Thursday, August 11, 2011

கவிதைக்கனவுகள்





                    அது முன்னிரவா நள்ளிரவா
                    நேரம் தெரியவில்லை
                    நெடுநேரமாக முயன்றேன்
                    உறக்கத்தை விழிகளில் அமர்த்த
                    உறக்கம் வரவில்லை என்றால்
                    வற்புறுத்தாதீர்கள்
                    வரும் போது அரவணைத்து கொள்ளுங்கள்
                    அது வரை வேறு எதையாவது
                    செய்துகொண்டோ
                    சிந்தித்து கொண்டோ இருங்கள் என்று
                    எங்கோ படித்தோ கேட்டோ ஞாபகம்
                    என்ன செய்யலாம்
                    எழுந்து காலாற நடக்கலாமா என்றால்
                    கடும்குளிர் வீசுது வெளியில்
                    புத்தகம் படிக்கலாமா என்றால்
                    விளக்கை போட்டால்
                    விழித்து கொள்வர் அனைவரும்
                    வேறென்ன செய்யலாம்
                    ஒரு கவிதை சிந்திக்கலாமா
                   
                    சரி
                   எதை பற்றி எழுதுவது
                  புதுக்கவிதையா மரபுக்கவிதையா
                  காதலின் களிவை பற்றியா
                  நட்பின் நல்லிணக்கம் பற்றியா
                  பெண்மை,தாய்மையின் மகத்துவமா
                  இயற்கை எழிலா,மனிதரின் மாண்பா
                  சமூக அக்கறையா
                  அரசியல் அவலமா
                  எந்த வார்த்தைகளை பயன்படுத்தலாம்
                  எதுகை மோனையை எங்கே போடலாம்
                  என்றெல்லாம் எண்ணிக்கொண்டே
                  உறங்கிப்போனேன்
                  கவிதைக்கனவுகளோடு .......
                     
                          (அப்பறம் ட்ரெயின் வரத்துகுள்ள யாராவது இவர எழுப்பிட்டுப்போங்க)








நன்றி-http://www.beencaughtsleeping.comஇணையம் for photos.







27 comments:

Chitra said... Reply to comment

கவிதை கருவுக்காக ஒரு கவிதை..... சூப்பர்!!!!

கோகுல் said... Reply to comment

Chitra said...
கவிதை கருவுக்காக ஒரு கவிதை..... சூப்பர்!!!!//

தங்கள் முதல் வருகைக்கு நன்றி!

ஆகுலன் said... Reply to comment

கவிதை எழுதுவதை பற்றி ஒரு கவிதை...ஆகா அருமை அருமை....

M.R said... Reply to comment

என்ன எழுதலாம்னு நினைத்தே ஒரு பதிவா

நல்லா இருக்கே ஐடியா .

கடைபிடிக்கிறேன்

கோகுல் said... Reply to comment

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Super kavithai//

நன்றி நண்பா!

கோகுல் said... Reply to comment

ஆகுலன் said...
கவிதை எழுதுவதை பற்றி ஒரு கவிதை...ஆகா அருமை அருமை....//

வருக ஆகுலன்.வருக!

கோகுல் said... Reply to comment

M.R said...
என்ன எழுதலாம்னு நினைத்தே ஒரு பதிவா

நல்லா இருக்கே ஐடியா .

கடைபிடிக்கிறேன்//

எப்படில்லாம் யோசிக்க வேண்டியிருக்கு!

செங்கோவி said... Reply to comment

கனவே கலையாதே..

செங்கோவி said... Reply to comment

கவிதைக்கான போராட்டமே கவிதையானது அழகு கோகுல்!

கோகுல் said... Reply to comment

செங்கோவி said...
கவிதைக்கான போராட்டமே கவிதையானது அழகு கோகுல்!//

தங்கள் மேலான கருத்துக்கு நன்றி!

Anonymous said... Reply to comment

தூங்கிட்டீங்கன்னா எப்ப எழுதினீங்க கோகுல்...லாஜிக் உதைக்குதே...
இளைய கவிப்பேரரசர் உதயம்...

கோகுல் said... Reply to comment

Reverie said...
தூங்கிட்டீங்கன்னா எப்ப எழுதினீங்க கோகுல்...லாஜிக் உதைக்குதே...
இளைய கவிப்பேரரசர் உதயம்...//

எங்கடா யாரும் கேக்கலன்னு பாத்தேன் .ஹிஹி
என்னா சார்ப்பு! ஏமாத்த முடியாது போலிருக்கே?

சாந்தி மாரியப்பன் said... Reply to comment

கவிதை உருவான விதமே கவிதையாய்.. நல்லாருக்கு.

கோகுல் said... Reply to comment

அமைதிச்சாரல் said...
கவிதை உருவான விதமே கவிதையாய்.. நல்லாருக்கு.//

தங்கள் முதல் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி!

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

கவிதை எழுத நினைத்தே கவிதையா... பாராட்டத்தக்க சிந்தனை.

கோகுல் said... Reply to comment

தமிழ்வாசி - Prakash said...
கவிதை எழுத நினைத்தே கவிதையா... பாராட்டத்தக்க சிந்தனை.

நன்றி நண்பரே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said... Reply to comment

தோன்றதை எழுதுவோம் என்பது தோன்றியதை அல்லது தோன்றுவதை என்பதே பொருத்தமென நினைக்கிறேன்.

Mathuran said... Reply to comment

கவிதை எழுதுறதுக்கே கவிதையா.. கலக்குங்க

K.s.s.Rajh said... Reply to comment

வணக்கம் நண்பா உங்கள் தளத்திற்கு இன்றுதான் முதன் முதலில் வருகின்றேன்.உங்கள் பதிவுகள்.சூப்பரா இருக்கின்றது.இனி தொடர்ந்து வருவேன்.

நன்றி
அன்புடன்
உங்கள்
Kss.Rajh(கே.எஸ்.எஸ்.ராஜ்)
From
நண்பர்கள்

Yaathoramani.blogspot.com said... Reply to comment

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என
இதைத்தான் சொல்வார்களோ?
கவிதைக்கான கருவைத் தேடுதலையே
ஒரு கவிதை ஆக்குவதென்றால் ....
எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said... Reply to comment

ஃஃஃஃஉறக்கம் வரவில்லை என்றால்
வற்புறுத்தாதீர்கள்
வரும் போது அரவணைத்து கொள்ளுங்கள்ஃஃஃஃ

ஹ...ஹ.. அதுவம் சரி தான்.. விரும்பியோ வரும்பாமலோ வரத் தானே வேணும்..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று

மகேந்திரன் said... Reply to comment

கவிதைக்கோர் கருப்பொருள் தேடிய விதம்
அருமையாக உள்ளது நண்பரே.

பிரணவன் said... Reply to comment

அழகிய படைப்பு வாழ்த்துக்கள். . .

Unknown said... Reply to comment

உறக்கம் இன்மையால் கவிதை
உதித்ததா இந்த கவிதை
சிறக்க அமைந்தது கவிதை
சிந்திக்க வைத்தது கவிதை

புலவர் சா இராமாநுசம்

கூடல் பாலா said... Reply to comment

தூங்கி வழிஞ்சத கூட எவ்வளவு தூக்கலா சொல்லிருக்காரு மாப்ள !

கோகுல் said... Reply to comment

பின்னூட்டமிட்ட அனைவருக்கும்,இணைந்தவர்களுக்கும் நன்றிகள்.

மாய உலகம் said... Reply to comment

பின்னிடீங்க கோகுல் ஹா ஹா கவிதை படித்து சிரித்தது இங்கே தான்... கவிதை கனவுகள் கலக்கல்