Sunday, September 25, 2011

sunday-ன்னா ரெண்டு!!!



இயலாமை


அற்புதமாக சொற்பொழிவாற்றினார்
ஆன்மீகவாதி ஒருவர்
அனாவசியமாக
அற்பஉயிரையும்
அழிக்கக்கூடாதென
அவரால்கூட காப்பாற்றமுடியவில்லை
அவர் காலடியில் கிடந்த
எறும்பை!

_________________________________________________________________________
எது உண்மை?


கோவில் கட்ட
கோடிகோடியாய்
கொட்டிக்கொடுக்கும் சிலர்
பள்ளிக்கூடங்களையும்
ஆதரவு ஏற்போர் அமைப்புகளையும்
கண்டுகொள்வதில்லை

முடிந்தவரை
முடியாதவர்களுக்கு உதவுவதே
உண்மையான இறைத்தொண்டு என்பதை
யார் இவர்களுக்கு புரிய வைப்பது?


 புகைப்படம் உதவி-இணையம்&my friend madesh(2&3)



32 comments:

கோவை நேரம் said... Reply to comment

தோழரே ..அழிப்பது தானே ...அளி என்று இருக்கிறது ...

நிரூபன் said... Reply to comment

விடுமுறை முடித்து வீட்டிற்கு வந்ததும், நம்ம கோகுல் பாஸின் பதிவு...

படிப்போம்..

நிரூபன் said... Reply to comment

எல்லா ஓட்டுப் பட்டையிலும் குத்தியாச்சு.

இண்ட்லியை மட்டும் காணலை.

நிரூபன் said... Reply to comment

இயலாமை என்ற தலைப்பின் கீழ், மனிதர்கள் சறுக்கி விழும் தருணங்களினைக் கவியாக்கியிருக்கிறீங்க.

நிரூபன் said... Reply to comment

நல்ல கவிதைகள் நண்பா

கோகுல் said... Reply to comment

@கோவை நேரம்
நன்றி!திருத்திவிட்டேன்!

கோகுல் said... Reply to comment

@நிரூபன்
அதைத்தான் எல்லோரும் நேத்திலுருந்து
தேடிட்டு இருக்கோம்!

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

அருமையான் பகிர்வுகள். பாராட்டுக்கள்.

சக்தி கல்வி மையம் said... Reply to comment

முடிந்தவரை
முடியாதவர்களுக்கு உதவுவதே
உண்மையான இறைத்தொண்டு என்பதை
யார் இவர்களுக்கு புரிய வைப்பது?//
முற்றிலும் உண்மை நண்பா..

கோகுல் said... Reply to comment

@இராஜராஜேஸ்வரி
நன்றி!

கோகுல் said... Reply to comment

@!* வேடந்தாங்கல் - கருன் *!
வாங்க கருன்!சண்டே ரெஸ்டா?
நாளைக்கு மறுபடியும் ஸ்கூலு!அவ்வவ்

rajamelaiyur said... Reply to comment

Super Kavithai . .

Unknown said... Reply to comment

இரண்டும் அருமை. மிக சாதாரண வார்த்தைகளைக் கொண்டு மிகப்பெரிய விஷயத்தை கையாண்டு இருப்பதற்கே பாராட்ட வேண்டும்.

கோகுல் said... Reply to comment

@பாரத்... பாரதி...
வருக நண்பரே!கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி!

கோகுல் said... Reply to comment

http://ta.indli.com/
மக்களே!
//பராமரிப்பு காரணங்களுக்காக இன்ட்லி தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளது.//

நிகழ்வுகள் said... Reply to comment

///கோவில் கட்ட
கோடிகோடியாய்
கொட்டிக்கொடுக்கும் சிலர்
கல்விநிறுவனங்களையும்
ஆதரவு ஏற்போர் அமைப்புகளையும்
கண்டுகொள்வதில்லை/// அதே அதே ...இதை நாம் சொன்னால் தெய்வக்குத்தம் ஆகிடும் எண்டு பொல்லை தூக்கிக்கொண்டு துரத்துவாங்கள் பாஸ் )))

மாய உலகம் said... Reply to comment

யோசிக்க வைக்கும் கவிதை நண்பா.. நன்றி

Philosophy Prabhakaran said... Reply to comment

கல்வி நிறுவனங்கள் தான் லட்ச லட்சமாக கொள்ளை அடிக்கிறார்களே...

Philosophy Prabhakaran said... Reply to comment

தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டு...

cheena (சீனா) said... Reply to comment

அன்பின் கோகுல் - அருமையான வரிகள் - இயலாமை - நம் கையில் இல்லையே - என்ன செய்வது ..... நல்வாழ்த்துகள் கோகுல் - நட்புடன் சீனா

K.s.s.Rajh said... Reply to comment

பாஸ் உங்கள் சண்டேயின் ரெண்டும் சூப்பர்..

K.s.s.Rajh said... Reply to comment

இண்ட்லிக்கு என்ன நடந்தது.

Unknown said... Reply to comment

கோகுல் உங்கள் கவிதை நன்று..

கடவுள் காப்பாத்துவார் என்று நம்புவதும் / மனிதன் ஏமாற்றுவான் என்று நம்புவதுமே கராணம்...

Unknown said... Reply to comment

மாப்ள கொன்னுட்ட போ!

பிரணவன் said... Reply to comment

முடிந்தவரை
முடியாதவர்களுக்கு உதவுவதே
உண்மையான இறைத்தொண்டு. . .மனிதர்களுக்கு செய்த பாவங்களுக்கு, பலிதீர்க்க கோவிலுக்கு கொட்டி கொடுக்கின்றனர். . .பாவம். . .
நல்ல பதிவு சகா. . .

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

சாட்டையடியாய்

கேள்விகள்..

எருமை மாடாய் மக்கள்!!!!!!!!!

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

பணம் கொடுப்பதோ..
உணவு கொடுப்பதோ..

மட்டும் உதவியல்ல..

நல்ல சிந்தனைகளால் ஒருவரை உழைத்து வாழ அறிவுறுத்துவதும்

ஒருவகையான கொடைதான்..

இது பொருளை விட மதிப்புமிக்கது..

என்பது என் கருத்து..

ராஜா MVS said... Reply to comment

உண்மை மெய்ஞானத்தை பிரதிபலிக்கும் கவிதை... அருமை நண்பா...

வாழ்த்துகள்...

ரைட்டர் நட்சத்திரா said... Reply to comment

முள்ளாய் குத்தும் வரிகள்

Anonymous said... Reply to comment

கலக்கல் இரட்டையர்கள்...

அம்பலத்தார் said... Reply to comment

வணக்கம் பாஸ்

அம்பலத்தார் said... Reply to comment

சமுதாய விழிப்புணர்வூட்டும் வரிகளிற்கு வாழ்த்துக்கள்