Showing posts with label மனிதநேயம். Show all posts
Showing posts with label மனிதநேயம். Show all posts

Monday, September 5, 2011

மனித நேயம்!!!



                                


                பேருந்தில் ஊனமுற்றோர் நின்றிருந்தாலும்
       பார்காததது போல் அமர்ந்திருக்கும் சிலர்
    
       பாதை கடக்க முடியாமல் திணறும்
       பார்வையற்றோரை பார்க்காமல் ஓடும சிலர்

       யாருக்கேனும் விபத்து நேரிட்டால் கூட
       யாருக்கென்ன என ஓடும் சிலர்
    
       பாதாள சாக்கடை திறந்தே கிடந்தாலும்
       பார்த்துக்கொண்டே போகும் சிலர்

       பொருட்கள் விற்க வீடு தேடி வருவோரை
       பொறுமையின்றி பொறிந்து தள்ளும் சிலர்

       பக்கத்துக்கு வீட்டில் கொலை கொள்ளையே நடந்தாலும்
       நமக்கென்ன என டி.வீ .பார்க்கும் சிலர்

       ஆதரவற்றோருக்கு ஆதரவு கேட்டு வரும்
       அன்பு உள்ளங்களை அவமதிக்கும் சிலர்

       ஏழை மக்கள் சிறுக சேமிக்கும் பணத்தையும்
       ஏப்பம் விடும் சிலர்

       என பலர் இவ்வுலகில் உலவிக்கொண்டிருந்தாலும்
       கொஞ்சமேனும் மழை பெய்கிறதென்றால்
                

      அது உலகின்எங்கோ ஓர் மூலையில்
      மனிதநேயம் வாழ்ந்து கொண்டிருப்பதாலே!! 


"இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட 
ஒரு கை நீட்டி தர்மம் செய் நீதான் கடவுள்"
--அன்னை தெரசா
_________________________________________________________________________________________________________
நேற்று(04.09.11-ஞாயிறு)சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற பதிவர் சந்திப்பில் 
கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..கலந்து கொண்ட பதிவர்களுக்கும்,சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி!
__________________________________________________________________________________________________________

மேலும் வாசிக்க "மனித நேயம்!!!"

Tuesday, July 5, 2011

மனிதநேயம்


                                


                பேருந்தில் ஊனமுற்றோர் நின்றிருந்தாலும்
       பார்காததது போல் அமர்ந்திருக்கும் சிலர்
    
       பாதை கடக்க முடியாமல் திணறும்
       பார்வையட்றோரை பார்க்காமல் ஓடும சிலர்

       யாருக்கேனும் விபத்து நேரிட்டால் கூட
       யாருக்கென்ன என ஓடும் சிலர்
    
       பாதாள சாக்கடை திறந்தே கிடந்தாலும்
       பார்த்துக்கொண்டே போகும் சிலர்

       பொருட்கள் விற்க வீடு தேடி வருவோரை
       பொறுமையின்றி பொறிந்து தள்ளும் சிலர்

       பக்கத்துக்கு வீட்டில் கொலை கொள்ளையே நடந்தாலும்
       நமக்கென்ன என டி.வீ .பார்க்கும் சிலர்

       ஆதரவற்றோருக்கு ஆதரவு கேட்டு வரும்
       அன்பு உள்ளங்களை அவமதிக்கும் சிலர்

       ஏழை மக்கள் சிறுக சேமிக்கும் பணத்தையும்
       ஏப்பம் விடும் சிலர்

       என பலர் இவ்வுலகில் உலவிக்கொண்டிருந்தாலும்
       கொஞ்சமேனும் மழை பெய்கிறதென்றால்
                

      அது உலகின்எங்கோ ஓர் மூலையில்
      மனிதநேயம் வாழ்ந்து கொண்டிருப்பதாலே!! 

மேலும் வாசிக்க "மனிதநேயம்"