Showing posts with label கேள்வி. Show all posts
Showing posts with label கேள்வி. Show all posts

Saturday, September 3, 2011

எங்கே போய் சொல்ல?






பூகம்பத்தில் இடிந்து விழுந்தது
வீடு கட்ட வாஸ்து பார்க்கும்
வாஸ்து நிபுணர் வீடு!

அடுத்தவரின் எதிர்காலத்தை
கணிதுக்கூறும் சோதிடருக்கு
அடுத்த வேளை உணவில்லை!

அம்பாளை பூஜிக்கும் அர்ச்சகர் வீட்டில்
அடுப்பு எரியவில்லை
ஐந்து நாட்களாக!

வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால்
தற்கொலை செய்து கொண்டார்
அதிர்ஷ்டக்கல் வியாபாரி!

பட்டப்பகலில் வீடு புகுந்து
துணிகரக்கொள்ளை
போலிஸ்காரர் வீட்டில்!

எல்லை காத்து நிற்கும்
இராணுவவீரன் வயலில்
வரப்புத் தகராறு!

தவறுகளை மாணவர்களுக்கு
சுட்டிக்காட்ட வேண்டிய ஆசிரியரே
தம் அடித்துக்கொண்டிருக்கிறார்!


எங்கே போய் சொல்ல?


மேலும் வாசிக்க "எங்கே போய் சொல்ல?"