Showing posts with label விபத்து. Show all posts
Showing posts with label விபத்து. Show all posts

Tuesday, December 18, 2012

மாணவர்கள் விரும்பித்தான் படியில் தொங்குகிறார்களா?

கடந்த பதிவின்(வாசிக்காதவர்கள் அழுத்தவும்) தொடர்ச்சியாக அரசுப்பள்ளி மாணவர்கள் சந்திக்கும் போக்குவரத்து பிரச்சினைகள் பற்றி எழுதியதை பதிவிடுவதற்குள் நிகழ்ந்திருக்கிறது சென்னையில் மாநகரபேருந்து விபத்தில் சிக்கி நான்கு மாணவர்கள் பலியான சம்பவம்.சொல்லப்போனால் இந்த தொடர்பதிவு எழுதுவதற்கான எண்ணம் உருவானது இதைப்போன்ற ஒரு நிகழ்ச்சிதான்.


கடந்த மாதம் ஊருக்கு(இளம்பிள்ளை-இராசிபுரம்) சென்றிந்த போது ஓரு நகரப்பேருந்தில் பயணித்தபோது உதித்தது தான் இந்த எண்ணம்.அது எல்லோருக்கும் தெரிந்த பாஷையில் பீக் அவர். பேருந்து கிளம்பி இரண்டு மூன்று நிறுத்தங்களுக்குள் பேருந்து நிரம்பி வழிந்தது.ஒவ்வொரு நிறுத்தத்திலும் கிட்டத்தட்ட இருபது மாணவ மாணவிகள் கூடவே நான்கைந்து பயணிகள்.எள் போட்டால் எண்ணெயாக இறங்கும் அளவுக்கு கூட்டம் என மிகையாக சொன்னாலும் அது சரியாகத்தான் தோன்றுகிறது.

பலர் நினைப்பது போல உள்ளே இடம் இருந்தும் படியிலிருந்து உள்ளே செல்ல மறுக்கும் மாணவர்களில்லை அவர்கள்.சொல்லப்போனால் இரண்டாம் படி வரை சில மாணவிகளே நின்றுகொண்டு வந்தனர்.முன்புற படிக்கட்டிலும் பின்புற படிக்கட்டிலும் சுமார் பத்து பேர் தொங்கிக்கொண்டு வந்தனர்.ஒவ்வோர் நிறுத்தத்திலும் இறங்கி வலிக்கும் கைகளை தேய்த்து ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்.


பயணிகளே ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஏங்க ஸ்டாப்பில நிறுத்துறீங்க,இவ்ளோ கூட்டமா இருக்குல்ல,நிறுத்தாம போங்கனு சொல்றாங்க,கண்டக்டரோ நீங்க இப்டி சொல்றீங்க ஸ்கூல் டைமுக்கு இதாங்க பஸ்சு இத விட்டா அவங்க ஸ்கூல் போக முடியாது,நிறுத்தாம போனா அப்புறம் அடுத்த சிங்கிள் வரும் போது பஸ்ஸை மறிச்சு கலாட்டா பண்ணுவாங்க,இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோனு புலம்பினார்.
  

எப்படி பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்திலிருந்து(எல்லா ஊரிலும்) கிட்டத்தட்ட பத்திலிருந்து பதினைந்து கி.மீ பயணம் செய்கின்றனர் மாணவர்கள்.தனியார் பள்ளி வாகனங்களுக்கு மட்டும் எத்தனையோ விதிமுறைகள் விதிக்கபட்டுள்ளன( சிறுமி ஸ்ருதி மரணத்திற்கு பிறகே).ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பஸ்பாஸ் வழங்குவதுடன் நின்றுவிடுகிறது அரசின் கடமை.


ஒவ்வொரு வழித்தடத்திலும் பள்ளிநேரத்தில் எல்லா பேருந்துகளிலும் ஏதாவது பத்து,இருபது மாணவர்கள் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.என்ன தான் தீர்வு? எல்லா வழித்தடங்களிலும் உள்ள பள்ளிகளில் எத்தனை இலவச பஸ்பாஸ்கள் வழங்கப்படுகிறது என்பதை கணக்கில் கொண்டு பள்ளி நேரங்களில் அந்தந்த வழித்தடங்களில் மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கலாம்.புதுச்சேரியில் இதைப்போன்ற ஒரு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.அதாவது பல வழித்தடங்களில் கிட்டத்தட்ட பதினைந்திலிருந்து இருபத்தைந்து கி.மீ வரை பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கென ஒரு ரூபாய் கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதில் அரசுப்பள்ளி மட்டுமல்லாமல்தனியார் பள்ளி,கல்லூரி,பாலிடெக்னிக்,ஐ.டி.ஐ மாணவர்கள் உட்பட அந்த வழித்தடத்தில் உள்ள எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் அடையாள அட்டையை காட்டிவிட்டு ஒரு ரூபாய் கட்டணத்தில் போய் வரலாம்.இது மாதிரி ஒரு முயற்சியை தமிழகத்திலும் பரிசீலிக்கலாமே .....  

மாணவர்களை தண்டிப்பதோ,பேருந்து ஓட்டுனர்கள்,நடத்துனர்களை வஞ்சிப்பதையோ தவிர்த்து இதைப்போன்ற விசயங்களைப்பற்றி சிந்திக்கலாம்.இப்படியெல்லாம் செய்தும் படியில தான் தொங்குவேன் அப்டினு அடம புடிக்கறவங்கள "புடிங்க சார் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்"
மேலும் வாசிக்க "மாணவர்கள் விரும்பித்தான் படியில் தொங்குகிறார்களா?"

Thursday, December 1, 2011

ஹெல்மெட்டுக்கு விளக்கம் என்ன?



தலைக்கவசம் உயிர்க்கவசம்,
தலைக்கவசம் அணிவோம் உயிர்ப்பலி தவிர்ப்போம் 
என பல விழிப்புணர்வு வாசகங்கள் பார்த்திருப்போம்.
ஆனால் போலிஸ் போடும் ஃபைனுக்கு பயந்து 
ஹெல்மெட் போடுவதை தவிர்த்து நமது பாதுகாப்புக்காக 
அணிவதை உணர வேண்டும்.





(பாத்தீங்களா ஹெல்மேட்டோட மகிமையை)



இன்னைக்கு HELMET அப்படிங்கற ஆங்கில வார்த்தைக்கான 
புதிய விளக்கம் தெரிய வந்தது.அது என்னன்னா?

 H-Head

 E-Eyes

 L-Lips

     M-Mouth

E-Ear

      T-Tongue & Teeth


நம்ம தலையில் இருக்கும் இந்த எல்லா உறுப்புக்களையும் 
பாதுக்காக்கறதுனால இந்த பேராம்.ரொம்ப பொருத்தம்.
இந்த வீடியோவ பாருங்க.



ஹெல்மேட்டோட மகத்துவத்த இதை விட சிறப்பா சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன்.
நண்பர்களே!நிச்சயம் டூ வீலர் ஓட்டும் போது ஹேல்மேட்டும்,4-வீலர் ஒட்டுரவங்களா இருந்தா சீட் பெல்ட்டும் போட்டுக்குவோம்னு உறுதி எடுத்துக்குவோம்.பாதுகாப்பா பயணம் தொடர்வோம்.

                                                   
[ இவரு ரொம்ப உசாரு போல]

பின்குறிப்பு- எதை எதையோ இலவசமா மானியமா கொடுக்குறதுக்கு
பதிலா வண்டி இருக்கவங்களுக்கு ஹெல்மெட் கொடுக்கக்கூடாதான்னு 
எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு.அது மாதிரி செய்ய முடியுமா?

நட்புடன்,

ம.கோகுல்.

மேலும் வாசிக்க "ஹெல்மெட்டுக்கு விளக்கம் என்ன?"

Saturday, October 22, 2011

மழையில் பயணமா?


வணக்கம் நண்பர்களே,
                      கடந்த மூன்று நாட்களாக பதிவுலகப்பக்கம் வர 

முடியவில்லை.காரணம் கடைசியில் சொல்றேன்!

நம்ம ஊருல இப்ப அப்பப்ப மழைபேயுது.ரமணன் பேச்ச எல்லாம் 

கேக்குறது கிடையாது.ஸ்கூல் லீவு விட்டா மழை விட்டுடும்.ஸ்கூல் 

வைக்குற அன்னைக்கு மழை கொட்டும்.அத விடுங்க.எதுக்கு 

இந்தப்பதிவுன்னா இந்த மழைநேரங்களில் நாம வண்டில போகும் போது 

வரும் பிரச்சினைகளைப்பத்தியது.


சாதாரணமாகவே சாலைப்பயணத்தில் இப்போதெல்லாம் பாதுகாப்பு 

கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் மழைக்காலத்தில் பயணம் செய்யும் 

போது நாம் இன்னும் சற்று கூடுதல் கவனம் கொள்வது 

அவசியம்.குறிப்பாக வேகம்,மழை நேரங்களில் சாதாரணமாக நாம் 

செல்லும் வேகத்தை விட குறைந்த வேகத்தில் வண்டி ஓட்டுவது மிக 

அவசியம்.


பிரேக் பிடிக்கும் போது கூடுதல் கவனம் தேவை.ஈரச்சாலைகள் நிச்சயம் 

பிரேக்குக்கு பிடிந்து கொடுக்காது.பிரேக் நாம சொன்ன பேச்ச கேக்காது.டூ 

வீலர்ல கூடுமான வரைக்கும் இரண்டு பிரக்குகளையும் பிடிச்சு வண்டியை 

நிறுத்த முயற்சி செய்யணும்.முடிஞ்சா வரைக்கும் சடன் பிரேக் பிடிக்கறத 

தவிர்க்கணும்.



ரோட்டுல தண்ணி ஓடும் போது வண்டி ஓட்டுறத கண்டிப்பா தவிர்க்குறது 

நல்லது.ரோட்டுல பள்ளம் இருந்தா தெரியாது.அப்பறம் டரியல் தான்.நம்ம 

ஊரு மழைக்கால ரோடுங்களைப்பத்தி உங்களுக்கு தெரியும் தானே?சில 

நேரங்கள்ல ரோட்டோரமா இருக்குற சாக்கடைங்க தண்ணியில 

மறைஞ்சுடும்.கொஞ்சம் அசந்தா சாக்கடையில் ஐக்கியமாக 

வேண்டியதுதான்.நாம கால் அளவு தண்ணிதான் இருக்குன்னு நினைச்சு 

போனா இடுப்பளவு தண்ணி இருக்கும்.வண்டிக்குள்ள தண்ணி போய் 

வண்டிக்கும் பிரச்சினை நமக்கும் தான்!








அப்பறம் இன்னொரு பிரச்சினை சேறு.நீரும் செம்புலச்சேறும் கலந்தது 

போல,பாட்ட கேக்க நல்லா நல்லா இருந்தாலும் வண்டி ஓட்ட ஆபத்தானது 

தான்.டூ வீலர்ல பேலன்ஸ் பண்ண முடியாது.4 வீலர்ல சக்கரங்கள் 

சேத்துல மாட்டிக்கும்.சோ அவாய்ட் பண்றது நல்லது.சில இடங்களில் மண் 

சரிவு அபாயங்களும் இருக்கிறது.



மழை கொட்டிக்கிட்டு இருக்கும் போது வண்டியில போறது ஒரு 

சுகமான,ரசனையான அனுபவம் தான்,ஆனா அதுல நிறைய ஆபத்துக்களும் 

இருக்குங்க.அதனால நமது மழைக்கான பயணங்கள் பாதுகாப்பானதாக 

இருக்க முன்னெச்சரிக்கையுடன் இருப்போம்.அதிலையும் நம்மாளுங்க 

ஒத்த கையில குடைய பிடிச்சுக்கிட்டு இன்னொரு கையில ரிஸ்க்கையும் 

எடுத்துக்கிட்டு வண்டி ஓட்டிட்டு போறாங்க!






அப்பறம் பிளாக் பக்கம் வராததுக்கு காரணம் என் வயதொத்த கூட வேலை 

பாக்கும் நண்பன் ஒருவன் டூ வீலர்ல கம்பெனிக்கு வரும் போது இது 
மாதிரி மழை நேரத்துல பிரேக் புடிச்சு ஸ்லிப்பாகி விழுந்து கையிலும் 
கழுத்திலும் கொஞ்சம் அடி.இப்ப பரவால்ல.மருத்துவமனைக்கு போய் வர 
நேரிட்டதால் நேரமில்ல.இது போல விபத்துகளை தவிர்க்க கொஞ்சம் 
விழிப்புடன் இருப்போம் நண்பர்களே! இருப்போமா?நமது நண்பர்களுக்கும் 
விழிப்பை ஏற்படுத்துங்கள்!நன்றி!




தொடர்புடைய பதிவுகள்


ஹெட் லைட்டால் வரும் இருட்டு!!!


வேகத்தடையா?பயணத்தடையா???



மேலும் வாசிக்க "மழையில் பயணமா?"

Friday, September 30, 2011

வேகத்தடையா?பயணத்தடையா???



_________________________________________________________________________________
நான் நேத்து வேலைக்கு(?) பைக்கில் போகும் போது திடீரென்று இரு இடங்களில் வேகத்தடைகள் புதிதாக முளைத்திருந்தன.மிதமான வேகத்தில் சென்றதால் ப்ரேக் பிடித்து சமாளித்து விட்டேன்.இந்த நிகழ்வு நான் பதிவெழுத வந்த புதிதில் எழுதிய ஒரு பதிவு ஞாபகத்துக்கு வந்துச்சு.புதிய folloewrs-க்காக மீண்டும் இங்கே.அப்போது வாசித்தவர்கள் பொறுத்தருள்க!
__________________________________________________________________________________


என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவர் திடீரென்று கையில் கட்டுடன் நிறுவனத்துக்கு வந்தார்.என்னங்க நேத்து கூட நல்லாத்தான இருந்தீங்க என வழக்கமான கேள்வியை கேட்டேன்.அதுக்கு அவர் சொன்ன பதில் தான் இந்த பதிவுக்கு மேட்டர்.
வண்டில போய்கிட்டு இருக்கும் போது ஸ்பீட் பிரேக்கர் இருக்கிறது தெரியாமவேகமா போய் ஸ்கிட் ஆகி விழுந்துட்டேன்னார்.ஏங்க நீங்க தினமும் போற ரோடுதான ஸ்பீட் பிரேக்கர் இருக்கறது           தெரியாதா ன்னேன் நான் விவரமா?

அடப்போடா?நான் மதியம் வரும் போது ஸ்பீட் பிரேக்கர் இல்லடா.திரும்பி நைட் போகும்போது ஸ்பீட் பிரேக்கர் போட்டு இருக்காங்கடா னார்.
அப்போது தான் எனக்கு உரைத்தது நம்ம ஊரில் நிறைய வேகத்தடைகள் இருப்பதே தெரிவதில்லை.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தொலைவில் வரும் போதே தெரிவதற்காக வெள்ளை, மஞ்சள் நிறத்தில்,வேகத்தடை இருப்பது தெரியும்படி அடையாளமிட்டிருப்பார்கள்.அது போக எச்சரிக்கை பலகையும் வைத்திருப்பார்கள்.

ஆனால் பெரும்பாலானமாநகரச்சாலைகளிலும்.ஊரக, கிராமப்புறச்சாலைகளிலும் உள்ள வேகதடைகளில் இது போல இருப்பதில்லை.

தினமும் ஒரே சாலையில் பயணிப்போரே புதிதாய்ப்போட்ட வேகத்தடை தெரியாமல் விபத்துக்குள்ளாகும் போது புதிதாய் அந்த சாலையில் பயணிப்போரின் கதி???


ஹெல்மட்டை போடுங்க,சீட் பெல்ட போடுங்க,ட்ராபிக் ரூல்ஸ பாலோ பண்ணுங்க அப்படின்னுல்லாம் சொல்லுரவங்க,இதெல்லாம் பாலோ பண்ணியும் இப்படி விபத்து ஏற்படாம தடுக்க,எங்க வேகத்தடை போட்டாலும் தொலைவிலிருந்தே தெரியுற மாதிரியும்,இரவு நேரங்களில் ஒளிருவது போலவும் போட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமாப்போகும்.

நண்பர்களே அவங்க என்னவோ பண்ணிட்டு போறாங்க நான் உங்களுக்கு சொல்லிக்கறது என்னன்னா அளவோட வேகத்துல வண்டிய ஓட்டுங்க’.
வேகத்தடை பயணத்தடையா மாறாம பாத்துக்கங்க!!!




மேலும் வாசிக்க "வேகத்தடையா?பயணத்தடையா???"

Wednesday, July 27, 2011

வேகத்தடையா பயணத்தடையா?????


என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவர் திடீரென்று கையில் கட்டுடன் நிறுவனத்துக்கு வந்தார்.என்னங்க நேத்து கூட நல்லாத்தான இருந்தீங்க என வழக்கமான கேள்வியை கேட்டேன்.அதுக்கு அவர் சொன்ன பதில் தான் இந்த பதிவுக்கு மேட்டர்.
வண்டில போய்கிட்டு இருக்கும் போது ஸ்பீட் பிரேக்கர் இருக்கிறது தெரியாமவேகமா போய் ஸ்கிட் ஆகி விழுந்துட்டேன்னார்.ஏங்க நீங்க தினமும் போற ரோடுதான ஸ்பீட் பிரேக்கர் இருக்கறது           தெரியாதா ன்னேன் நான் விவரமா?

அடப்போடா?நான் மதியம் வரும் போது ஸ்பீட் பிரேக்கர் இல்லடா.திரும்பி நைட் போகும்போது ஸ்பீட் பிரேக்கர் போட்டு இருக்காங்கடா னார்.
அப்போது தான் எனக்கு உரைத்தது நம்ம ஊரில் நிறைய வேகத்தடைகள் இருப்பதே தெரிவதில்லை.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தொலைவில் வரும் போதே தெரிவதற்காக வெள்ளை, மஞ்சள் நிறத்தில்,வேகத்தடை இருப்பது தெரியும்படி அடையாளமிட்டிருப்பார்கள்.அது போக எச்சரிக்கை பலகையும் வைத்திருப்பார்கள்.

ஆனால் பெரும்பாலானமாநகரச்சாலைகளிலும்.ஊரக, கிராமப்புறச்சாலைகளிலும் உள்ள வேகதடைகளில் இது போல இருப்பதில்லை.

தினமும் ஒரே சாலையில் பயணிப்போரே புதிதாய்ப்போட்ட வேகத்தடை தெரியாமல் விபத்துக்குள்ளாகும் போது புதிதாய் அந்த சாலையில் பயணிப்போரின் கதி???
ஹெல்மட்டை போடுங்க,சீட் பெல்ட போடுங்க,ட்ராபிக் ரூல்ஸ பாலோ பண்ணுங்க அப்படின்னுல்லாம் சொல்லுரவங்க,இதெல்லாம் பாலோ பண்ணியும் இப்படி விபத்து ஏற்படாம தடுக்க,எங்க வேகத்தடை போட்டாலும் தொலைவிலிருந்தே தெரியுற மாதிரியும்,இரவு நேரங்களில் ஒளிருவது போலவும் போட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமாப்போகும்.

நண்பர்களே அவங்க என்னவோ பண்ணிட்டு போறாங்க நான் உங்களுக்கு சொல்லிக்கறது என்னன்னா அளவோட வேகத்துல வண்டிய ஓட்டுங்க’.
வேகத்தடை பயணத்தடையா மாறாம பாத்துக்கங்க!!!
மேலும் வாசிக்க "வேகத்தடையா பயணத்தடையா?????"