Showing posts with label அணுஉலை. Show all posts
Showing posts with label அணுஉலை. Show all posts

Tuesday, September 13, 2011

இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்?





ஊழலுக்கு எதிரா ஒரு மிகப்பெரிய போராட்டம் அன்னா ஹாசரே அவர்களால் நடைபெற்று நாட்டின் அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு திரண்டிருந்தது.மகிழ்ச்சி!


ஆனா இப்போ நம்ம தமிழ்நாட்டில் மக்களின் உயிருக்கு ஊரு விளைவிக்கும் வகையில் கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள அணுஉலைகளை திறக்கக்கூடாது என போராடத்துவங்கி இன்று 127 பேர் உண்ணாவிரத போரட்டத்தை துவக்கி உள்ளனர்!
இந்த போராட்டத்திற்கு நம்மால் முடிந்த வரை சமூக வலைத்தளங்களில் ஆதரவு திரட்டுவோம்!நம் சக பதிவர் கூடல் பாலா நேரடியாக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்!அவருக்கும் நமது ஆதரவையும்,போராட்டம் வெற்றி பெற நம் பங்களிப்பையும் தருவோம்!


முதலில் ஏன் அணுஉலையை திறக்க்கக்கூடாது  என்பவர்கள் பாலாவின் இந்த பதிவு கள்பதிலளிக்கும்!

கூடங்குளம் அணுமின் நிலையம் :பில்டிங் வீக் ,பேஸ்மென்ட் அதைவிட வீக் !


கூடங்குளம் அணு உலைக்கெதிராக போராட்டம் ஏன் ?நேரடி ரிப்போர்ட் .


இந்த பதிவுகளுக்கு நான்  அளித்த பின்னூட்டத்தை மீண்டும் எனது  கருத்தாக இங்குவைக்கிறேன்!


"ஐயா!மன்மோகன் நல்ல விஷயங்கள்ல மத்த நாடுகளோட போட்டி போடுங்க!இது மாதிரி விஷயங்கள்ல வேண்டாம்!

காமன்வெல்த் பாலம் ரேஞ்சுக்கு அணுஉலைகள் கட்டப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.நம்ம நாமே அணுக்கதிர்களால் தாக்கிக்க சூழலை உருவாக்காதீர்கள்!
முடிஞ்சா பேஸ்மட்டத்த ஸ்ட்ராங்கா போடுங்க இல்லன்னா ஆணியே புடுங்க வேண்டாம்!"








"கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இது போன்ற ஒரு விபத்து நிகழ்ந்தால் மக்களை எப்படி காப்பாற்றுவீர்கள் என்ற கேள்விக்கு எந்த ஒரு அதிகாரியும் இது வரை சரியான பதிலை அளிக்கவில்லை .
//
இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பாதுகாப்பானது என பிரதமர் சிலநாட்களுக்கு முன் நம் பிரதமர் சொல்லிருந்தார்!
இதற்க்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
அப்படி இங்கே உள்ள அணு உலைகள் உண்மையிலேயே பாதுகாப்பானது தான் என்றால் விஷயம் தெரிந்த மக்கள் பிரதிநிதிகளை கூட்டி விளக்கமளிக்கவேண்டியதுதானே?
சரி உண்மையிலே பாதுக்காப்பானது என நிரூபித்தாலும் சமீபத்தில் ஜப்பானில் நிகழ்ந்தது போன்று இயற்கைச்சீற்றங்களைத்தாங்கும் சக்தி உள்ளது என்பதற்கு என்னை உத்திரவாதம்.அப்படி நடக்கும் பட்சத்தில் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பை விட கதிரியக்கத்தால் ஏற்படும் பாதிப்பே அதிமாகும் அல்லவா?
முதலில் பாதுகாப்பு குறித்த அணைத்து விசயங்களையும் பூர்த்தி செய்துவிட்டு அப்பறம் அணு உலைகளை திறப்பது பற்றி அரசு யோசிக்கட்டும்!
நாங்கள் இருளில் கூட மூழ்கி இருக்கிறோம்(உயிரோடு)."




இன்னுமொரு பதிவுலக நண்பர் சூர்யாஜீவா அவர்களும் தனது ஆதரவு கரத்தை தனது பதிவுகளின் மூலம் நீட்டி உள்ளார்!

கூடும் குலம்,



நான் இதற்க்கு முன்பு கவிதை வடிவில் ஒரு பதிவிட்டுளேன்!

இந்த நிலைமை வரணுமா தமிழ்நாட்டுக்கு?


நான் ஒன்றும்ம் கண் மூடித்தனமாக அணுஉலைகளை மூடச்சொல்லி சொல்லவில்லை.நான் ஒரு வேதியியல் முதுநிலை பட்டதாரி!எனக்கு ஓரளவுஅணு உலைகளால் ஏற்படும் நன்மை பற்றி தெரியும்.அணுக்கதிர் வீச்சால் ஏற்படும் தீமைகளைப்பற்றியும் தெரியும்.கதிர்வீச்சின் பாதிப்பு எவ்வளவு காலம் வரை தொடரும் என்றும் தெரியும்.அதனால் தான் சொல்கிறேன்,அணுஉலைகள் உண்மையிலே யே பாதுகாப்பானதாகஇருந்தால்எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்று மக்களுக்கு உணர்த்திவிட்டு,ஒருவேளை கதிர் வீச்சு ஏற்பட்டால் அப்பகுதி மக்களை எந்த அளவிற்கு பாதுகாப்பாக காப்பாற்றுவீர்கள் என்று செயல் முறையில் காட்டிவிட்டு,மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு எவ்வித இடைஞ்சலும் வராது என உத்திரவாதம் அளித்துவிட்டு அணுஉலைகளை திறப்பதைப்பற்றி யோசியுங்கள்!போராடுபவர்களின் நோக்கமும் இதுதான்!
_________________________________________________________________________________________
நேற்று கூட பிரான்ஸ் நாட்டு செர்நோபில் அணுநிலையத்தில் ஒருவர் 
உயிர்இழந்திருக்கிறார்!உண்மையான காரணத்தை நிர்வாகத்தினர் 
சொன்னதாக தெரியவில்லை.மேலும் கவலை அளிக்குவிஷயமாகவும்,நமக்கு எச்சரிக்கவும்செய்கிறது!
_________________________________________________________________________________________
மேலும் வாசிக்க "இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்?"

Saturday, August 27, 2011

இந்த நிலைமை வரணுமா தமிழ்நாட்டுக்கு?



ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய
அணுகுண்டில் அடிபட்டு
மருத்துவமனையில் கிடந்தவன்
மயக்கம் தெளிந்து கேட்டான்
நான் எங்கிருக்கிறேன் என்று
நர்ஸ் சொன்னாள்
நாகசாகி என்று!



மேலும் வாசிக்க "இந்த நிலைமை வரணுமா தமிழ்நாட்டுக்கு?"