Showing posts with label அர்த்தம். Show all posts
Showing posts with label அர்த்தம். Show all posts

Thursday, August 4, 2011

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்!!!


ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்(உங்க புள்ள சந்தேகப்ப்படும்னுசொல்லக்கூடாது சொல்லக்கூடாது).



“ஊரான பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும்”அப்படிங்கறது நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கும் பழமொழி.இதன் உண்மையான பொருள் நமது சுற்றத்திலும்,அருகிலும்,உள்ள ஏழைக்குழந்தைகளுக்கு உணவிட்டு வந்தால் நம் குழந்தை அந்த புண்ணியத்தில் எந்த குறையுமின்றி வளரும் என்பதுதான்.




இன்றைய சூழலில் இது போல நிறைய பேருக்கு உதவ முடியலைன்னாலும் நம்ம வீட்டுக்கு வந்த ஊரான் வீட்டு(இன்னொர் வீட்டிலிருந்து வந்த)மருமகளை நல்ல மதிப்பளித்து நல்லமுறையில் கவனித்துக்கொண்டாலே நம் பிள்ளை (அவள் வயிற்றில் வளரும்) நம் வாரிசு நல்ல முறையில் எந்த குறையுமின்றி வளரும்.
இந்த பழமொழியின் அர்த்தம் எதுவாக இருந்தாலும் நம்ம பிள்ளை,அடுத்தவங்க பிள்ளை என பார்க்காமல் அனைவரிடமும் அன்பு காட்டி வளர்ப்போம்.


நன்றி—பாடம் புகட்டும் பழமொழிகள் புத்தகம்(கவிஞர் த.துரைசிங்கம்)


பின்குறிப்பு—இதை செயல்படுத்தி குடும்பச்சண்டையோ மாமியார் மருமகள் சண்டையோ வந்தால் எனது வலைநிர்வாகம் பொறுப்பேற்காது.



புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்.



மேலும் வாசிக்க "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்!!!"