Wednesday, September 12, 2012

ஒரு தொண்டனின் கதை



ஒரு ஊர்ல ஒரு வேலை வெட்டி இல்லாத பயபுள்ள,நாமளும் எவ்ளோ நாளைக்குத்தான் இப்படி வெட்டியாவே பொழுது போக்குறது,நாமளும் நாலு பேருக்கு தெரியவேண்டாமா?நம்மளையும் நாலு பேரு மதிக்க வேண்டாமா அப்படின்னு திடீர்னு ஞானோதயம் வந்து என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்போ அவனது கபாலத்தில் கபாலென உதித்தது தான் ஏதாவது அரசியல் கட்சியில் உறுப்பினராக சேருவது என்ற யோசனை.




முடிவு பண்ணியதோடு மட்டுமல்லாமல் முன்னாள் வேலைவெட்டி இல்லாத,இந்நாள் உள்ளூர் கட்சி பிரமுகர் ஒருத்தரிடம் போய் தனது யோசனையை  சொல்ல,அவரும் கட்டியணைத்து வாடா தம்பி உன்னைப்போன்றவர்களைத்தான் கட்சி தேடிக்கொண்டிருக்கிறது,வா தம்பி வா,களப்பணியாற்ற  வா என இணைத்துக்கொண்டார்.


இன்னாளும்,அடிக்கடி முன்னாளை சந்தித்து சீக்கிரத்துல நாலு பேருக்கு தெரியணும் அப்டின்னு சொல்லிட்டே இருக்க ,அதுக்கு நேரம் வரும் சொல்றேன்னு சொல்லிட்டே இருந்தாரு முன்னாள்.

ஒருநாள் முன்னாள் இந்நாளை கூப்டு "தம்பி,நீ கேட்டுட்டே இருப்பியே நாலு பேருக்கு தெரியணும்னு அதுக்கு நேரம் வந்துடுச்சு,தலைவருக்கு பிறந்தநாள் வருது,நீஎன்ன பண்ற ஒரு இருவதுக்கு நாப்பது பிளக்ஸ் பேனர் அடிச்சு அதுல தலைவர் அப்டியே புயலை எதிர்கொண்டு நடந்து வர்ற மாதிரி,பில்லால அஜித் உக்காந்து இருப்பாரே அது மாதிரி ஸ்டைலா,கட்டபொம்மன் மாதிரி,கர்ணன் மாதிரி உனக்கு எப்டியெல்லாம் தோணுதோ அப்டி டிசைன் பண்ணி அடிச்சுடு,அப்டியே எங்களின் சுவாசமே,இதயமே,எதிர்காலமே ,வரலாறே,புவியியலே அப்டின்னு போட்டு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்,அப்டின்னு ரெடி பண்ணி முச்சந்தில வச்சுடு".





அண்ணே,முச்சந்தி மெயின் ரோடு சேற்ற இடம் அங்கே வச்சா போற வர்ற வண்டிங்களுக்கு இடைஞ்சலா இருக்குமே.

"தம்பி நீ நாலு பேருக்கு தெரிய வேண்டாமா?சரி விடு அப்புறம் உன் இஷ்டம்".

"பரவால்லணே பண்ணிடலாம்".

"ம்.சொல்ல மறந்துட்டேன்,அதுல அப்டியே அண்ணனோட போட்டோ தலைவர் போட்டோவ விட ஒரு மூணு இல்ல,இல்ல ரெண்டு செ.மீ கம்மியா தலைவர்ட ஆசிர்வாதம் வாங்குற மாதிரி இருக்கணும்".


"அப்புறம் அண்ணனின் விழுது அப்டின்னு ஓரமா உன்னோட போட்டோ போட்டினா ஒரே நாள்ள நீ உலக பேமஸ் ஆகிடலாம்ல".,



"எல்லாம் சர்தாண்ணே ,சுவாசமே,இதயமே,உயிர்மூச்சேனு சொல்றீங்களே தலைவரோட பெயர் என்னண்ணே?"


அட ஏம்பா,அது தெரிஞ்சா நான் போட மாட்டேனா?போன பிறந்தநாளுக்கு நான் விழுதா இருந்தேன் அப்ப இருந்த அண்ணன் எனக்கு சொன்னத நான் உனக்கு சொல்றேன்.நீ அடுத்த பிறந்தநாளுக்கு இன்னொரு தம்பிக்கு சொல்லுவ ,அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"



தம்பி,இங்க பாருப்பா,என்னாச்சு?அட ,யாரப்பா அங்கே,இந்த தம்பி மயக்கம் போட்டுடுச்சு யாராவது சோடா கொண்டு வாங்கப்பா......




மேலும் வாசிக்க "ஒரு தொண்டனின் கதை"

Monday, September 3, 2012

ஐயோ!நான் ஒன்னும் பண்ணலைங்க!!!


செல் அடித்தது 

எதிர்முனையில் -கோகுல் நீங்க இப்டி பண்ணுவீங்கன்னு எதிர் பாக்கலைங்க!

நான் - நான் ஒன்னும் பண்ணலைங்க!!

எதிர்முனை- அதே தான் நானும் சொல்றேன்.

என்னவாயிருக்கும்னு கையில இருந்த பிஸ்கட்ட உடைச்சுக்கிட்டே
(ஏன் மண்டையத்தான் உடைசுக்கனுமா?) யோசிச்சும் பிடிபடல .,

****************************************************************************************

மறுபடியும் மறுநாள் இன்னொரு அழைப்பு 

எதிர்முனை - கோகுல் நீங்களா இப்படி?

நான்- எப்படிங்க?

எதிர்முனை- நான் நினைச்சுக்கூட பாக்கலைங்க

நான் -  நான் ஒன்னும் பண்ணலைங்க!!

எதிர்முனை - அதே தான் நானும் சொல்றேன்.

இப்போது  வேர்க்கடலையை உடைத்து வாயில் போட்டுக்கொண்டே ( ஏங்க மறுபடியும் ஏன் மண்டைலயே குறியா இருக்கீங்க) யோசிசும் புரியல.

#########################################################################################

அன்று மாலை சாட்டில்.,

நண்பர் - கோகுல் நான் உங்கள என்னவோ நினைச்சிருந்தேன்.,

நான் - ஏங்க அப்டி சொல்றீங்க?

நண்பர் - பின்ன இப்டி பண்றீங்க?

நான் -  நான் ஒன்னும் பண்ணலைங்க!!

நண்பர்     - அதே தான் நானும் சொல்றேன்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

அடுத்தநாள் காலை ஒரு மெயில்

மெயில்--""அன்புள்ள நண்பருக்கு வணக்கம் ,

நான் உங்களிடம் நிறைய எதிர்பார்த்திருந்தேன்,ஏமாற்றமாக இருக்கிறது.""


எனது ரிப்ளை-- "" நண்பரே எனக்கு ஒன்றும் புரியவில்லை,நான் ஒன்னும்  பண்ணலைங்க!!

அவரது ரிப்ளை -- அதே தான் நானும் சொல்றேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இப்போ நீங்க நினைச்சது நடந்துடுச்சுங்க,ஆமாம் இம்முறை மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்ததில் கிடைத்துவிட்டது ஒவ்வொருவரும் நான் ஒன்னும் பண்ணலைன்னு சொல்லும் போது ,ஆமாம் அதே தான் நானும் சொல்றேன் அப்டின்னு சொல்றாங்க அப்டின்னா என்னவா இருக்கும்னு மண்டை உடைந்தவுடன் தான் தெரிந்தது.அனைவரும் கேட்டது அடே மடையா பதிவர் சந்திப்பு முடிஞ்சு ஒரு வாரம் ஆகுது இன்னும் அதப்பத்தி ஒரு பதிவு கூட போடலன்னா நீயெல்லாம் ஒரு பதிவரா?

அந்த பேச்சுக்கெல்லாம் நான் ஆளாக விரும்பாமல் இதோ,



            [ இப்படி ஒரு நிகழ்ச்சியின் மூலம் புண்ணியத்தை கொட்டிக்கொண்ட மண்டபம்]



          [ நீங்க இன்னும் வளரனும் என கேபிளை தட்டிகொடுக்கும் மெட்ராஸ்பவன் சிவா ]




                                                [  நிகழ்ச்சிக்கு முன் தீவிர டிஸ்கசன்] 


                              [ திடங்கொண்டு போராடும் சீனுவுடன் குடந்தையூர் சரவணன் ]


                                       [ தம்பி இப்போ நான் என்ன சொல்டேன்னு இப்டி சிரிக்குற
                                             போவண்டோக்கு சைட்டிஷ்ஷா  போண்டா சாப்டா இப்டிதான்   ] 




  [  ஒரு வாசகம் சொன்னாலும் ஒரு வாசகம் சொன்ன பிரபா- ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம்              இல்லைங்க ]


                                                       [ ஏன் சார் இப்டி குறு குறுனு பாத்தா எப்டி பேச்சு வரும்? ]

ம்ம்ம்.,வளைச்சு வளைச்சு  கேட்டீங்க இல்ல அதுக்குள்ள முடிஞ்சுடுமா என்னே? 
மேலும் வாசிக்க "ஐயோ!நான் ஒன்னும் பண்ணலைங்க!!!"