Showing posts with label செங்கொடி. Show all posts
Showing posts with label செங்கொடி. Show all posts

Tuesday, August 30, 2011

இப்படி கைய விரிச்சுட்டீங்களே அம்மா!!!


இப்படி கை விரிச்சுட்டிங்களே அம்மா!
ஊர் கூடி தேர் இழுக்கும் போது சக்கரத்தையே உடைச்சது போல இருக்குது என்னால முடியாது ன்னு நீங்க சொல்றது.ராஜபக்சேவின் அரசுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதித்து சட்டசவையில் தீர்மானம் நிறைவேற்றிய போது ,ஓஹோ! ஈழம் பற்றிய தன் பழைய நிலையிலிருந்து விடுபட்டு விட்டாரென எண்ணிஇருந்தபோது பழைய குருடி கதவை திறடி என்ற கதையாகஆகிவிட்டதே!.
பிரியங்கா காந்தி சிறையிலிருந்த நளினியை பார்க்கச்சென்றபோது எதிர்த்து அறிக்கை விட்ட இவர் சொன்னது

ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி பொய் பார்க்கலாமா? அது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. எது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

இவர் இன்றைக்கு சொன்னது


அரசமைப்புச் சட்டத்தின் பொருத்தமான தன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலித்த மத்திய அரசு, மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது.
இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்த நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.
எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்.  இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரசாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.”
சும்மா பேச்சுக்காவது முந்தய ஆட்சியில் கலைஞர் செய்தது போல மைய அரசுக்கு கடிதம் எழுதுகிறோம் என அறிக்கை.விட்டிருக்கவேண்டியதுதானே? எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்ற விளக்கங்கள் தேவையா?.இவர் சொல்கிறார் கலைஞர் ஒன்று தெரியாததுபோல ரெட்டை வேடம் போடுகிராரென்று!ஒன்று புரிகிறது அரசியல்வாதிகள் எல்லாவற்றையுமே அரசியலாகத்தான் பார்க்கிறார்கள்!

இன்னொருவிசயம்!
உணர்வின் வெளிப்பாடும் கோபமும் வெளிப்படும்போது சிந்தனை கண்ணை மறைத்து,ஆதங்கம் இயலாமை,ஆற்றாமை மனதை செலுத்தியதன் விளைவாக உணர்வுத்தீயை உடலில் ஊற்றி கருகியிருக்கிறது ஒரு தளிர்!!
இதை நியாப்படுத்தவில்லை.தயவுசெய்து யாரும் நியாயப்படுத்தவும் வேண்டாம்!
இந்த காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் ஒரே ஒரு வேண்டுகோள் விடுத்துக்கொள்கிறேன்!தயவுசெய்து செங்கொடி யார் ?என்று மட்டும் கேட்டு விடாதிர்கள்!இதை ஏன் சொல்கிறேன் என்றால்?முத்துக்குமார் யார் என்று கேட்டவர்தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
செங்கொடி செய்ததை தியாகமென்று கூற வரவில்லை என்ன செய்வது உயிர் பலி வேண்டாமென்று கூறவே இங்கு உயிர் விட வேண்டியுள்ளது!அந்த உயிருக்கு விலையாகவாது கழுத்தை இருக்கியிருக்கும் கயிற்றைத் தளர்த்த குரல் கொடுப்போம்!


நமது சகோ மதி.சுதாவின் வேண்டுகோள்!





டிஸ்கி-இப்போது கிடைத்த செய்தி .அம்மா சட்டசபையில் தூக்கு தண்டனையை எதிர்த்து தீர்மானம்!(ஆண்டவா!அம்மா மனசு கடைசி வரை மாறாம பாத்துக்க)&நீதிமன்றம் எட்டு வாரம் தடை!(நிரந்தர தடையா மாறனும்)
மேலும் வாசிக்க "இப்படி கைய விரிச்சுட்டீங்களே அம்மா!!!"