Saturday, October 29, 2011

நெருப்பு!!!


நெருப்பு

பெண்ணே!
உன்னை கண்ணகியோடு
சீதையோடு
ஒப்பிட்டால்
ஒப்புக்கொள்ளாதே!


நீ கண்ணகியாயிருந்தால்
ஒரு ஊரையே எரிக்கவேண்டியிருக்கும்

நீ சீதையாயிருந்தால்
நீயே எரிய வேண்டியிருக்கும்
நீ நீயாயிரு!
நீயே நெருப்பாயிரு!
நெருப்பு உனக்குள்ளிருக்கட்டும்!
எது உன்னை நெருங்கும்?

நெருப்பென்றால் எப்படி?
நல்லன ஆக்கவும்
தீயவை அழிக்கவும்
தெரிந்த நெருப்பாய்! 



32 comments:

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

நீ நீயாயிரு!
நீயே நெருப்பாயிரு!
நெருப்பு உனக்குள்ளிருக்கட்டும்!
எது உன்னை நெருங்கும்?/

nice..

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

அருமையான வரிகள், உங்களுக்கு கவிதைகள் நன்றாக வருகின்றன.... வாழ்த்துக்கள்!

வலையுகம் said... Reply to comment

புதிய கோணத்தில்
பழைய மரபுகளோடு
பூத்த கவிதை

காந்தி பனங்கூர் said... Reply to comment

கடைசி நான்கு வரிகள் அருமை நண்பரே. வாழ்த்துக்கள்

SURYAJEEVA said... Reply to comment

ஞானியின்[நியா னியா என்று கேட்காதீர்கள் கண்டிப்பாய் தெரியாது] நெருப்பு மலர்கள் படித்தது நினைவுக்கு வந்தது... ஆனந்த விகடன் பிரசுரம் கிடைத்தால் படித்து பாருங்கள்

Unknown said... Reply to comment

கவிதை அருமை

Unknown said... Reply to comment

கோகுல்,
நெருப்பே பெண்ணாய்...
பெண்ணே நெருப்பாய் .....

சரி ...

பி.அமல்ராஜ் said... Reply to comment

கோகுல், அருமையிலும் அருமை.. யாரும் யோசித்திராத கோணம் இது. வாழ்த்துக்கள். இன்னும் இப்படி நிறைய தத்துவ கவிதைகள எதிர்பார்க்கிறேன் பாஸ்.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said... Reply to comment

நீ சீதையாயிருந்தால்
நீயே எரிய வேண்டியிருக்கும்
மிகவும் அருமையான வரிகள்
கோகுல் கலக்கல் கவிதை ..

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said... Reply to comment

நீ சீதையாயிருந்தால்
நீயே எரிய வேண்டியிருக்கும்
மிகவும் அருமையான வரிகள்
கோகுல் கலக்கல் கவிதை ..

மாய உலகம் said... Reply to comment

அருமை நண்பா...

M.R said... Reply to comment

அருமையான கவிதை ,அர்த்தம் நிறைந்தது.

rajamelaiyur said... Reply to comment

//
நீ நீயாயிரு!
நீயே நெருப்பாயிரு!
நெருப்பு உனக்குள்ளிருக்கட்டும்!
எது உன்னை நெருங்கும்?

//

அருமையான வரி

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

அற்புதமான கவிதை...

வாழ்த்துக்கள் கோகுல்...

ராஜா MVS said... Reply to comment

கவிதை அருமை நண்பா...

தாங்கள் தேர்ந்தெடுத்த புகைப் படங்களும் சூப்பர்...

வாழ்த்துகள்... நண்பா...

சம்பத்குமார் said... Reply to comment

அருமையான கவிதை நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

புகைப்படங்களுக்கு கவிதை அருமை கோகுல்

சக்தி கல்வி மையம் said... Reply to comment

கோகுல் கவிதை அருமை.,

arasan said... Reply to comment

வாழ்த்துக்கள் .. வீரியம் நிறைந்த வரிகள் ..

shanmugavel said... Reply to comment

//நீ நீயாயிரு!
நீயே நெருப்பாயிரு//

அருமை

Yaathoramani.blogspot.com said... Reply to comment

அருமையான சிந்தனை
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Mathuran said... Reply to comment

அருமையான கவிதை... வித்தியாசமாகவும் உள்ளது

*anishj* said... Reply to comment

அருமையான படைப்பு !! வாழ்த்துகள் !!

Anonymous said... Reply to comment

அருமையான கவிதை நண்பரே...கடைசி நான்கு வரிகள் Superb..

மகேந்திரன் said... Reply to comment

மனமார்ந்த கைதட்டல்கள் நண்பரே.
மனதில் ஆணி அடித்தாற்போல
பதியும் கவிதை.

Angel said... Reply to comment

ஒவ்வொரு வரியும் சூபெர்ப் .அருமையான கவிதை .வாழ்த்துக்கள் கோகுல் .

சத்ரியன் said... Reply to comment

பெண்கள் எப்படி இருக்கவேண்டும்...என்பதற்கான வரைவிலக்கணம் எளிய வரிகளிலும், பொருத்தமான படங்களிலும் பிரகாசிக்கின்றன.

Karthikeyan Rajendran said... Reply to comment

நல்ல கவிதை, ஆண்களுக்கும் ஒரு கவிதை சொல்லுங்க,

vetha (kovaikkavi) said... Reply to comment

''...நீ நீயாயிரு!
நீயே நெருப்பாயிரு!
நெருப்பு உனக்குள்ளிருக்கட்டும்!
எது உன்னை நெருங்கும்...''
மிக நல்ல வரிகள் கோகுல் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Unknown said... Reply to comment

super kavithai

பிரணவன் said... Reply to comment

உண்மையான வரிகள் சகா. . .அருமை. . .

நிரூபன் said... Reply to comment

மீண்டும் வணக்கம் பாஸ்,
காலதி காலமாக அடிமைத் தளையுள் இருக்கும் பெண்களின் மனத் திடத்தைச் சுய பரிசோதனை செய்து கொள்வதற்கும்,
பெண் என்றால் யார் என்று பெண்கள் அனைவரும் தம்மை உணர்ந்து கொள்ளும் வகையில் அனல் பறக்கும் வரிகளை, அழகிய கவிதையில் தாங்கி நிற்கிறது நெருப்பு.

காய்ச்சல் காரணமாக உடனுக்குடன் வர முடியலை.