இன்னைக்கு இந்த செய்திய பாத்துட்டு ரொம்ப ஷாக் ஆகிட்டேன்!நாம எந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லாம இருக்கோம்னு தெரியுது. நாமளும் சிகரெட் பிடிக்கலைன்னாலும் அதோட விளைவுகளை தெரிஞ்சோ தெரியாமலோ அனுபவிச்சிட்டு வருகிறோம்.
இனி யாரும் எனக்கு சிகரெட் பழக்கம் இல்லேன்னு சொல்லமுடியாது போலிருக்கு.அந்த செய்தி இதோ!
ஒருகொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் என புதுடில்லியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சிமையம் போன்றவை இணைந்து நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டசெஸ்ட் ரிசர்ச் பவுண்டேசன் இயக்குனர் சந்தீப் சால்வி இதனை தெரிவித்தார்.
மேலும் புதுடில்லியை சேர்ந்த பத்ரா மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சஞ்சீவ் பகாய் பேசும் போது இந்தியாவில் காற்றினால் ஒலியினால், மாசுவால் மனித உடல் நலத்திற்கு விளையும் கேடு குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றார்.
ஒலி மாசுபாட்டால் ஆண்டு தோறும் ஒரு லட்சம் இந்திய குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், மரபியல் குறைபாடு உண்டாவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
செய்தி-தினமலரில் வந்தது.
இந்த கொசுவர்த்தி பண்ற பாட்டுக்கு கொசு படுத்தற பாடு பரவால்ல போலிருக்கே!
இதுக்கு தீர்வு என்னன்னா வலைக்குள்ள போறதுதான்.என்னோட வலைய சொல்லலைங்க கொசுவலை.(கொசுவுக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்னு குசும்புக்கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது!)
| Tweet | ||||||


