Showing posts with label எஸ்.எம்.எஸ். Show all posts
Showing posts with label எஸ்.எம்.எஸ். Show all posts

Saturday, September 24, 2011

இவங்க இப்படித்தான் சொல்வாங்க பாஸ்!!




டீ மாஸ்டர்-இப்ப போட்ட வடை சார் (எப்ப கேட்டாலும்)


மெடிக்கல் ஷாப் ஓனர்- அதே மருந்து தான் சார்,கம்பெனி தான் வேற
(டாக்டர்ட காட்டினா நான் போக சொன்ன மெடிக்கல்தான் ஆனா மருந்துதான் வேறங்கறார்)

ஸ்கூல் பையன் –அம்மா இன்னைக்கு வயிறு வலிக்குதும்மா (நீ கொழந்தையா இருக்கச்ச இததான் சொல்லுவன்னு அம்மா சொன்னாங்க)

ரியல் எஸ்டேட் காரர்- சைட்டுல இருந்து பத்து நிமிஷத்துல மெயின் ரோடு வந்துடும் (இந்த சைட்டுல இருந்துன்னு’ன்னு சொன்னமா?)

காய்கடைக்காரர்- காலைல வந்ததுதாம்மா (என்னைக்கு காலைலன்னு சொன்னமா?)

சேல்ஸ் மேன்- இந்த ஆபர்(offer) இந்த மாசம் கடைசியோட முடியுது (போன மாசமும் இதயே தான் சொன்னீங்க?)

துணிக்கடைக்காரர்- இந்தத்துணி சாயம் போகவே போகாது (வெள்ளைத்துணியை காட்டினாலும் இதே டயலாக் தான்)

கண்டக்டர்- பஸ் நடுவில எங்கேயும் நிக்காது பாய்ன்ட் டூ பாய்ன்ட் (நடுவில எத்தனை பாய்ன்ட் இருக்குன்னு சொன்னமா?)

பேங்க்ல லோன் தர்றவர்- இருக்கற பேங்க்’லேயே எங்க பேங்க்’லதான் இன்ட்ரஸ்ட் கம்மி (கடன் தர்ரதுல இன்ட்ரஸ்ட் கம்மியா?)

பரிட்சைக்கு போகும் கேர்ள்- எல்லாம் படிச்சாச்சா?ஐயோ!ஒன்னுமே படிக்கலையே! (படிக்காமாலே பாஸாகும் வித்தைய எங்களுக்கும் சொல்லக்கூடாதா?)

இன்சூரன்ஸ்- இந்த பாலிசி எடுத்திங்கன்னா வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும் (யாரு வாழ்க்கைன்னு சொன்னமா/)

அரசியல்வாதி- அந்த ஊழலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்ல(ஏன்னா என் பேரு சம்பந்தம் இல்லன்னு கிரேசி மோகன் டயலாக் மாதிரி இல்ல இருக்கு)

பரிட்சைக்கு போகும் பையன் – எல்லாம் படிச்சாச்சா?இன்னைக்கு எக்ஸாமா மச்சான்?

கடைசியா சொன்னவரு தான் சரியா சொன்னாருன்னு நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்குறிங்க?


மேலும் வாசிக்க "இவங்க இப்படித்தான் சொல்வாங்க பாஸ்!!"

Sunday, September 18, 2011

தனிமை கிடைச்சா நீங்க என்ன பண்ணுவீங்க???


நிருபர்-சார்!இப்பல்லாம் கொலை,கொள்ளை அதிமாகிட்டுவருதே இதுக்கு நீங்க என்ன்சொல்ல்றீங்க?
டி.ஐ.ஜி-ப்ளீஸ்!அரசியல் சம்பத்தப்பட்ட கேள்வி எல்லாம் கேக்காதிங்க!!!(நோ கமெண்ட்ஸ்!)


அரசியல்வாதி-என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் கணக்கு கேட்பார்கள்?நான்திருப்பி அவர்களிடம் ENGLISH,PHISICS,CHEMISTRY கேட்டால் உங்களால் தாங்க முடியாது என எச்சரிக்கிறேன்!!(யார்கிட்ட)


நாந்தாங்க பணம் சம்பாதிக்க ஆயிரம் வழின்னு புத்தகம் எழுதிவவன்,
அப்பறம் ஏங்க பிச்சை எடுக்குறிங்க?
அதுல மொத வழி இதுதான்!!!(இதுக்கு பேர்தான் தனி வழியா?)


எப்பவாவது தனிமை கிடைச்சா நான் பாட ஆரம்பிச்சுடுவேன்!
அடப்போங்க!நீங்க பாட ஆரம்பிச்சாலே ஆட்டோமேடிக்கா தனிமை கிடைச்சுடுமே???(பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா)


நம்மாளு-ஏங்க!எனக்கு ஏதாவது தபால் வந்திருக்கா?
தபால்காரர்-உன் பேர் என்னை?
நம்மாளு-அதான் தபால்லையே போட்டுருக்குமே!(படித்தவுடன் கிழித்து விடவும்)


என் ஜாதகப்படி எனக்கு அறிவு ஜாஸ்தியாம்!
இப்ப தெரியுதா?நான் ஏன் ஜோசியத்த நம்பறதில்லன்னு?


அவன்-என் பொண்டாட்டி கார் ட்ரைவரோட ஓடிப்போயிட்டா!
இவன்-அட விடுடா!வேற கார் கார் டிரைவர் கிடைக்காமலா போய்டுவான்!!!(மனைவிக்கு மரியாதை)
__________________________________________________________________________________



அவன்-நான் ஒரு நாளைக்கு ஒரு பொய்தான் சொல்வேன்.
இவன்-அப்ப இன்னைய கோட்டா முடிஞ்சது போல!!



பிச்சைக்காரன்-அய்யா! சாப்ட்டு ஒரு வாரம் ஆச்சுயா நம்மாளு-ஏன்பா ஒரு வாரமா பசிக்கலையா? பிச்சை-!!!!!!!!!!!!!!(அட பிச்சைக்கு பொறந்த பிச்சை)
_________________________________________________________________________


ஒரு ஸ்கூல் பையன் கடையில்-டே!அந்த சாக்லேட் வாங்காத,சாப்டா தல வெடிச்சுடும்.டி.வி.ல பாத்தேன்#சொந்த செலவில் சூன்யம்
_________________________________________________________________________

 படித்ததில் கேட்டதில் ரசித்தவை 


மேலும் வாசிக்க "தனிமை கிடைச்சா நீங்க என்ன பண்ணுவீங்க???"

Tuesday, September 6, 2011

ஐயோ!பாவம் நீங்களே கன்பியுஸ் ஆகிட்டிங்க!!!



காதலி-டியர்!எங்கே என் பிறந்த நாள் பரிசு?
காதலன்-அவசரப்படாதே டியர்!அங்கே பார்,ஒரு பி.எம்.டபுள்யூகார் நிக்குதே?
காதலி-வாவ்! அந்த பி.எம்.டபுள்யூகாரா?
காதலன்-ஆமா!அதே கலர்ல நைல் பாலிஷ்!இந்தா!!!!
காதலி-போடாங்!!!!!!!!!!!


ஒரு மென்டலை எப்படி கன்பியுஸ் பண்றது?
பதில்-ஒரு பலாப்பழத்த வைச்சு தான்!

என்ன கன்பியுஸ் ஆகிட்டிங்களா?ஐடியா!வொர்க் ஆகுது!


பாட்டுஎழுதுறவர்  பாடலாசிரியர் ஆகலாம்.
கதை எழுதுறவர் கதாசிரியர் ஆகலாம்
ஆனா பேர் எழுதுறவர் பேராசியர் ஆகா முடியுமா?(கோகுல்,கோகுல்,கோகுல் நானும் இனி பேராசிரியர் அப்பறமென்ன?நீங்களும் ஆக வேண்டியதுதானே?)
__________________________________________________________________________________

நியூட்டனின் ஐந்தாம் விதி-ஒரு பரிட்சை ஹாலில் உள்ள மாணவர்களின் எழுதும் திறன் அந்த ஹாலில் உள்ள அழகிய மாணவிகளின் எண்ணிக்கைக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்!(நல்ல 
வேள நியூட்டன் இப்ப இல்ல)


அவன்-உங்க கார் எப்டி ஆக்ஸிடெண்ட் ஆச்சு?
இவன்-அதோ!அங்கே ஒரு மரம தெரியுதா?
அவன்-ஆமா!தெரியுது!
இவன்-நேத்து அது எனக்கு தெரியல!(தேங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்!)

--------------------------------------------------------------------------------------------------------------------------------
சார் !எதுக்கு சார் படிக்கற பையன போட்டு இந்த அடி அடிக்குறிங்க!
அடப்போங்க சார்!பரிட்சைக்கு கூட போகாம உக்காந்து படிச்சுட்டு இருக்கான்!(இந்த ஐடியா நான் படிக்கும் போது தோணாம போய்டுச்சே!)
__________________________________________________________________________________

இப்படி ஒரு லீவ் லட்டர் பாத்து இருக்கிங்களா?

அனுப்புதல்
            நான்தான்,
            உங்க கிளாஸ் தான்,
            உங்க ஸ்கூல் தான்,
            இதே ஊர்தான்.
பெறுதல்
           உங்களுக்கு தான்,
          இதே கிளாஸ் தான்,
          இதே ஸ்கூல் தான்,
          இதே ஊர்தான்.

பொருள்: லீவ் வேணும்.

சார்,
        எனக்கு நாளைக்கு எனக்கு ஸ்கூல் வர பிடிக்கல. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கங்க,நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வரமாட்டேன்!


தேதி;இன்னைக்கு தான்.                      தங்கள் கீழ்படிந்த,
இடம்:எங்க வீடு தான்.                       உண்மையான,
                                           இன்னும் பல ந்த,பல ஆன
                                           மறுபடியும் நான்தான்!
________________________________________________________________________________  

அப்பறம் சில பல கல்யாணங்கள் இருப்பதாலும்(எனக்கு இல்லைங்க-நண்பர்களுக்கு) அப்படியே ஒரு டூர் அடிக்கப்போவதாலும்
நானும் ஒரு நாலைஞ்சு நாளைக்கு ப்ளாக் ஸ்கூலுக்கு லீவு.அது வரைக்கும் மேல இருக்கறத படிச்சு சிரிச்சிட்டு இருங்க!தனியா சிரிச்சு வீட்ல, ஆபீஸ்ல யாராவது தப்பா நினைச்சா நான் பொறுப்பல்ல!வரட்டுமா!!சந்திப்போம்!!
__________________________________________________________________________________


எஸ்.எம்.எஸ்அனுப்பியவர்களுக்கு நன்றி!

மேலும் வாசிக்க "ஐயோ!பாவம் நீங்களே கன்பியுஸ் ஆகிட்டிங்க!!!"