Showing posts with label குஜராத். Show all posts
Showing posts with label குஜராத். Show all posts

Wednesday, September 21, 2011

காந்தி பிறந்த மண்!!!


காந்தி பிறந்த மண் –இன்று
கலவரத்திற்கு தத்துக்கொடுக்கப்பட்டது.


மதத்தின் பெயரால்
மனித மிருகங்கள் சில
மதங்கொண்டு
மனிதரையே மாய்க்கின்றன!

இதயமே இல்லாமல்
இரயில் பெட்டிகளை எரித்து
இரக்கமே இல்லாமல்
ஏதுமறியாதோரை கொல்கின்றன!

பதவிக்காக
பணயம் வைக்கப்படுகின்றன-விலை
மதிப்பேயில்லாத
மனித உயிர்கள்!

நாற்காலிக்காக
நசுக்கப்படும்
அப்பிராணிகள்
அப்பாவி மக்கள்!

கடவுளின் பெயரால்
கற்பழிப்பு!
கொலை!!
கொள்ளை!!!


ஆம்!
காந்தி பிறந்த மண்-இன்று
கலவரதிற்க்காக தத்துக்கொடுக்கப்பட்டது.


கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் எறிந்த போது ஏன் மனம் எரிந்து எழுதியது.
இப்போது ஏனோ நினைவுக்கு வந்ததால் பதிவிடுகிறேன்!ஏன்னு கேக்காதிங்க சொல்லிப்புட்டேன்!ஆமா!





மேலும் வாசிக்க "காந்தி பிறந்த மண்!!!"