Monday, April 1, 2013

மாணவர் போராட்டம்-இப்போதும் இணையாத தமிழக கட்சிகள்

உலகின் பார்வையை சற்றே தமிழகத்தின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருப்பதில் வெற்றியடைந்துள்ளது தமிழக மாணவப்பருவத்தினரின்  ஈழம் குறித்த போராட்டங்கள்.மாணவப்பருவத்தில் அவர்களுக்கேயுரிய துடிப்பை இத்தனை நாட்களாக கல்வி,சினிமா,பொழுதுபோக்கு,விளையாட்டு,காதல் மற்றும் சில பல விதங்களில் மட்டுமே பார்த்து வந்த நமக்கு இந்த போராட்டம் இந்திய அரசியலை புருவம் உயர்த்தி பார்க்க வைத்திருக்கிறது.


நினைத்துப்பார்க்கையில் அவர்களை துடிக்க வைத்து போராட்டத்தில் குதிக்க வைத்தது யார்?ஆதாயம் தேடியே அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளால்தான்,அவர்கள் மேலுள்ள கோபம் தான்.நீங்க செய்ய வேண்டியதைத்தாண்டா நாங்க படிப்பை விட்டுட்டு செஞ்சுட்டு இருக்கோம் என்ற கோபம் சில அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்து பேச வந்த போது பேச மறுத்து திருப்பி அனுப்பியதிலிருந்து தெரிகிறது.

இதற்கு முன் மாணவர் போராட்டம் என்றால் பஸ்டே,கல்லூரிகளுக்கிடையில் வரும் மோதல் போன்ற சில போருக்கித்தனங்கல்தான் மக்கழ்மனத்தில் வந்து நிற்கும்.இன்று தமது இன மக்களுக்காக முழு மூச்சாக போராடும் பாங்கு வீரவணக்கம் கொள்ள செய்கிறது.இத்தனை பயன்படுத்தி ஓட்டரசியல் செய்யத்துடிக்கும் அரசியல்வாதிகளை உங்கள் கற்பனையில் எண்ணியாவாறெல்லாம் திட்டிக்கொள்ள அனுமதிக்கிறேன்.


எனக்கு நெடுங்காலமாக ஒரு சந்தேகம் இருக்கிறது.எனக்கு அரசியல் அனுபவம் சற்றே குறைவுதான்.அனுபவமிக்கவர்கள் சொல்லுங்கள்.ஆளுங்கட்சியாக இருந்தாலும்,எதிர்க்கட்சியாக இருந்தாலும்,அதிரி புதிரி கட்சிகளாகட்டும் மக்கள் பிரச்சினைக்காக போராடுகிறேன் என்கிறீர்கள்.ஒன்று பிரச்சினை வருவது இங்கே இருந்து என்றால் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக்கொள்வது,குறைகூறிக்கொள்வது,தூற்றிக்கொள்வது என்ன இழவு வேண்டுமானால் செய்து கொண்டு போங்கள்.



          
                                      [நன்றி-http://avargal-unmaigal.blogspot.in]

ஆனால் பிரச்சினை வருவது வெளியே இருந்து என்றால்,அதாவது வெளிமாநிலம் அல்லது மத்திய அரசிடமிருந்து என்றாலும் கூட அதே இழவை ஏன் கூட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.உங்கள் கட்சியின் உண்மையான நோக்கம் மக்களின் நன்மை என்கிறீர்கள்,அப்படியானால் ஒருவரை ஒருவர் குறைகூற திட்டமிடும் நேரத்தில் எப்படியெல்லாம் போராடி நன்மை காண வழி செய்யலாம் என சிந்திக்கலாமே.,

ஒரு பிரசினைக்காகவாது இணைந்து போராடக்கூடாது என தமிழக கட்சிகளுக்கு யார் சட்டம் எழுதி வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.காவிரிப்பிரச்சினை,முல்லைப்பெரியார்,ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்,பாலாறு பிரச்சினை இது போன்ற விசயங்களில் பிரச்சினை என வரும் போது அந்தந்த மாநிலத்துக்கட்சிகள் கை கோத்துக்கிட்டுகோதாவில் இறங்கும் போது கபாடிப்போட்டியில் எல்லோரும் அவுட்டாகிவிட தனியே ரெய்டு வருபவரை எதிர் கொள்ளும் வீரனைப்போல அப்பாவியாய் நானும் போராடுகிறேன் என பேசுவது உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை?


                                         [நன்றி-http://avargal-unmaigal.blogspot.in]
சரி,உங்கள் எல்லோருக்கு ஒரே ஒரு கேள்வி.எந்த பிரசினைக்காகத்தான் நீங்கள் எல்லோரும் இணைந்து போராடுவீர்கள்?ஒற்றுமையே வலிமை,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என உங்கள் பிள்ளைகளுக்கல்ல,நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.இப்போது தான் நேரம் கூடியிருக்கிறது.நமது இனத்திற்காகவாவது இணையுங்களேன்.ஒட்டு மொத்த மாணவர்களது கூட்டு குரலுக்கே திரும்பிப்பார்த்த உலகம் ஒரு மாநிலத்தின் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து கூப்பிட்டால் என்ன வேண்டும் உங்களுக்கென்று கேட்காமலா போய்விடும்????


அதுதான் உங்களுக்கென்று ஒரு தாரக மந்திரம் இருக்கிறதே தேர்தலுக்கு தேர்தல் ஒரு உணர்ச்சிகரமான சந்திப்புக்கு பின் சொல்லுவீர்களே ஓட்டுப்பொறுக்க  "அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்று இல்லை"என்று அதை ஒரு முறையாவது மக்களின் நன்மைக்கு பயன்படுத்தினால் உங்க கொள்கைக்கு இழுக்கு ஏதாவது வந்திடுமோ? ,இல்லை அது முடியாது,நாங்கள் செய்த தியாகம் என்ன?எங்கள் வரலாறு என்ன?நாங்கள் அப்படியெல்லாம் இணைய மாட்டோம் என்றால்,இன்றைய சூழ்நிலையில் மக்களின் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.,அது மௌனம் பேசியது படத்தில் சூர்யா கதாபாத்திரம் கேட்குமே,நீங்கல்லாம் காதலிச்சு கல்யாணம் பண்ணி மயிரவா புடுங்கப்போறீங்க??,இங்கே காதலிச்சு,கல்யாணம் பண்ணி என்ற இடத்தில் கட்சி நடத்தி போராட்டம் பண்ணி என போட்டுக்கொள்ளவும்.  
மேலும் வாசிக்க "மாணவர் போராட்டம்-இப்போதும் இணையாத தமிழக கட்சிகள்"

Tuesday, March 5, 2013

ஜஸ்ட் மிஸ்ஸா?-அலட்சியம் வேண்டாமே


உன் வாழ்க்கை உன் கையில்,இது பாட்ஷா படத்தில் ரஜினி ஓட்டும் ஆட்டோவில் எழுதியிருந்த தத்துவம்,பன்ச் டையலாக் அட ஏதோ ஒண்ணு. விடுங்க விஷயம் என்னன்னா மார்ச் 4 தேசிய பாதுகாப்பு தினம்.நம்ம ஊர்ல தான் காதலர் தினத்தன்னைக்கு மட்டும் காதலை பத்தியும்,மகளிர் தினத்தில் மட்டும் மகளிர் குறித்தும் இன்ன பிற தினங்களில் அந்தந்தவற்றைப்பற்றியும் சிந்திப்பது,எழுதுவது,பொங்குவது ஏனைய பிற உணர்வுகளை காட்டுவதும் வேடிக்கையான வாடிக்கையாகிவிட்டது.ஒரு விதத்தில் யோசித்தால் இது போல அவற்றை(களை)யெல்லாம் அந்தந்த தினங்களிலாவது உணர்ந்து பார்க்க வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சியே.


என்ன?சரி,சரி சொல்ல வந்த மேட்டரை சொல்டு இடத்த காலி பண்ணவா?ஓகே விஷயம் மேட்டர் இதாங்க,ரஜினி பட டையலாக் மாதிரி பல சமயம் அவங்கவங்க வாழ்க்கை அவங்க கைல தாங்க இருக்கு.அதென்ன பல சமயம் அப்படின்னு ட்விஸ்ட் வைச்சு சொல்றேன்னு கேட்பவர்களுக்கு,சில சமயம் நமது பாதுகாப்பை பிறர் நிர்ணயிக்கிறார்கள்.உ.தா- டிரைவர்கள்.



நமது பாதுகாப்பு நம்மை மட்டுமல்ல,நம்மை,சார்ந்தவர்கள் சுற்றியுள்ளவர்கள்,சுற்றுப்புறம் எல்லாவற்றிக்கும் நலம் பயக்கும் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.நாம தெரியாம இல்ல அலட்சியமாக செய்யும் ஒரு விஷயம் ஒண்ணு நம்மள பாதிக்கும் இல்லன்னா கண்டிப்பா யாராவது ஒருவர் அல்லது பொருள் பாதிப்புக்குள்ளாவது நிச்சயமே.
ஜஸ்ட் மிஸ்.இந்த வார்த்தையை அலட்சியப்படுதாதீர்கள்.ஒவ்வொரு முறையும் ஜஸ்ட் மிஸ் ஆகாது.விபத்து நடக்க வாய்ப்பிருந்து விபத்தில் சிக்காமல் தப்பித்தால் அது போன்ற வாய்ப்பு மீண்டும் நிகழாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ.அதை உடனே செய்வோம்.ஐந்தில் வளையாதது .........அதே தாங்க.அப்ப பெரியவங்க சொல்றது ஒண்ணு நாம செய்றது ஒண்ணா இருந்ததால இப்பவும் அப்படியே தொடருது பழக்கம்.


ஒரு வேலை செய்ய தொடங்குமுன் அதைப்பற்றி ஓரிரு கணம் யோசித்துவிட்டு நம்மால் செய்ய முடியுமா என முடிவெடுத்து பின் செய்யலாம்.தெரியாத வேலை(சரி வர கற்றுக்கொள்ளாமல்) செய்வதை நிறுத்தினாலே போதுமே.சிலசமயம் மனக்கட்டுப்பாடும் அவசியமாகிறது.எந்த பணி செய்வதாக இருப்பினும் வீட்ல கோவமா கிளம்பியோ,அலுவலகத்தை விட்டு எரிச்சலுடன் கிளம்பும்போதோ ,ஓரிரு வினாடிகள் வண்டி எடுக்குமுன் நிதானித்து அந்த உணர்வுகள் இல்லாமல் பயணத்தை தொடரலாம்.

                         

ஒவ்வொரு வேலைக்கும் அதை செய்வதற்கான சரியான பொருள்(tools) இருக்கிறது,அதே மாதிரி நிச்சயமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பணிகளுக்கு பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்துவது அவசியம்.ரொம்ப சொல்லிட்டே போற மாதிரி இருக்கு,இப்பத்தான் யோசிக்கிறேன் உண்மையிலே நம்ம முன்னோர்கள் அதிபுத்திசாலிகள்,எப்பர்ப்பட்ட விசயத்தையும் சில வரிகளில்,சில வார்த்தைகளில் சொல்லிவிடுவது வியப்பிலும் வியப்பு.இங்கே எனக்கு நினைவுக்கு வந்தது வருமுன் காப்போம்.


நாளை இருப்பது நமக்காகத்தான்,பாதுகாப்போடு வரவேற்போம்.

நட்புடன்,
ம.கோகுல்.
மேலும் வாசிக்க "ஜஸ்ட் மிஸ்ஸா?-அலட்சியம் வேண்டாமே"

Thursday, February 21, 2013

தனியார் பள்ளிகள் முளைக்க காரணம்?


கல்விக்கரையில: கற்பவர் நாள் சில 

முதலிரு  பதிவுகள் வாசிக்க.,

1.கல்விக்கண் எல்லோருக்கும் தெரிகிறதா?



 
நமது ஊரில் கல்வி என்பது பள்ளியில் சேர்ந்து கற்றால்தான் என ஆகிவிட்ட நிலையில் எந்த பள்ளியில் கல்வி வரையறையை நிர்ணயிப்பது பணம் என்றாகிவிட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிப்படிப்பு என்றால் அது ஏறக்குறைய அரசுப்பள்ளிகளில் தான்,சில மேல்தட்டு(பணம் படைத்தவர்களை குறிப்பிடுகிறேன்) மக்களின் பிள்ளைகளைத்தவிர எல்லோரும் அரசுப்பள்ளிகளில் படித்தவர்களே.



இன்றைய நிலை என்ன?ஊரின் மக்கள் தொகைக்கேற்ப கணிசமான அளவில் தனியார் பள்ளிகள் கல்வியில் தங்களது பங்களிப்பை(?) செய்து வருகின்றன.சரி அரசுப்பள்ளிகளில் இன்று படிப்பவர்கள் யார்?தனியார் பள்ளிகளின் கட்டணச்சுமையை  பொருளாதாரரீதியில் சுமக்க முடியாதவர்களின் பிள்ளைகள் படிப்பத்தற்கான இடம் அரசுப்பள்ளிகள் என்றாகிவிட்டது.அதுவும் கட்டணச்சுமையை சமாளிக்க முடியாததால் தான்,யாரும் விரும்பியும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுவதில்லை.
சமீபத்தில் வெளிவந்த ஆய்வொன்று தெரிவிகிறது ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளிகளில் சேர்க்கைவிகிதம் குறைந்துகொண்டே வருவதைஅப்படியென்றால் தனியார் பள்ளிகளின் கட்டணச்சுமையையும் தாங்கி  அங்கே சேர்த்து பிள்ளைகளை படிக்க வைக்கும் அளவுக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டதா?இல்லை அரசுப்பள்ளிகளின் இன்றைய நிலை தரமிழந்திருக்கிறது.எப்பாடு பட்டாவது(தான்) தம் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விழைகின்றனர்.


முரண் துவங்குவது இங்கேதான்.பள்ளிப்படிப்பை முடித்தபிறகு உயர் கல்வியில் எல்லோரும் சொல்லிவைத்தார் போல எப்பாடு பட்டாவது அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடாதா என முயற்சிக்கின்றனர்.தனியார் பள்ளிகள் அரசுக்கல்லூரிகளில் சேருவது எப்படி என்பதை தெளிவாக சொல்லிக்கொடுக்கின்றன.



அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சிக்கும்,தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் அரசின் பங்கே முக்கியமானது என்பது உண்மையிலும் உண்மை.அது எப்படி?ஒரு ஊரில் தனியார் பள்ளி துவக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமோ அதனை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டுமென,(நினைவிற்கொள்க விதிமுறைகளை மட்டுமே சமாளிக்க வேண்டுமே தவிர அதை எப்படி செயல்முறை படுத்துவது என்பதில் அல்ல) அதிகாரிகளே மேப் போட்டு காட்டுகின்றனர் போலும்.விளைவாக முளைத்தன ஏகத்துக்கும் தனியார் பள்ளிகள்.ஆனால் ஏதாவது விபரீதங்கள் நடக்கும்போது மட்டும் எங்கிருந்து தான் பொத்துக்கொண்டு வருகின்றனவோ உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா என்கிற அளவிற்கான கேள்விகள்.கூடவே அதிரடி ஆய்வுகள்(மக்களும் ஊடகங்களும் சம்பவத்தை மறக்கும் வரை மட்டும்) 



காரணம்?அந்நியனில் ட்ரெயினில் டி.டி.ஆர் (மனோபாலா) சொல்வதுதான் பதில்.அரசாங்கம்,அதிகாரிகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என ஒருவர் ஒருவர் மாற்றி கைகள் காட்டும்.சரி தரமான கல்வியை அரசுபள்ளிகளில் கிடைக்கச்செய்ய என்ன தான் செய்வது??????


தொடரும்.....

நன்றி மாதேஷ் -புகைப்படங்கள்
மேலும் வாசிக்க "தனியார் பள்ளிகள் முளைக்க காரணம்?"

Thursday, January 24, 2013

பல"சரக்கு"கடை 12 (24/01/2013)

வணக்கம் வலைப்பூ நண்பர்களே,பதிவெழுதி பலநாட்கள் ஆகின்றன,சிலநேரம் நேரமின்மை,சிலநேரம் சோம்பல் இப்படியாக காலம் கடக்கிறது.இந்த ஆண்டின் முதல் பதிவு இது.கடந்த ஆண்டின் துவக்கத்தில் புதியன புகுததில் திறக்கப்பட்ட பல சரக்கு கடை பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சி.இனி மாதம் ஒன்றாவது பல சரக்கு கடையும்,வாரம் ஒரு பதிவாவது எழுதி விடுவது என நினைத்திருக்கிறேன்.நடக்கும் என நம்புவோமாக.
_________________________________________________________________________________
 

இது போட்டோஷாப்பாக இல்லாத பட்சத்தில் - நாங்கல்லாம் அப்பவே!!!
______________________________________________________________________________

உலகமே புத்தாண்டை உற்சாகமாக எதிர் நோக்கியிருந்த நேரத்தில் , விடிந்தாலாவது குடிநீரும்,மின்சாரமும் வந்துவிடாதா என பலரையும்  ஏங்க வைத்த "தானே" கடந்த சென்ற நள்ளிரவு நினைவுக்கு வந்து சென்றது
_______________________________________________________________________________

திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுப்பது மோசமான கலாச்சாரம்-மருத்துவர்.
தேர்தல் அறிக்கைல இலவசங்களை அறிவிச்ச பிறகும் அவங்களோட கூட்டணி வைச்ச உங்க கலாசாரம் எந்த பட்டியல்ல வரும்? # அது போன மாசம் 
____________________________________________________________________________

.
யம்மா,யம்மா hungama

இந்த மாதம் ஃப்ராட்பேண்ட் இணைப்பிற்கான கட்டணத்தில் கூடுதலாக 200ரூபாய் one time charges என போட்டு வந்திருந்தது,விஷயம் என்னவென்று அழைத்து கேட்டதற்கு, எத்தனை மாதமாக இந்த மாதிரி வருது என கேட்க நான் இப்போது தான் வருகிறது என்றேன். ஃப்ராட்பேண்ட் இணைப்பு உள்ள எல்லோருக்கும் இது போல hungama service அவங்களா ஆக்டிவேட் பண்ணிட்டு எங்க உயிர எடுக்கறாங்க சார், நீங்க ரொம்ப லக்கி உங்களுக்கு இந்த மாசம்தான் வந்திருக்கு மூணு மாசமா சில பேர் அவஸ்தை படறாங்கனு தகவல் கிடைத்ததில் நான் ரொம்பவே லக்கி.இனி அதற்கு ஒரு கடிதம் நேரில் தலைமை அலுவலகம் சென்று வந்த பில்லில் திருத்தம் செய்ய வேண்டுமாம்,அடங்கம்மா................!!!
________________________________________________________________________________
அடுத்தவாரிசு

காங்கிரசை சுதந்திரம் வாங்கியதும் கலைத்திருக்க வேண்டுமென காந்தி வருந்தியது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது.இனி ஏதோ வயிற்றுக்கு உழைத்து உண்ணும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.அதையும் பிடுங்கித்திங்க யாரேனும் வரக்கூடும்.ஜாக்கிரத,ஜாக்கிரத!!!

_________________________________________________________________________________
ஒருநாள் வீட்டுக்கு வரும் வழியில் கூட்டமாக நாய்கள் எதற்கோ தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.எனக்கு முன்னாள் சென்ற வண்டிக்காரர் சற்று தடுமாறி கூட்டத்தில் ஒரு நாயின் மீது லேசாக மோதி விட்டார்.அவ்வளவுதான் சண்டை போட்டுக்கொண்டிருந்த எல்லா நாய்களும் ஒன்றாக சேர்ந்து அந்த வண்டியை துரத்த ஆரம்பித்து விட்டன.
# அந்த சமயத்துல எனக்கு தமிழக அரசியல்வாதிகள் நினைவுக்கு வரல.உங்களுக்கு வந்தா அதற்கு நான் பொறுப்பல்ல.
________________________________________________________________________________
ரிலாக்ஸா தேடினா கண்டிப்பா கிடைக்கும்.,தேடிப்பாருங்க 

ஒரு  ஏழேமுக்கா நிமிஷம் ஆகும் கொஞ்சம் ரிலாக்ஸா பாருங்க.,
________________________________________________________________________________

இன்னிக்கு காலைல பைக்ல போயிட்டு இருக்கும் போது ஒருத்தரு அவசர அவசரமா போயிட்டு இருந்தாரு,பாவம் என்ன அவசரமோன்னு வாங்க சார் போற வழில இறக்கி விட்டுட்றேன்னு சொன்னேன்,ஆனா அவரு மொறச்சுக்கிட்டே வேக வேகமா போய்ட்டார். # ட்ராக் சூட்டும் ஷூவும் போட்டிருந்தா பதில் சொல்லக்கூடாதா என்ன?
________________________________________________________________________________

நட்புடன்,
ம.கோகுல்.
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 12 (24/01/2013)"