Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

Monday, December 12, 2011

குடிகாரன் பேச்சு விடிஞ்சா ???


ஏண்டா இன்னைக்கு ஊருக்கு கிளம்பினோம் என்று அந்த பேருந்து நிலையக்கூட்டத்தை பார்த்தவுடன் தலையில் அடித்துக்கொண்டான்  கபிலன்.எல்லாரும் அப்படி எங்கதான் போறாங்க என ஒவ்வொருத்தரையும் நிறுத்திக்கேட்க துடித்தான்.திருப்பி அதே கேள்வி அவனிடம் யாராவது கேட்டால்.?அதனால் பல்லைக்கடித்துக்கொண்டு வரப்போகும் பேருந்துக்காக காத்திருந்தான்.


பேருந்துக்கட்டணம் ஏத்தியதும் புலம்பித்தள்ளியவர்கள் இப்ப சகஜமாகி பயணத்தை தொடர்வது வியப்பைத்தந்தாலும், நம்மால் என்ன செய்யமுடியும் என்ற மக்களின் ஆதங்கம் கண் முன்னே விரிந்தது.இப்படித்தான் போராட எவ்வளவோ விஷயங்கள் இருந்தும் ஒரு சிலர் தான் போராடவும் குரல் கொடுக்கவும் செய்கிறார்கள்.மக்களைப்பொருத்தவரை அவர்களுக்கெல்லாம் நேரமிருக்கிறது நமக்கெல்லாம் வேலையிருக்கிறது என்ற எண்ணம்.

                  
மனதுக்குள் ஏதேதோ ஓடிக்கொண்டிருக்க சட்டென்று எல்லோரும் பரபரப்பானார்கள்.ஆமாம் பேருந்துதான் வந்தது.இடம் பிடிக்க என்னென்ன தகிடுதத்தம் செய்ய முடியுமோ எல்லாம் நிகழ்ந்தது.பயிற்சியில்லாத நான் தோற்றுப்போனேன்.சரி யாராவது ஒருத்தர் தனி ஆளா சீட்டு போட்டிருப்பார் என நினைத்து பஸ்சுக்குள் நுழைந்து துழாவினேன்.ரெண்டு ஆள் சீட் ஒன்றில் ஒரு துண்டு கிடந்தது.சரி இதில் உக்காந்துக்குவோம் ஒருத்தரா இருந்தா நம்ம அதிர்ஷ்டம் இல்லேன்னா இறங்கி அடுத்த வண்டியப்பாப்போம்னு அந்த சீட்டில் அமர்ந்தேன்.
              

கூட்டத்தில் ஒருத்தரு என்னைப்பாத்துக்கிட்டே வந்தாரு.அவரு மட்டும் இந்த சீட் போட்டவரா இருக்கக்கூடாதுன்னு நினைச்சுக்கிட்டேன்.ஏன்னா அவர பாத்தவுடனே தெரிஞ்சுது நல்லா குடிசிருக்காருன்னு,அதுக்குள்ளே பஸ் வேற கிளம்பிடுச்சு,எதிர்பார்த்த(பார்க்காத)மாதிரியே அவருதான் என் பக்கத்தில வந்து ஒக்காந்தாரு.எந்த ஊரு தம்பி?என்றார்.எனக்கு அடிக்காமலே போதை ஏறியது.ஊரை சொன்னேன்.அட எனக்கும் பக்கத்து ஊர்தான் என ஆரமித்து பேச இல்லை உளற ஆரம்பித்தார்.நடுவில் கண்டக்டரிடம் இருபது ரூபாய் கொடுத்து விட்டு நூறு ரூபாய் என பஞ்சாயத்து வேறு.என்னை என்ன குடிசிருக்கேன் ன்னு ஏமாத்தப்பாக்குறியா?இல்ல என்கிட்டே காசு இருக்காதுன்னு நெனைக்கறியா என டவுசர் பாக்கெட்டிலிருந்து ஒரு நூறு ரூபா கட்டு எடுத்து ஆட்டிக்கொண்டே பாத்தியா?ன்னார்.நான் ஜன்னலோரம் திரும்ப கண்டக்டர் என்னைய கோத்துவிட்டார் .வேண்ணா அவரையே கேட்டுப்பாரு அப்படின்னார்.ஏந்தம்பி நான் எவ்வளவு கொடுத்தேன் நீங்க சொல்லுங்க நான் கேக்குறேன் வேற எவன் சொன்னாலும் கேக்க மாட்டேன்.நான் இருவது ரூவாதாங்க கொடுத்தீங்கன்னேன்.இந்த படிச்ச புள்ள சொல்றதால விடறேன்.யாரையும் ஏமாத்தக்கூடாது தெரியுதா?நீங்களாவது சொல்றீங்கலேன்னு மனசுக்குள் சந்தோசம் பின்னே கம்பெனியில நீயெல்லாம் என்னத்த படிச்சுட்டு வந்தேன்னு கேக்குராங்களே?

                    

பஞ்சாயத்து முடித்து உக்கார்ந்தவர் பணத்தை மேல்பாக்கேட்டில் வைத்தார்.அது வெளியே துருத்திக்கொண்டு இருந்தது.செல்போனை எடுத்து பேச ஆரமித்தார்,அவரது மனைவி போலிருக்கிறது,குடித்திருப்பதை கண்டிபிடித்து திட்டுவதும் இவர் கெஞ்சுவதும் அவரது பேச்சில் தெரிந்தது.பேசி முடித்து செல்போனையும் சட்டைப்பாக்கேட்டிலே வைத்தார் ஏற்கனவே பணம் துருத்திக்கொண்டிருக்க இப்போ பணமும் செல்போனும் கீழே விழும்படி இருந்தது.சொல்லலாமா வேணாமா என மனதுக்குள் பட்டி மன்றம் நடத்தி.ஏங்க பணம் விழப்போகுதுன்னு சொன்னேன்.ம்ம்ம்என்னதான் தன்னியடிசாலும் நான் ஸ்டடியா இருப்பேன் ன்னார்.இதுக்குதான் யோசிச்சேன்.சரி நமக்கென்னன்னு மேலே பேசுவதை தவிர்த்து ஜன்னலோரமாய் பார்வையை திருப்பிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டேன்.அவர் தூங்கி தூங்கி மேலே விழுந்தவண்ணம் இருந்தார்.
பணத்தையும் கவனித்தபாடில்லை.நல்ல வேளையாக எனது ஊர் வந்தது.அப்பாடா என இறங்கிக்கொண்டேன்.


ரெண்டுஊர் தள்ளி கண்டக்டர் தூங்கிக்கொண்டிருந்தவரின் தோளைதட்டி யோவ ஊர் வந்துடுச்சுய்யா!எறங்குன்னு அதட்ட அரக்கப்பரக்க இறங்கினார்.எறங்குகையில் பாக்கெட்டைத்தொட்டவர் அதிர்ந்து அய்யய்யோ என் பணத்தையும் போனையும் காணோம் என அலறினார்!பாக்கேட்டுலதான் வைச்சிருந்தேன் எங்க போச்சுன்னு தெரியலையே,அதை வைச்சுத்தான இந்த மாசம் வூட்டுல பொழப்பு நடத்தணும்னு தெளிந்து புலம்பினார்.யோவ பணத்த வைச்சுக்கிட்டு ஒழுங்கா வராம இப்படி போதைய போட்டுக்கிட்டு வந்தா இப்படிதான்யா நடக்கும்.பக்கத்துல யாரு இருந்தா தெரியுமா?தெரியல்லையா பக்கத்து ஊர் தம்பி பாத்தா படிச்ச புள்ளை மாதிரி இருந்தது.பக்கத்து ஊரும இருக்கிறது ஏன்யா இப்பல்லாம் திருடன்லாம் படிச்சவன் மாதிரித்தான்யா வேசம் போடுறான்.நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும் பொ இப்ப புலம்பி என்ன பண்றது எறங்கு டைம் ஆகுதுன்னு எறக்கிவிட்டுட்டு பஸ் புறப்பட்டது.

                     
 ஐயோ புள்ளைக்கு ஸ்கூலுக்கு,வீட்டுக்கு சாப்பாடுக்கு எல்லாத்துக்கும் வைச்சிருந்த பணம் இப்படிபோச்சே ன்னு கதறினான்.புலம்பியபடி வீட்டைநோக்கி நடையைகட்டினான்.வீட்டுக்குப்போனவுடன் பொண்டாட்டியையும்,குழந்தையும் பார்த்தவுடன் அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.பணமெல்லாம் போச்சுடி கண்ணு,இந்த பாழாப் போன குடியால எல்லாம் போச்சுடி ன்னு புலம்ப ஆரம்மித்தான்.சத்தியமா இனிமே குடிக்க மாட்டேன்டி நம்ம புள்ளை மேல சத்தியம்.


                   
இனி நடந்தது........
அடுத்தநாள் காலை அவனது மனைவியின் செல்போன் அடித்தது.பேசியது கபிலன் தான்.ஊர் பேருந்து நிலையத்தில் இருப்பதாக கூறி தான் தான் பணத்தையும் செல்போனையும் எடுத்த்துச்சென்றதாய் கூறி வந்து வாங்கிக்கொல்லுமாறு கூறினான்.போய் பணத்தை வாங்கிக்கொண்டு ஐயா சாமி என் கண்ணை தொறந்துட்டய்யா இனிமே வாழ்க்கையில குடிப்பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன்னு சொன்னான்.
கபிலன் மனதுக்குள் குடிகாரன் பேச்சு விடிஞ்சாப்போச்சு பழமொழி நினைவுக்கு வந்தாலும் ஒரு மனநிறைவுடன் பேருந்துக்கு காத்திருக்க ஆரம்பித்தான்.



மேலும் வாசிக்க "குடிகாரன் பேச்சு விடிஞ்சா ???"