வணக்கம் நண்பர்களே,
( மேதைக்கு டிக்கெட் கன்பார்ம் ஆகிடுச்சா )
ஊர் சுத்தப்போனதோட போன பதிவில விட்டுட்டு போயிட்டேன்.தொடரலாமா?
ஊருக்குப்போய் ரொம்ப நாள் ஆனதால சொந்தக்காரங்க,நண்பர்கள் எல்லோருடைய வீட்டுக்கும் போய் சின்னதா ஒரு அட்டன்டன்ஸ் போடப்போனேன்.போன இடத்திலெல்லாம் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே சாப்பிட்டுத்தான் போகனும்னு அன்புக்கட்டளைகள். அப்படி இப்படி செம கட்டு கட்டுனதுல ஒரு ரவுண்டு பெருத்தாச்சு.
அடுத்த நாள் மாட்டுப்பொங்கல்,எல்லா பண்டிகைக்கும் நாம ஒருத்தருக்கொருத்தர் வாழ்த்து சொல்றோம்.மாட்டுப்பொங்கலுக்கு யாருக்கு வாழ்த்து சொல்றது அப்படின்னு ஒரு டவுட்டு வந்தது.சரி பொதுவா சொல்லுவோம் ஹேப்பி மாட்டுப்பொங்கல்னு மொபைல்ல பேஸ் புக்ல இப்படி போட்டேன்,நம்ம மதுரன் குசும்பா சேம் டூ யூ பாஸ் அப்படின்னு வாரி விட்டுட்டாரு.ஓகே.மாட்டுப்பொங்கல் எனக்கு சின்ன வயசிலிருந்தே ரொம்ப இஷ்டம்( .பொங்கல் பண்டிகையிலே எனக்கு ரொம்ப பிடிச்ச நாள் குறிப்பா கிராமங்கள்ல இந்த நாளன்னிக்குத்தான் ரொம்ப சிறப்பா கொண்டாடுவாங்க. சின்ன வயசிலிருந்தே ஏன் பிடிக்கும்னா அந்த நாளன்னிக்குதான் எல்லா சொந்தக்காரங்களும் எந்த ஊர்ல இருந்தாலும் தவறாம வந்திடுவாங்க என்னென்ன உறவு முறைகள் நம்ம வழக்கத்துல இருக்கோ அவங்க எல்லோரையும் இந்த நாள்ல ஒண்ணா பாக்கலாம்.
அப்புறம் மாட்டுப்பொங்கல் அன்னைக்கு சில சிறப்புப்பணிகள்(?) எப்பவும் காத்துக்கிடக்கும் அது என்னன்னா மாடு குளிப்பாட்டுறது,கொம்புக்கு பெயின்ட் அடிக்கறது,பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் வாங்குறது,பொங்கல் வைக்க இடம் தயார் பண்றது இப்படி இதெல்லாம் செய்யும் போது ஒரு ராமராஜன் படத்துல அவருக்கு பதிலா நடிச்ச ஒரு பீலிங்(அவரு அளவுக்கு நம்மால முடியாது ஏதோ நம்மால முடிஞ்சது).
( கொம்பிலும் நான் கொஞ்சம் கறப்பேன்)
காலையில் முன்னோர்களுக்கு படையல் வைச்சு வணங்கிட்டு அன்னைய ஒரிஜினல் ஹீரோவ தயார்படுத்தும் வேலையில இறங்கியாச்சு.சமத்தா நின்னா மேதை படம் பாக்க கூட்டிட்டு போறேன்னு சொன்னதால தாத்தா வீட்டு பசு எந்த டிஸ்டர்ப்பும் பண்ணாம அமைதியா நின்னுச்சு.
சுத்து வட்டாரத்துல இருக்குற சில குடும்பங்கள் ஒண்ணா சேர்ந்து,அவங்க வீட்டுல இருக்குற கால்நடைகள் எல்லாத்தையும் ஒரே இடத்துல கூட்டிவந்து ஒண்ணா பொங்கல் வைச்சு படிச்சு அவங்களை சிறப்பிச்சு,நன்றி சொல்லி,அவங்களுக்கு இந்த வருஷம் நோய் எதுவும் தாக்காம இருக்கணும்னு வேண்டிக்கிட்டு எல்லோரும் ஒண்ணா பொங்கலோ பொங்கல் அப்படின்னு கூவுனது பக்கத்து ஊருக்கே கேட்டிருக்கும்.கையில தட்டு வைச்சுக்கிட்டு குச்சியால வாண்டுகள் செம தட்டு தட்டுனுச்சுங்க.
உறவினர்கள்,நண்பர்கள் கேலி,கிண்டல் பேச்சு,நலம் விசாரிப்புகள்,வாழ்த்துபரிமாற்றம் அவர்களுடன் நேரச்செலவிடுதல் இவைதான் ஒரு பண்டிகையின் உண்மையான கொண்டாட்டம், உண்மையான மகிழ்வு இது எல்லாமே எனக்கு ஒவ்வொரு பொங்கலுக்கும் என்னோட கிராமத்துல கிடைக்கும்.இது வேறெந்த பண்டிகைக்கும் கிடைக்காது.
அடுத்த நாள் மாடு பிடித்த கதையை எழுதலாமா?வேணாமா யோசித்துக்கொண்டிருக்கிறேன் பார்ப்போம்.
__________________________________________________________________________________________________________________________
இந்த வாரம் வலைச்சரத்தில் எழுதி வருகிறேன்.உங்கள் ஆதரவை அங்கும் எதிர்பார்க்கிறேன் ,நன்றி.
_____________________________________________________________________________________________________________________________
Tweet | ||||||