Showing posts with label நிவாரணம். Show all posts
Showing posts with label நிவாரணம். Show all posts

Saturday, January 21, 2012

தானே முன் வரலாமே...


வலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்,

தானே புயல் கடந்த ஆண்டு இறுதியில் கடலூர்,புதுவை வட்டாரப்பகுதிகளை புரட்டிப்போட்டு சென்றதை நீங்கள் அறிவீர்கள்.அதற்கான நிவாரணங்கள் அரசு,தனியார் என பல இடங்களில் இருந்து வந்த வண்ணம் உள்ளது.ஆனால் சேதம் ,இழப்பு கணக்கிட இயலாதது.அவற்றை ஈடு செய்வது என்பதும் முடியாத ஒன்றுதான்.

நம் மக்களுக்கு நமது சகோதர,சகோதரிகளுக்கு நாம் உதவாமல் போவோமா?குஜராத் பூகம்பம்,கார்கில் நிதி,சுனாமி நிவாரணம் இப்படி எல்லா நேரங்களிலும் நமது மக்களுக்காக நாம் அளித்த பங்கு கணிசமானது என்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூராமமலிருக்க முடியாது.
இப்போது தானே ஏற்படுத்திய துயரத்தை சற்றே துடைக்கும் வகையில் விகடன் குழுமம் தனது சார்பில் ரூ.10 லட்சத்தை அளிக்க முன் வந்துள்ளது அது மட்டுமல்லாமல் அந்த நிறுவனம் சார்பில் வாசகர்களிடமிருந்தும் உதவிக்கரம் நீட்ட கோரியுள்ளது.வாசகர்களும் ஆதரவுக்கரம் நீட்டியவண்ணம் உள்ளனர்.

நண்பர்களே!வலைப்பூ வாசகர்களே!

இந்தப்பதிவு மூலம் உங்களையும் தங்களால் முடிந்த அளவு தானேவால் ஏற்ப்பட்ட துயரம் துடைக்க உதவுமாறு வேண்டுகிறேன்.இதன் விபரங்களுக்காக விகடனால் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேகப்பக்கம்  http://www.vikatan.com/thane/  இங்கே சென்று விபரங்கள் பெறலாம்.இது குறித்த விகடனின் அறிவிப்பு இதோ,
________________________________________________________________________________________________________________
நெஞ்சில் ஈரம் உள்ள அனைவரும் நம் தமிழ்ச் சொந்தங்களின் துயர் துடைக்க முன்வரலாம். Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சேமிப்பு கணக்கு எண் 000901003381 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: ICIC 0000009 , நுங்கம்பாக்கம் கிளை, சென்னை-600034) வழியாக அனுப்பலாம்.
வெளிநாட்டு வாசகர்கள் எங்களின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IDIB000C032 , எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருப்பினும், கீழே நாங்கள் அளித்து உள்ள படிவத்தையும் தயவுசெய்து  பூர்த்திசெய்து, 'தானே துயர் துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
வாருங்கள் வாசகர்களே... 'தானே’ துயரை நாமும் துடைப்போம்!
நெஞ்சில் ஈரம் உள்ள அனைவரும் நம் தமிழ்ச் சொந்தங்களின் துயர் துடைக்க முன்வரலாம். Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சேமிப்பு கணக்கு எண் 000901003381 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: ICIC 0000009 , நுங்கம்பாக்கம் கிளை, சென்னை-600034) வழியாக அனுப்பலாம்.
வெளிநாட்டு வாசகர்கள் எங்களின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IDIB000C032 , எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருப்பினும், கீழே நாங்கள் அளித்து உள்ள படிவத்தையும் தயவுசெய்து  பூர்த்திசெய்து, 'தானே துயர் துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
வாருங்கள் வாசகர்களே... 'தானே’ துயரை நாமும் துடைப்போம்!
- ஆசிரியர்


- ஆசிரியர்

 ____________________________________________________________________________________________________________


நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் உதவி சேகரித்து வருகிறேன், கணிசமான தொகை சேர்ந்ததும் விகடன் மூலம் உரியவர்களுக்கு சேர்க்க திட்டமிட்டுள்ளேன்.
எனது icici savings acc.no - 099601500497
Name- M.GOKUL
Branch- Karaikal .
இந்த சேமிப்பு கணக்கிற்கும் நீங்கள் பணமாக அனுப்பலாம். வலைப்பூ நண்பர்கள் சார்பாக அந்த பணத்தை அனுப்பி விடுகிறேன்.எனது கணக்கிற்கு பணம் அனுப்புபவர்கள் gokul304@gmail.com மெயிலுக்கோ அல்லது +91 9486146881,  +91 9791961976 என்ற எனது தொலைபேசியிலோ முன்னமே தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து விடுங்கள். பணம் அனுப்பியவர்களது பெயரை பணம் அனுப்பியதும் எனது தளத்தில் பணம் அனுப்பியதற்கான சான்றுடன் வெளியிடுகிறேன்.முடிந்தவரை பணம் அனுப்புபவர்கள்(எனக்கு அனுப்புபவர்கள் மட்டும்) அடுத்த வெள்ளிக்குள்(27/01/2012) அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முடிந்தவரை இந்த பதிவை பலரிடம் கொண்டு சேர்க்கவும்.நன்றி.

மேலும் வாசிக்க "தானே முன் வரலாமே..."

Tuesday, January 10, 2012

“நிவாரணந்தா”வான நித்தியானந்தா...




நித்தியானந்தா இந்த பெயரை கொஞ்ச நாளா சொல்லும்,கேட்கும் பல பேருடைய(என்னையும் சேர்த்து தான்) ரியாக்சன் என்னவாக இருந்திருக்கும் அப்படிங்கறது உங்க எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.கேலி,கிண்டல்,நையாண்டி,நக்கல்,கோபம்,சிலருக்கு இயலாமை கூட(எதுக்குன்னு கேக்காதீங்க).ஆனா சமீபத்துல இந்த எல்லா ரியாக்சனும் மறந்து போய் மரியாதையுடன் பார்க்க வைத்திருக்கிறார் புதுச்சேரியின் சில கிராமப்புற மக்களை.


இங்குள்ள சில கிராமங்களுக்கு இப்போதைக்கு அவர்தான் தானே வந்த தானைத்தலைவர்,ஆமா,தானே புயலால் வந்த தானைத்தலைவர்.தானே புயல் புதுவை,கடலூர் வட்டார பகுதிகளை புரட்டிப்போட்டது எல்லாருக்கும் தெரியும்.அது நித்தியானந்தாவின் மேலிருந்த களங்கத்தையும் சற்றே(சற்று தான்) புரட்டிப்போட்டிருக்கிறது.



ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தபட்ச சேதம் 5000ரூபாயாவது(விவசாயிகள்,வியாபாரிகள்,தொழிற்சாலைகளின் சேதம்,இழப்பு ரொம்ப அதிகம்)இருக்கும்.புயலால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் எதிர்பார்த்திருந்தது உடனடி நிவாரணம்.நிவாரணமென்றால் பணம் கிடையாது.அன்றைய வேளை சாப்பாடு,தாகத்துக்கு தண்ணீர்.உடுத்திக்க துணி.புதுவை முதல்வர் அறிவித்த குடும்ப அட்டைக்கு ரூ.2000 கூட யாருக்கும் பெரிதாய் தெரியவில்லை.இங்கே பாண்டிச்சேரியில் பணம் கிடைச்சா நம்ம மக்கள் என்ன பண்ணுவாங்கன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.( எப்பேர்ப்பட்ட புயலிலிலும் உடனடியா மீண்டது கள்ளுக்கடைகளும் சாராயக்கடைகளும் தான்).




பத்து நாள் கழித்து இப்போதான் மத்தியக்குழு வந்து சேதங்களை பார்வையிடுகிறது.(இன்னும் ஒரு ரெண்டு வாரம் கழிச்சு வந்திருக்கலாமே –இப்படி ஒரு டக்க எங்கயும் பாத்திருக்க முடியாது). இவங்க போய் அங்கே அறிக்கை தாக்கல் செஞ்சு,ஆலோசனை நடத்தி,முடிவுஎடுத்து,அமுல்படுத்தறதுக்குள்ள............ஹாவ்வ்வ்வ்(கொட்டாவி).
இந்த நிலைமையில்தான் களமிறங்கினார் நித்தியானந்தா.களமிறங்கினார்னா எப்படி ?அவரே நேரிடையா புதுவையில் அவருக்கு இருக்குற ஒரு இடத்துல நிவாரணக்குழு அமைச்சு அதுவும் புயலடித்த இரண்டாம் நாளே அவரே நேரில் வந்து அந்த பகுதி மக்களுக்கு மூன்று வேளை உணவு,குடிநீர்,துணி,குளிருக்கு போர்வைகள் வழங்கி உடனடி நிவாரணம் என்றால் என்ன என்பதை உணர்தி சென்றார்.


இத்தனைக்கும் அவர் சர்ச்சையில் சிக்கிய சமயம் இதே இடம் சிலரால் அடித்து சேதப்படுத்தப்பட்டது.இன்று அதே இடத்தில் அந்த பகுதி மக்களுக்காக நிவாரணமுகாம் அமைத்து அந்த மக்களின் மனதில் ஒரு படி உயர்ந்து நிற்கிறார்.அவரது இந்த நிவாரணப்பணியின் நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.அதன் ஆதி,அந்தமெல்லாம் ஆராயாமல்,அவர் தன் மேலுள்ள அவப்பெயரை மறக்கடிக்க இது போல சேவை செய்கிறார் என்று பேச்சு அடிபட்டாலும் அவரது இந்த செயலால் இன்னும் கொஞ்ச நாளாவது நிவாரண உதவி பெற்ற மக்கள் மனதுக்குள் அவரை வாழ்த்திக்கொண்டிருப்பார்கள் என்பது மட்டும் உண்மை.




மேலும் வாசிக்க "“நிவாரணந்தா”வான நித்தியானந்தா..."