்க முடியாது(தெரியாது)என் கண்களுக்கே பிழை என்று பட்டது இரு இடங்களில்.பிழைதானா?
1.ஒரு செய்தி சேனலில் மாடு முட்டி முதியோர் பலி .
2.இங்கு ஆவின் பால்கள் கிடைக்கும் 
*********************************************************************************************************
Bye bye brothers
    சச்சின்,ட்ராவிட் இருவரின் இறுதி  20-20 போட்டி என்பதால் மெனக்கெட்டு சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி பார்த்தேன்.இருவருமே க்ளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தது எனக்கு என்னமோ  மனநமகலபம(என்னாது)நெருடுதுங்க,சச்சினாவது  இரண்டு அற்புதமான பவுண்டரிகள் அடித்தார் ,அதில் ஒன்றை அடித்து விட்டு பந்து எல்லையை தொடும் வரை அடித்த பந்தை பார்த்துக்கொண்டே ஷாட் அடித்த போஸிலே நின்றார் பாருங்கள் கண்ணுலே நிக்குது ,


definitely we will miss you a lot sachin.

தொடரில் அவ்வளவாக பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும் கேப்டனாக சூதாட்ட மேகங்கள் சூழ்ந்த அணியை இறுதிவரை இழுத்து வந்து வியக்க வைத்தார் .miss you dravid.பலரின் விருப்பம் என்னோடதும் ட்ராவிட்டும் இந்தியாவில் ஒரு டெஸ்ட் விளையாடிவிட்டு ஓய்வு பெற்றிக்கலாம்.that would be a great tribute to the great wall of indian cricket.
 ************************************************************************************************************
நெஞ்சுக்கு நீதி
   குறும்பட காய்ச்சல் பதிவுலகில் பரவி வருவது ஆரோக்கியமான வெளிப்பாடு.கலக்கப்போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.நலன் குமாரசாமியின் இந்த குறும்படத்தின் இறுதியில் வரும் வெடிசிரிப்பை அடக்கமுடியவில்லை.
https://www.youtube.com/watch?v=b98kF_qxcLk
*********************************************************************************
Facebook updates
ரஷ்யா சென்ற பிரதமர் மன்மோகன்சிங் அங்கு அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கூடங்குளம் 3, 4வது அணு உலைகள் அமைத்தல் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.# ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே தெம்பில்லையாம் அவைக்கு ஒன்பது பொண்டாட்டியாம்
******************************************************************************* ***
கூகுள்ல தேடினாலும் கண்டுபுடிக்க முடியாது ஆனா நம்மாளுங்க கண்டுபுடிச்சுடறாங்கப்பா -எல்லா ஸ்பீட் ப்ரேக்கர்லயும் பைக் ஸ்பீட் குறைக்காம போறதுக்கு துக்குளியூண்டு இடம்.
**************************************************************************************
எண்ணெய் இல்லனா மயிறு கூட மதிக்காது போலிருக்கு
***************************************************************************************
எனக்கு தெரிந்து கம்யூனிசத்தை சரியாக உணர்ந்தவர்கள் பேருந்தில் தனது சைனா மொபைலில் பாட்டு கேட்பவரே!!! 
****************************************************************************************
 அப்புறம் இந்த சமூகம் கிளம்புது.நண்பர்கள்,குடும்பத்தார் அனைவருக்கும் தீபாவளி&விடுமுறை தின வாழ்த்துகள்.புது மொபைல் வாங்கணும் 10,000 மதிப்பில் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.(xoloq700 or q800 நினைத்துள்ளேன்).சனி முதல் ஆறு நாள் வரை அலுவலுக்கு விடுப்பு,நிறைய ஊர் சுற்ற வேண்டியிருக்கிறது,திருப்பூரில் ஒரு திருமணம்,முடிந்தால் சந்திப்போம் வீடு மாம்ஸ்.புது மொபைல் வாங்கிவிட்டால் இணையசேவை தொடரும்.சந்திப்போம் நண்பர்களே!
*****************************************************************************************
 நட்புடன்,
ம.கோகுல்
 

மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 14- 30/10/2013"

Thursday, August 1, 2013

சென்னை பதிவர் சந்திப்பு 2013 - முக்கிய அறிவிப்பு

பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர்  சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியமான சந்திப்பாக அது அமைந்தது.அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பல பதிவர்கள் மீளவில்லை.அதற்குள் இந்த வருட பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.

சென்ற ஆண்டு இந்த மாபெரும் சந்திப்பை முன் நின்று நடத்திய அதே குழுதான் இந்த சந்திப்பையும் நடத்த முன் வந்துள்ளது.சென்ற ஆண்டைப் போலவே முகவும் சிறப்பாகவும், பதிவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இந்த சந்திப்பு அமைய குழு நண்பர்கள் வார வாரம் சந்தித்து ஆலோசனை செய்து திட்டங்களை வகுத்து அதன் பேரில் செயல்படுத்தி வருகிறோம்.இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பெற்று வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த சந்திப்பிற்கு ஏற்படுத்தப் பட்ட குழு விபரங்களை இங்கே காணலாம்.

சென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த வருடம்  பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி


ஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.


இதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
நூல் வெளியீடு:

கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். அவ்வாறு நூல்
வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 05.08.2013 க்குள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.


(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது)




வருகைப் பதிவு:

கடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே  வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.
கீழ்க்காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.


                                                -       ஆரூர் மூனா செந்தில்   – senthilkkum@gmail.com
·         அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
·         சிவக்குமார் மெட்ராஸ்பவன் – madrasminnal@gmail.com
·         பிரபாகரன் பிலாஸபி(சென்னை) -nrflyingtaurus@gmail.com
·         தமிழ்வாசி பிரகாஷ் மதுரை -thaiprakash1@gmail.com
·         சதீஷ் சங்கவி கோவை-sat10707@gmail.com
·         வீடு சுரேஷ்குமார் திருப்பூர்-sureshkumar.artist@gmail.com
·         கோகுல் மகாலிங்கம் பாண்டிச்சேரி-gokul304@gmail.com
·         தனபாலன் - திண்டுக்கல்-dindiguldhanabalan@gmail.com

நன்கொடை:





இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள்  மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்..பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து  தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

மேலதிக தகவல்கள் அடுத்த பதிவில் வெளியாகும்..பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து  தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.(இதே பதிவை அப்படியே நகலெடுத்து பதியவும் செய்யலாம்)
 
விழா  குறித்த தகவல்களை  அறிய 
 தமிழ்பிளாக்கர்ஸ் இன்ஃபோ என்ற வலைத்தளத்தில் இணைந்திருங்கள்.



                                                                                                                              மகிழ்ச்சியுடன்

                                                                                                                              நிர்வாகக் குழு
மேலும் வாசிக்க "சென்னை பதிவர் சந்திப்பு 2013 - முக்கிய அறிவிப்பு"

Saturday, July 20, 2013

மயிலானவளுக்கு........,


மயிலானவளுக்கு..............

                     என்ன பண்ணிட்டு இருக்க மயிலு?நான் கேக்குறது உனக்கு கேக்குதா?

                                         இப்படித்தான் இப்போதெல்லாம் நீ என்ன பண்ணிட்டு இருக்க?என்ன நினைச்சிட்டு இருப்ப?னு உன்னைப்பற்றிய நினைவுகளுடனே நேரம் நகர்கிறது.எதிர்பார்த்த பிரிவுதான்,ஆனால் நான் விரும்பாதது நீ விரும்பியது.பின்னே பேறு காலத்தில் தாயாகப்போகும் காலங்களில் தாயின் அரவணைப்பிலிருக்கதானே நினைப்பாய்.நீ உடனிருக்கும்போது அப்போதைய வாழ்க்கைதான் வாழ்ந்தோம்.கடந்து சென்றவைகளைப்பற்றி நினைத்துப்பார்க்க நேரமில்லை இப்போது அதற்கான நேரம்.........


                           நான் ஏன் உன்னை மயிலென்று அழைக்க ஆரம்பித்தேன் என நினைத்துப்பார்க்கிறேன்.உனக்கும் எனக்குமான பரிமாறல்கள் எல்லாமும் ஒரு மாலை நேர மழைக்குப்பின்னான இதமான தேநீரின் முதல் மிடறினைப்போல மெல்ல,மெல்ல அந்த கணத்தினை நோக்கி பயணப்பட துவங்குகிறேன்.



     மணமுடித்து என்னுடன் வருகையில் உன் அப்பா,அம்மாவை அணைத்தழுத பொழுது இல்லாத உணர்ச்சி வளையலணிந்து என் கையழுத்தி போய்டு வரேன் என சொன்ன போது தாயுமான உணர்வளித்தாய்.இங்கேயே இருந்து விடேன் என்ற போது ,"ம்ம்ம்,அஸ்கு ,புஸ்கு எங்க அப்பா அம்மா எப்படி கஷ்டப்பட்டிருப்பாங்க,நீயும் கொஞ்ச நாள் படு" என சொல்லி கண்ணால் விடை பெற்று சென்றாய்.


        அன்றொருநாள் பரிசோதனைக்கு மருத்துவமனை போயிருந்தபோது மருத்துவர் வர சற்று நிறையவே தாமதமாக அத்தனை பேர் இருக்க என் தோளில் சாய்ந்து உறங்கிப்போனாய்.ஆனால் அன்று என்னைப்பொறுத்தவரை நீயும் நானும் மட்டும் அங்கே.இவன் எனக்கானவன் என்ற உரிமையில்,திமிருடன் உறங்கிய உன்னை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன்.காதலில்,
                                                               
தனிமை பிடிக்கும்
தானாய்ப் பேச வைக்கும்
சிந்திக்க வைக்கும்
                                                      சிறகு முளைக்கும்
எனக்கு  முளைத்தது அன்று.



எப்போதாவது கோபமாக இருக்கும் போது உன்னை மயிலுக்கு லு'னாவுக்கு பதிலாக று'னா போட்டு வெடுக்கென்று போடி என்பேன்.அப்போது ஏதும் சொல்லாமல் மகிழ்வோடு பகடி செய்துகொண்டிருக்கையில் கோவமா இருக்கும்போது மயிலுன்னு கூப்பிடாம வேற மாதிரி கூப்பிடுவியே அந்த மாதிரி கூப்பிடு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பாய்.பொய்யாய் கோபித்து உன் ஆசையை நிறைவேற்றுவேன் செல்லமாய் அணைப்பாய்.நினைத்துப்பார்க்கையில்.....
                
உறக்கம் அகலும்
உணவு கசக்கும்
கவிதை எழுதச் சொல்லும்
                        கனவு காணச் சொல்லும்     

பள்ளிக்காலங்களிலே உன்னை நானும்,என்னை நீயும் அறிவோம்.இறுதி வரை இணைந்தே வாழப்போகிறோம் என அப்போதே அறியோம்.அப்பவே மயிலென்று உன்னை அடையாளப்படுதிக்கொண்டேன் என்னுள்.அந்த சமயத்தில் அதைப்பற்றியெல்லாம் உன்னிடம் சொல்லியிருந்தால் இப்படி இணைந்திருப்போமா என்பது ?யே.அப்போது என்னிடத்திலும் காதலில்லை உன்மேல்,ஆனால் நீயென்றால் கொஞ்சம் சிறப்பு எனக்கு.சேலத்து மாம்பழம் விளைவது அங்கல்ல,ஆனால் அந்த பெயர் மாம்பழத்திற்கு சிறப்பு அதைப்போல் நீ எனக்கு.
எதற்கு இருக்கிறார்கள் நண்பர்கள் இதையெல்லாம் சொன்னால் ஏதாவது கட்டுக்கதை கட்டி முதுகில் டின்னையும் கட்ட வைத்துவிடுவார்கள்.

கல்லூரியில் கேட்கவே தேவையில்லை ஈரை பேனாக்கி பேனை பெரியப்பாவாக்கினார்கள் நண்பர்கள்,ஆம் நமக்குள்ளிருந்த நட்பினை பேசிப்பேசியே காதலாக்கிவிட்டார்கள் காதல் பக்குவமறியாது என்பர்.அதை எனக்கு பொய்யாக்கி காட்டினாய் நீ.இணைந்து வாழத்தான் காதல் அதற்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணு என சர்வ சாதாரணமாக ஒற்றை வார்த்தையில் எனக்கு எல்லாம் புரிய வைத்தாய்.அதுவரை காதல் என்னுள் .........
                      
ஹார்மோன்களைத்
தூண்டிவிட்டு
ஹார்மோனியம் வாசிக்க விட்டு
                        வேடிக்கை பார்த்திருந்தது

 ஹார்மோன்களை அடக்கி,ஹார்மோனிய வாசிப்பை நிறுத்தி சிந்திக்க வைத்தாய்.பின்னொரு நாள் உன் அப்பாவிடம் வந்து என் மயிலை என்கிட்டே குடுத்துடுங்க என உரிமையோடு கேட்ட போது  மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டியபோது நீ என்னைப்பார்த்து புன்னகைத்தபோது 
கவிதைகளாய்  சொல்ல தோன்றியது,உங்கப்பாவைபார்த்ததும் எங்கே யோசிக்க ஆரம்பித்து விடுவாரோ என எண்ணி பிறகு அதையெல்லாம் உன்னிடம் சொல்லிக்காண்பித்தேன்.


'உன்னை எப்ப இருந்து மயிலுன்னு கூப்பிட ஆரம்பிச்சேன்னு உனக்கு தெரியுமான்னு உன்கிட்ட ஒரு முறை(நீ தப்பாதான் சொல்லுவனு தெரிஞ்சே) கேட்டப்போ,எங்க அப்பா ஒத்துக்கிட்டப்பறம் நாம பேசிட்டு இருக்கும்போதுனு சொன்ன.அன்னிக்கு தான் உன்கிட்டயே சொன்னேன்.இது நாம பனிரெண்டாவது படிக்கறப்போவே நான் உனக்கு வைச்ச பேர் அப்படின்னு.அடப்பாவி இப்போத்தான் எனக்கும் நியாபகத்துக்கு வருது என இணைந்தே அந்த தருணத்தை நினைவு கூர்ந்தோம்.


          அது விலங்கியல் பாடவகுப்பு ஆசிரியர் ஒவ்வொரு விலங்கினத்தின் அறிவியல் பெயர் சொல்லி அந்த விலங்கினத்தில் பெயரை கேட்டு வந்தார் என் முறை வந்தது பாவோ க்ரிஸ்டேட்ஸ்(Pavo cristatus) இது எந்த உயிரினத்தின் பெயர் என்றார்.இந்தியாவில் இந்த பறவை மிகச்சிறப்பு என குறிப்பு வேறு தந்தார் வகுப்பறையில் அனைவரது தூக்கத்தை கலைத்த பதிலாக காக்கா என்றேன்.நீயும் சிரிக்கிறாயா என பார்த்த போது ஏதோ ஒரு புத்தகத்திலிருந்த மயில் படத்தை காட்டினாய்.இது போதாதா.வேறேதும் காரணமும் வேண்டுமா?

             இதை சொன்னதில் இருந்து எனக்கான செல்லப்பெயரையும்  அந்த நிகழ்விலிருந்தே வைத்தாய் அந்த ஆசிரியர் உன்னைப்போய்  Bos gaurus    -  ன் பெயர் என்ன என்றா கேட்க வேண்டும்,அதற்கு உனக்கு விடை தெரியாமல் என்னைப்பார்க்க,என் நேரம்.......ம்ம்ம்.இதற்கு நான் அந்த பெயரை உனக்கு வைக்காமலே இருந்திருக்கலாம்.

இனி  இப்படித்தான் நீ வரும் வரை,எத்தனை கடிதங்கள் எழுதப்போகிறேனோ?நீயும் இப்படித்தான் எழுதிகொண்டு,நினைதுக்கொண்டிருக்கிறாயா?ஓ!உனக்குத்தான் பகிர்ந்துகொள்ள ஒரு உயிர் இருக்கிறதே.பகிர்ந்து கொள்.நீ என்னென்ன நினைக்கிறாயென
நான் பிறகு கேட்டு தெரிந்துகொள்கிறேன்.அது வரை
                        

ஊனை உருக்கும்
உயிரைக் கரைக்கும்
காலம் மறக்கும்
                           காத்திருக்கச் சொல்லும்
 உன் காதல்.

ப்ரியமுடன்
கோகுல்.
 

 
மேலும் வாசிக்க "மயிலானவளுக்கு........,"

Tuesday, July 9, 2013

பல"சரக்கு"கடை 13- 09/07/2013




நோ கமெண்ட்ஸ்

இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை என சில பழைய சஞ்சிகைகளில் துணுக்குறும் புகைப்படங்கள் இருக்கும்.அந்த வகையில் நோ கமெண்ட்ஸ் சொல்ல வைக்கும் சமீபத்திய செய்திகள் சில.

                                                           [ இதுக்கும் நோ கமெண்ட்ஸ்]

#மன்மோகன் சிங் போனை அமெரிக்க உளவுதுறை ஒட்டு கேட்டனர்.

# எங்கள் கட்சியின் வாக்குகளை வீணாக்க விரும்பவில்லை. அதனால் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்-மனித நேய மக்கள் கட்சி&டாக்டர் கிருஷ்ணசாமி.

# 3900 ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய உதவிகள் போகவில்லை. அது ஒன்றுதான் எனக்கு மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது-விஜய்


எரிகிற வீட்டில்...

எந்த மாதிரியான சூழலில் வாழ்கிறோம் நாம் என நிறைய பேர் கேட்பதுண்டு,இந்த கேள்வி கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்ட உத்ராகண்ட்டில் நிகழ்ந்த,அது தொடர்பான  சம்பவங்களை பார்க்கும் போது சற்று சத்தமாகவே கேட்கிறது.உட்சம்-சில ஆந்திர மக்களை மீட்டு அழைத்து செல்வதில் தெலுங்கு தேசத்துக்கும் ஆந்திர காங்கிரசுக்கும் குடுமிப்பிடி சண்டை.அதிர வைக்கும் உணவு,தண்ணீர் விலை,கொள்ளை,பாலிய; துன்புறுத்தல்கள் என ஊடகங்களில் வந்து கொண்டிருக்கையில் உரக்க கத்தி கேட்டுக்கொள்ளுங்கள் அந்த கேள்வியை
எந்த மாதிரியான சூழலில் வாழ்கிறோம் நாம்????????????????

டாக்டர்  பட்டம் தேடிப்பாத்து.............,

"டாக்டர் பட்டமா?எனக்கா? நான் என்னத்த பண்ணிட்டேன்னு என்கிட்டே வந்திருக்கீங்க.நாட்டுல எத்தனையோ விஞ்ஞானிகள்,அறிவாளிகள்,படிப்பாளிகள் இருக்காங்க அவங்களுக்கு பொய் கொடுங்க.எனக்கு குடுக்க நான் ஒத்துக்கவே மாட்டேன்"-காமராஜர்

# நீங்க யாரையாவது நினைச்சு படிச்சா நான் பொறுப்பேற்க முடியாது.

 
விளையாட்டா.....


பெடரர்,நடால்,ஷரபோவா,செரீனா ஆரம்ப சுற்றுகளிலே நடை கட்ட எதிர்பார்ப்பு சற்று குறைவாகத்தான் இருந்தது,ஜோகோவிச்சும்,லிசிக்கியும் அவ்வப்போது பார்க்க வைத்தார்கள்,இறுதியில் நான் எதிர்பார்த்திருந்த இருவரும் கோட்டை விட்டனர்,.இந்த நேரத்தில் எனக்கு சட்டென்று நினைவில் வந்தது ஆஸ்திரேலிய ஓபன்-2010 இறுதியில் அவர் தோற்றபோது பேச இயலா தருணம்,

https://www.youtube.com/watch?v=ZuSzqcdJkeM

அதற்கு முந்தைய ஆஸ்திரேலிய ஓபன்-2009-ல் பெடரர் தோற்றிருப்பார் அவரது தருணத்தையும் நினைவு கூர்ந்து ஜோகர் பேசியிருப்பார். நெகிழ்வான தருணங்கள்.,
https://www.youtube.com/watch?v=dCjw0Unm8OY
நேரமிருந்தால்  பாருங்கள்.


*கிரிக்கெட்  நான் பார்க்க ஆரம்பித்த காலங்களில் இந்திய அணியில்சிலர் முரட்டு மீசையுடன்இருப்பார்கள்,மீசையுடன் ஸ்ரீநாத்,கும்ப்ளே பந்து
,வீசுவதும்,அசாருதீன் பேட்டிங்( இதை டைப் செய்யும் போது பெட்டிங்னு தான் வந்தது முதலில்-காரணம் நானறியேன் பராபரமே) செய்வதும் நம்ம அப்பா,மாமா,சித்தப்பா விளாட்ற மாதிரி ஒரு ஃபீலிங் குடுக்கும்,அப்றமா ரொம்ப நாள் மீசை வழித்த அங்கிள்ஸ் விளையாடும் காலத்தில் மீசை முறுக்கி வந்திருக்கிறார்கள் ஷிகர் தவானும்(இப்போ இவர் இந்தியா டீம்ல ஸ்டிக்கர் தவான்),ரவீந்தர் ஜடேஜாவும்(மன்னிக்கவும்) சர்-ஐமறந்துவிட்டேன்.Take care that your mustache from soil( no bad words).

எனது ஆலோசனை

பதிவர் சந்திப்பு-2013ற்காக  ஆலோசனக்கூட்டங்கள் ஆர்வமாக முழுமூச்சில் நடந்து வருகின்றன,தூரம் காரணமாக கலந்து கொள்ள முடிவதில்லை.எனது யோசனை ஒன்று-வாய்ப்பிருந்தால் பரிசீலிக்கவும்.கடந்த வருடம் மூத்த  பதிவர்களுக்கு விருதளித்து பெருமைப்படுத்தியது போல,இவ்வருடம் அவர்களோடு சேர்த்து சிறந்த இளம்பதிவர் (அ) பதிவர்கள் விருது(கள்) வழங்கலாம் என்பதே அது.கடந்த வருடம் யூத் பதிவர் சந்திப்பில் எனக்கு வழங்கினார்கள்.இந்த வருடம் அது போல் இதுவரை யூத் பதிவர் சந்திப்பு நிகலாததால் இது எனக்கு தோன்றியது.பதிவுலகில் பதிவுகள் குறைந்து வரும் நேரத்தில் இளம் பதிவர்கள் தொடர்ந்து எழுத ஊக்கமாக இருக்கும் என நினைக்கிறேன்.

Facebook-ல் பகிர்ந்தவை

# நாம இந்த உலகத்துக்கு ஏதாவது சொல்ல நினைக்கும் போது இந்த உலகம் நம்மைப்பாத்து சொல்வது எல்லாந்தெரியும் மூடிட்டு படுங்கடா நொன்னைங்களா

# மகளைப் பெற்ற அப்பாவுக்குத்தான் தெரியும் பல்டியில் எத்தனை வகை உள்ளது என்று.

போத்தீஸ் மாதிரியான கடைகளில் இப்போ அன்பளிப்பா(?) மரக்கன்றுகள் கொடுத்துட்டு வராங்க,நல்ல விசயம் தான்,ஏதாவது குறை சொல்லலைன்னா நமக்குத்தான் தூக்கம் வராதே,

                                                              [நம்ம வீட்டு தக்காளி]

குறை என்னான்னா,இப்படி ஏப்ரல்,மே,ஜூன்ல கத்திரி வெயில் பட்டய கிளப்புற காலங்களில் கொடுக்காம மழை கண்ணைக்காட்டும் காலங்களில் கொடுத்தால் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.ஏன் சொல்றேன்னா வீட்ல இருக்க செடிங்களே ஒரு ரெண்டு நாள் ஊருக்கு போயிடு வந்து பாத்தா வள்ளலாரை நியாபகப்படுத்துதுங்க.இதுல புதுசா வைக்குற செடி தாக்குப்பிடிக்கும் வாய்ப்பு கொஞ்சம் கம்மிதான்.அதனாலதான்....‎#அப்பாடா இன்னிக்கு நிம்மதியா தூங்கலாம்.( இப்போ மழை பெய்யுது இவங்க ஆடி,ஆவணினு அவங்க வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டாங்க)



நட்புடன்
ம.கோகுல் 

மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 13- 09/07/2013"

Wednesday, June 5, 2013

சுற்றுச்சூழல்-நம்மால் என்ன முடியும்?

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்,
சுமார் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றிய கவலைகள் நம் எல்லோரிடையே இருந்து வருகிறது.நாம் தான் கவலைப்பட்டாக வேண்டும்,நம்மால் தானே பிரச்சினையே!ஒரு தொழில்நுட்பம் வந்தால் அதை அளவுக்கதிகமாக அரவணைத்து, அடிமையும் ஆகி இறுதியில் அந்த வசதி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு ஆகிவிடுகிறோம்.
அதற்கு  சரியான உதாரணம் ப்ளாஸ்டிக்.இன்றைக்கு பிளாஸ்டிக் ஒழிப்போம் என்பதைக்கூட ஒரு ப்ளக்ஸ் போர்டு அடித்து தான் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய முடியும் என்கிற அளவுக்கு ஆகி இருக்கிறது.

நம்மால் என்ன செய்ய முடியும்?
இதோ..........





பல நேரங்கள்ல சாப்பிட போகும் போதோ,இல்ல மத்த நேரங்கள்ல கை கழுவுற சமயங்கள்ல என்ன பண்றோம்,தண்ணியை தொறந்து விட்டுட்டு கைய நனைச்சிட்டு சோப்பு போட்டு தேய்க்குறவரைக்கும் தண்ணி அது வாக்குல போய்க்கிட்டே இருக்கும்.கையை நனைச்சிட்டு சோப்பு போடுறவரைக்கும் தண்ணியை நிறுத்தலாமே!ஒரு அரை லிட்டர் தண்ணி மிச்சமானாலும்.............
இதே மாதிரி தண்ணி கசிவு இருக்குற பைப் ஏதாவது இருந்தா உடனடியா சரிசெய்வதும் பல லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தும்(யோவ் மெட்ராஸ் மாதிரி ஊருல தண்ணி கிடைக்குறதே கஷ்டமா இருக்கு இதுல நாங்க ஏங்க வீணாக்க போறோம்னு கொஞ்சம் பேரு கேக்குறாங்க போல)
 இது ஒரு சின்ன உதாரணம் இதைப்போல பல தருணங்களில்(காய்கறி கழுவுகையில்,பிரஷ் பண்ணும் போது), பல அரை லிட்டர்கள் வீணாவதை தவிர்க்கமுடியும்.முடியுமா?


அப்புறம் மின்சாரம்.இல்லாத விசயத்த பத்தி என்ன பேச்சு அப்படிங்கறீங்களா? அது தெரிஞ்ச விஷயம் தானே.சரி இருக்கறப்போ என்ன பண்ணலாம்.முக்கியமா வீட்டுல ஏதாவது குண்டு பல்ப் இருந்தா அதுக்கு குட்பை சொல்லுவோம்.இது மின்சார சிக்கனத்துக்கு மட்டுமில்ல உலக வெப்பமாதல் குறையவும் நிறைய உதவும்.பிளான் பண்ணி எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பயன்படுத்தினாலே இன்னும் கொஞ்சம் மின்சார செலவு கொறையும்.(இன்னும் கொஞ்ச நாள்ல கரண்ட் சார்ஜ் உயர்த்தப்படும் போது ஆட்டோமேட்டிக்கா கொறையும்னு நினைக்கிறேன்)முக்கியமா ஏ.சியை சில்லுன்னு வைச்சு யூஸ் பண்ணாம 27-29 டிகிரி செல்சியஸ்ல பயன்படுத்துறது நல்லது(உடம்புக்கும்).

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் பெட்ரோலியபொருட்கள், பெட்ரோல்,டீசல்,சமையல் கேஸ் தவிர நாம தினமும் பயன்படுத்துற நிறைய பொருட்கள் பெட்ரோலியத்தோட வழித்தோன்றல்கள் தான்( by products)கிட்டத்தட்ட 5000 க்கும் மேல. http://www.ranken-energy.com/Products%20from%20Petroleum.htm (இந்த லின்க்ல பாத்தா தெரியும்).இந்த எல்லா பொருட்களையும் தேர்ந்தெடுத்து யூஸ் பண்றத குறைப்பது கஷ்டமான விஷயம்,நேரடியா நம்மால முடிஞ்சா அளவு சிக்னல்ல நிக்கும் போது என்ஜின் ஆஃப் பண்றது,தேவையில்லாம வண்டி எடுத்துக்கிட்டு சுத்துறத தவிர்க்கறது,திட்டமிட்ட பயணம்,குழுவா பயணிக்கறது,இது போல செய்யலாம்.இதே மாதிரி சமையல் கியாஸ் பயன்படுத்தும் போதும் திட்டமிட்டு செஞ்சா நிறைய மிச்சப்படுத்தலாம்.கியாஸ் மிச்சப்படுத்த சில டிப்ஸ்(கிளிக்கவும்)


இப்படியெல்லாம் பண்ணா எனக்கு என்ன பயன் அப்படின்னு கேக்குறவங்களுக்கு-இந்த உலகத்தின் கடைசி துளி தண்ணீர் ,கடைசி சொட்டு பெட்ரோல்,கடைசி மணித்துளி மின்சாரம் நீங்க மிச்சப்படுத்தியதா இருக்கும்.அந்த பெருமை உங்களுக்குத்தான்.


இன்னும் செய்ய வேண்டிய விஷயம் இன்னொன்று இந்த பதிவுகளில்
நெகிழா நெகிழி!!!   
விட்டுப்போவது எதை?  

இவற்றை செய்தால் மட்டும் போதுமா?
ஒன்றுமே செய்யாமலிருப்பதற்கு இவை கொஞ்சம் பரவாயில்லை.



-பட்டி ,டிங்கரிங் பார்க்கப்பட்ட பழைய பதிவு.
   
மேலும் வாசிக்க "சுற்றுச்சூழல்-நம்மால் என்ன முடியும்?"

Monday, April 1, 2013

மாணவர் போராட்டம்-இப்போதும் இணையாத தமிழக கட்சிகள்

உலகின் பார்வையை சற்றே தமிழகத்தின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருப்பதில் வெற்றியடைந்துள்ளது தமிழக மாணவப்பருவத்தினரின்  ஈழம் குறித்த போராட்டங்கள்.மாணவப்பருவத்தில் அவர்களுக்கேயுரிய துடிப்பை இத்தனை நாட்களாக கல்வி,சினிமா,பொழுதுபோக்கு,விளையாட்டு,காதல் மற்றும் சில பல விதங்களில் மட்டுமே பார்த்து வந்த நமக்கு இந்த போராட்டம் இந்திய அரசியலை புருவம் உயர்த்தி பார்க்க வைத்திருக்கிறது.


நினைத்துப்பார்க்கையில் அவர்களை துடிக்க வைத்து போராட்டத்தில் குதிக்க வைத்தது யார்?ஆதாயம் தேடியே அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளால்தான்,அவர்கள் மேலுள்ள கோபம் தான்.நீங்க செய்ய வேண்டியதைத்தாண்டா நாங்க படிப்பை விட்டுட்டு செஞ்சுட்டு இருக்கோம் என்ற கோபம் சில அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்து பேச வந்த போது பேச மறுத்து திருப்பி அனுப்பியதிலிருந்து தெரிகிறது.

இதற்கு முன் மாணவர் போராட்டம் என்றால் பஸ்டே,கல்லூரிகளுக்கிடையில் வரும் மோதல் போன்ற சில போருக்கித்தனங்கல்தான் மக்கழ்மனத்தில் வந்து நிற்கும்.இன்று தமது இன மக்களுக்காக முழு மூச்சாக போராடும் பாங்கு வீரவணக்கம் கொள்ள செய்கிறது.இத்தனை பயன்படுத்தி ஓட்டரசியல் செய்யத்துடிக்கும் அரசியல்வாதிகளை உங்கள் கற்பனையில் எண்ணியாவாறெல்லாம் திட்டிக்கொள்ள அனுமதிக்கிறேன்.


எனக்கு நெடுங்காலமாக ஒரு சந்தேகம் இருக்கிறது.எனக்கு அரசியல் அனுபவம் சற்றே குறைவுதான்.அனுபவமிக்கவர்கள் சொல்லுங்கள்.ஆளுங்கட்சியாக இருந்தாலும்,எதிர்க்கட்சியாக இருந்தாலும்,அதிரி புதிரி கட்சிகளாகட்டும் மக்கள் பிரச்சினைக்காக போராடுகிறேன் என்கிறீர்கள்.ஒன்று பிரச்சினை வருவது இங்கே இருந்து என்றால் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக்கொள்வது,குறைகூறிக்கொள்வது,தூற்றிக்கொள்வது என்ன இழவு வேண்டுமானால் செய்து கொண்டு போங்கள்.



          
                                      [நன்றி-http://avargal-unmaigal.blogspot.in]

ஆனால் பிரச்சினை வருவது வெளியே இருந்து என்றால்,அதாவது வெளிமாநிலம் அல்லது மத்திய அரசிடமிருந்து என்றாலும் கூட அதே இழவை ஏன் கூட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.உங்கள் கட்சியின் உண்மையான நோக்கம் மக்களின் நன்மை என்கிறீர்கள்,அப்படியானால் ஒருவரை ஒருவர் குறைகூற திட்டமிடும் நேரத்தில் எப்படியெல்லாம் போராடி நன்மை காண வழி செய்யலாம் என சிந்திக்கலாமே.,

ஒரு பிரசினைக்காகவாது இணைந்து போராடக்கூடாது என தமிழக கட்சிகளுக்கு யார் சட்டம் எழுதி வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.காவிரிப்பிரச்சினை,முல்லைப்பெரியார்,ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்,பாலாறு பிரச்சினை இது போன்ற விசயங்களில் பிரச்சினை என வரும் போது அந்தந்த மாநிலத்துக்கட்சிகள் கை கோத்துக்கிட்டுகோதாவில் இறங்கும் போது கபாடிப்போட்டியில் எல்லோரும் அவுட்டாகிவிட தனியே ரெய்டு வருபவரை எதிர் கொள்ளும் வீரனைப்போல அப்பாவியாய் நானும் போராடுகிறேன் என பேசுவது உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை?


                                         [நன்றி-http://avargal-unmaigal.blogspot.in]
சரி,உங்கள் எல்லோருக்கு ஒரே ஒரு கேள்வி.எந்த பிரசினைக்காகத்தான் நீங்கள் எல்லோரும் இணைந்து போராடுவீர்கள்?ஒற்றுமையே வலிமை,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என உங்கள் பிள்ளைகளுக்கல்ல,நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.இப்போது தான் நேரம் கூடியிருக்கிறது.நமது இனத்திற்காகவாவது இணையுங்களேன்.ஒட்டு மொத்த மாணவர்களது கூட்டு குரலுக்கே திரும்பிப்பார்த்த உலகம் ஒரு மாநிலத்தின் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து கூப்பிட்டால் என்ன வேண்டும் உங்களுக்கென்று கேட்காமலா போய்விடும்????


அதுதான் உங்களுக்கென்று ஒரு தாரக மந்திரம் இருக்கிறதே தேர்தலுக்கு தேர்தல் ஒரு உணர்ச்சிகரமான சந்திப்புக்கு பின் சொல்லுவீர்களே ஓட்டுப்பொறுக்க  "அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்று இல்லை"என்று அதை ஒரு முறையாவது மக்களின் நன்மைக்கு பயன்படுத்தினால் உங்க கொள்கைக்கு இழுக்கு ஏதாவது வந்திடுமோ? ,இல்லை அது முடியாது,நாங்கள் செய்த தியாகம் என்ன?எங்கள் வரலாறு என்ன?நாங்கள் அப்படியெல்லாம் இணைய மாட்டோம் என்றால்,இன்றைய சூழ்நிலையில் மக்களின் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.,அது மௌனம் பேசியது படத்தில் சூர்யா கதாபாத்திரம் கேட்குமே,நீங்கல்லாம் காதலிச்சு கல்யாணம் பண்ணி மயிரவா புடுங்கப்போறீங்க??,இங்கே காதலிச்சு,கல்யாணம் பண்ணி என்ற இடத்தில் கட்சி நடத்தி போராட்டம் பண்ணி என போட்டுக்கொள்ளவும்.  
மேலும் வாசிக்க "மாணவர் போராட்டம்-இப்போதும் இணையாத தமிழக கட்சிகள்"

Tuesday, March 5, 2013

ஜஸ்ட் மிஸ்ஸா?-அலட்சியம் வேண்டாமே


உன் வாழ்க்கை உன் கையில்,இது பாட்ஷா படத்தில் ரஜினி ஓட்டும் ஆட்டோவில் எழுதியிருந்த தத்துவம்,பன்ச் டையலாக் அட ஏதோ ஒண்ணு. விடுங்க விஷயம் என்னன்னா மார்ச் 4 தேசிய பாதுகாப்பு தினம்.நம்ம ஊர்ல தான் காதலர் தினத்தன்னைக்கு மட்டும் காதலை பத்தியும்,மகளிர் தினத்தில் மட்டும் மகளிர் குறித்தும் இன்ன பிற தினங்களில் அந்தந்தவற்றைப்பற்றியும் சிந்திப்பது,எழுதுவது,பொங்குவது ஏனைய பிற உணர்வுகளை காட்டுவதும் வேடிக்கையான வாடிக்கையாகிவிட்டது.ஒரு விதத்தில் யோசித்தால் இது போல அவற்றை(களை)யெல்லாம் அந்தந்த தினங்களிலாவது உணர்ந்து பார்க்க வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சியே.


என்ன?சரி,சரி சொல்ல வந்த மேட்டரை சொல்டு இடத்த காலி பண்ணவா?ஓகே விஷயம் மேட்டர் இதாங்க,ரஜினி பட டையலாக் மாதிரி பல சமயம் அவங்கவங்க வாழ்க்கை அவங்க கைல தாங்க இருக்கு.அதென்ன பல சமயம் அப்படின்னு ட்விஸ்ட் வைச்சு சொல்றேன்னு கேட்பவர்களுக்கு,சில சமயம் நமது பாதுகாப்பை பிறர் நிர்ணயிக்கிறார்கள்.உ.தா- டிரைவர்கள்.



நமது பாதுகாப்பு நம்மை மட்டுமல்ல,நம்மை,சார்ந்தவர்கள் சுற்றியுள்ளவர்கள்,சுற்றுப்புறம் எல்லாவற்றிக்கும் நலம் பயக்கும் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.நாம தெரியாம இல்ல அலட்சியமாக செய்யும் ஒரு விஷயம் ஒண்ணு நம்மள பாதிக்கும் இல்லன்னா கண்டிப்பா யாராவது ஒருவர் அல்லது பொருள் பாதிப்புக்குள்ளாவது நிச்சயமே.
ஜஸ்ட் மிஸ்.இந்த வார்த்தையை அலட்சியப்படுதாதீர்கள்.ஒவ்வொரு முறையும் ஜஸ்ட் மிஸ் ஆகாது.விபத்து நடக்க வாய்ப்பிருந்து விபத்தில் சிக்காமல் தப்பித்தால் அது போன்ற வாய்ப்பு மீண்டும் நிகழாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ.அதை உடனே செய்வோம்.ஐந்தில் வளையாதது .........அதே தாங்க.அப்ப பெரியவங்க சொல்றது ஒண்ணு நாம செய்றது ஒண்ணா இருந்ததால இப்பவும் அப்படியே தொடருது பழக்கம்.


ஒரு வேலை செய்ய தொடங்குமுன் அதைப்பற்றி ஓரிரு கணம் யோசித்துவிட்டு நம்மால் செய்ய முடியுமா என முடிவெடுத்து பின் செய்யலாம்.தெரியாத வேலை(சரி வர கற்றுக்கொள்ளாமல்) செய்வதை நிறுத்தினாலே போதுமே.சிலசமயம் மனக்கட்டுப்பாடும் அவசியமாகிறது.எந்த பணி செய்வதாக இருப்பினும் வீட்ல கோவமா கிளம்பியோ,அலுவலகத்தை விட்டு எரிச்சலுடன் கிளம்பும்போதோ ,ஓரிரு வினாடிகள் வண்டி எடுக்குமுன் நிதானித்து அந்த உணர்வுகள் இல்லாமல் பயணத்தை தொடரலாம்.

                         

ஒவ்வொரு வேலைக்கும் அதை செய்வதற்கான சரியான பொருள்(tools) இருக்கிறது,அதே மாதிரி நிச்சயமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பணிகளுக்கு பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்துவது அவசியம்.ரொம்ப சொல்லிட்டே போற மாதிரி இருக்கு,இப்பத்தான் யோசிக்கிறேன் உண்மையிலே நம்ம முன்னோர்கள் அதிபுத்திசாலிகள்,எப்பர்ப்பட்ட விசயத்தையும் சில வரிகளில்,சில வார்த்தைகளில் சொல்லிவிடுவது வியப்பிலும் வியப்பு.இங்கே எனக்கு நினைவுக்கு வந்தது வருமுன் காப்போம்.


நாளை இருப்பது நமக்காகத்தான்,பாதுகாப்போடு வரவேற்போம்.

நட்புடன்,
ம.கோகுல்.
மேலும் வாசிக்க "ஜஸ்ட் மிஸ்ஸா?-அலட்சியம் வேண்டாமே"