அன்று ஒரு பேரணி
நடைபெற்று கொண்டிருந்தது
ஆர்வ மிகுதியால் எட்டிப்பார்த்தேன்
என்ன பேரணி என்று
குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு பேரணியாம்
கோஷம் போட்டார்கள்
குழந்தைகள் வருமானம்
நாட்டிற்கு அவமானம்
பிஞ்சுகளை வெம்ப விடாதிர்
அவை விழுது விட்டு
வேரூன்ற வேண்டியவை என்று
பேரணி முடிந்து
களைத்து அமர்ந்தவர்களுக்கு
குளிர்பானம் விநியோகித்தான்
கந்தன் என்ற பத்து வயது சிறுவன்!!!
மீள்வு!
புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்
மீள்வு!
புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்
| Tweet | ||||||

