Showing posts with label ஏக்கம். Show all posts
Showing posts with label ஏக்கம். Show all posts

Saturday, September 3, 2011

எங்கே போய் சொல்ல?






பூகம்பத்தில் இடிந்து விழுந்தது
வீடு கட்ட வாஸ்து பார்க்கும்
வாஸ்து நிபுணர் வீடு!

அடுத்தவரின் எதிர்காலத்தை
கணிதுக்கூறும் சோதிடருக்கு
அடுத்த வேளை உணவில்லை!

அம்பாளை பூஜிக்கும் அர்ச்சகர் வீட்டில்
அடுப்பு எரியவில்லை
ஐந்து நாட்களாக!

வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால்
தற்கொலை செய்து கொண்டார்
அதிர்ஷ்டக்கல் வியாபாரி!

பட்டப்பகலில் வீடு புகுந்து
துணிகரக்கொள்ளை
போலிஸ்காரர் வீட்டில்!

எல்லை காத்து நிற்கும்
இராணுவவீரன் வயலில்
வரப்புத் தகராறு!

தவறுகளை மாணவர்களுக்கு
சுட்டிக்காட்ட வேண்டிய ஆசிரியரே
தம் அடித்துக்கொண்டிருக்கிறார்!


எங்கே போய் சொல்ல?


மேலும் வாசிக்க "எங்கே போய் சொல்ல?"

Sunday, August 28, 2011

வண்ணமிட்டும் விழி திறக்கா ஓவியம்!!!












இந்தியா!
பலர் வண்ணமிட்டும்
இன்னும் விழி திறக்கா
ஓவியமாகவே உள்ளது!

 காந்தியடிகள் தீட்டிய
அகிம்சை வண்ணம்
அழிந்து விட்டது இன்று!

காமராஜர் இட்ட
நேர்மை வண்ணம்
நெறி கேட்டு விட்டது!

பாரதி வரைந்த
புதுமைப்பெண் வண்ணம்
புலனற்று விட்டது!

விவேகானந்தர் உருவாக்கிய
உழைப்பு வண்ணம்
உறங்கிக்கிடக்கிறது!

அம்பேத்கர் செய்த
தீண்டாமை வண்ணம்
திக்குமுக்காடுகிறது!

தியாகிகள் சிந்திய
தியாக வண்ணம்
தீக்கிறையாகிவிட்டது!

அறிவியலார் செய்த
அறிவியல் வண்ணம்
ஆரோக்கியமற்று விட்டது!

அரசியலார் செய்யும்
ஊழல் வண்ணமோ
ஓவியதையே பாழாக்குகிறது!


அப்துல்கலாம் காணும்
கனவு வண்ணம்
கனவாகவே உள்ளது!


இந்தியா!
பலர் வண்ணமிட்டும்
இன்னும் விழி திறக்கா
ஓவியமாகவே உள்ளது!




                     


விரைவில் விழிதிறக்கும் 
என்ற நம்பிக்கையுடன்...........


புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ் மற்றும் இணையங்கள்                    
மேலும் வாசிக்க "வண்ணமிட்டும் விழி திறக்கா ஓவியம்!!!"

Sunday, July 31, 2011

துரோணர்கள் தொலைந்துவிட்டார்கள்!!!






அன்று!
விவேகானந்தர் கேட்டார்
நூறு வலிமையான
இளைஞர்களைத்தாருங்கள்
வலிமையான பாரதத்தைப் படைக்கிறேன் என்று!



இன்று!
நூறு லட்சம் இளைஞர்கள் கேட்கிறோம்
ஒரு விவேகானந்தரை காட்டுங்கள்
வலிமையான பாரதத்தை
படைத்துக்காட்டுகிறோம்!





ஆம்!
இன்று ஏகலைவன்களுக்கு
பஞ்சமில்லை துரோணர்கள் தான்
தொலைந்துவிட்டார்கள்!!




மேலும் வாசிக்க "துரோணர்கள் தொலைந்துவிட்டார்கள்!!!"