Wednesday, November 30, 2011

இசை கேட்டால்.......


இசைன்னா என்னங்க.ஹி.ஹி.இசைன்னா... ங்க..,க..ம,ப,இசைன்னா  இசை.அம்புட்டுதாங்க நமக்கு தெரியும்.உங்களுக்கெப்படி?இசை கேட்டால் புவி அசைந்தாடும்...என்ன?அந்த இனிமையான பாட்டு நினைவுக்குவருதா?எப்பவாவது டென்ஷனானா ஏதாவது சில இளையராஜா ,பழைய எம்.எஸ்.வி பாட்டு ஏதாவது கேட்டா மனசு லேசான மாதிரி இருக்கும்னு பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.உணர்ந்தும் இருக்கேன்.ஆமா,இசை சில மனஉபாதைகளுக்கு சிறந்த மருந்து தான்.


ஆனா நமக்கு(முக்கியமா எனக்கு) தெரியாத ஒரு விசயத்த சமீபத்துல தெரிஞ்சுக்கிட்டேன்.இசை மனஉபாதைகளுக்கு மட்டுமில்லை,சில உடல் சார்ந்த சில குறைபாடுகளைக்களையும் மகத்துவம் இசைக்கு இருக்கிறதாம்.அப்ப லாஜிக் படி இசைஅமைப்பாளர்களுக்கு தான டாக்டர் பட்டம் குடுக்கணும்.சரி விடுங்க அதைப்பத்தி இங்கே பேச வேணாம்.




அப்படியென்ன செய்கிறது இசை?இசை மருத்துவம் என்ற ஒரு மருத்துவ முறையே இருக்கிறது.முடிந்த அளவுக்கு நாமே ஏதாவது இசைக்கருவியை வாசித்தாலோ,அல்லது பாடினாலோ உன்னதம் என்கிறது இந்த மருத்துவ முறை.என்ன ரிஸ்க் எடுக்காம ரஸ்க் சாப்பிடனுமா?அப்ப இசையை கேளுங்க அதுவே போதும்.

ஹிஸ்டீரியா அறிகுறிகளுக்கு நரம்பிசைக்கருவிகளின் இசையை கேட்க நல்ல பலன் தரும்.முக்கியமாக நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு இசை மருத்துவம் நல்ல பலன் தருகிறது.நரம்பு மண்டலத்தை செம்மைப்படுத்துவதில் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.

தலைவலி வரும் சமயங்களில் விளம்பரங்கள்ள வர்ற மாதிரி மாத்திரைகளை போட்டா அதுவே பின்னால பெரிய தலைவலியை குடுக்கும்.ஒற்றை வயலின் இசையை தொடர்ந்து கேட்டால் தலைவலியின் தாக்குதலை சமாளித்துவிடலாம்.அமெரிக்காவுல ஒரு பல்டாக்டர் பல பேரோட சொத்தை(பேஷன்ட் சொத்தை அல்ல)பல்லை மயக்க மருந்தோ,வழி குறைப்பு மருந்தோ இல்லாமல் மயக்கும் இசையை வைத்தே பிடுங்கி அசத்தியுள்ளாராம்.

                                     (இந்த நம்ம இசைஞானியின் மருத்துவம்)
நாம மட்டும் சளைத்தவர்களா?நம்ம பசு நேசர் பாட்டு பாடியே பால் கறக்கலையா?அதுவும் உண்மைதாங்க,இசைக்கு மயங்கும் பசுக்கள் அதிக பால் கொடுக்குதாம்,செடிகள் மற்ற செடிகளை செழித்து வளருதாம்.பாஸ்டன் நகரத்துல அறுவை சிகிச்சையே பண்றாங்களாம்.
என்ன இசை மருத்துவத்தை அனுபவிப்போமா?ஆனா சில கொலைவெறி இசை இருக்கும் ஆரோக்கியத்தை குலைத்து விடும்.(ஐயோ நான் ஏதும் பொடி வைச்சு பேசலைங்க).நல்ல இசை கேட்போம்.நல்ல மன,உடல் ஆரோக்கியத்தோட இருப்போம்.இனி இசை கேட்டால்......... நோய் பறந்தோடும்!
 மேலும் சில தகவல்களை இந்த இணைப்புகளில் பாருங்கள்.

நட்புடன்.
ம.கோகுல்.
மேலும் வாசிக்க "இசை கேட்டால்......."

Monday, November 28, 2011

வெயிட்டான பாத்திரங்கள் ( கதா ,கதா )



வெயிட்டான பாத்திரம் என்றதும் பெரிய அண்டா ன்னு நினைக்காதீங்க. நாடகங்கள்,நாவல்கள்,சினிமாக்கள்,காமிக்ஸ்களில் புனையப்பெற்ற,அன்று முதல் இன்று வரை காலச்சுவட்டில் நீங்கா இடம் பெற்றுள்ள சில கற்பனை கதாபாதிரங்களைத்தான் அப்படி சொன்னேன்! அவற்றுள் சில இங்கே!



1.ஹாம்லெட்(HAMLET) - சேக்ஸ்பியரின் “ஹாம்லெட்” நாடக கதைத் தலைவன் .ஹாம்லெட் டென்மார்க் நாட்டின் இளவரசன். ஹாம்லெட்டின் சித்தப்பா கிளாடியஸ் ஹாம்லெட்டின் தந்தையைக் கொன்று, ஹாம்லெட்டின் தாயை மறுமணம் புரிந்துகொண்டு, நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறான். இதனால் தவிக்கும் ஹாம்லெட்டின் துடிக்கும் உணர்வுகளும் செயல்களுமே, இந்த நாடகத்தின் உயிரோட்டம்!.

2.சின்ட்ரெல்லா(Cinrerellaa)- ஒரு தேவதைக்கதையில் வரும் தேவதைகளால் துன்ப வாழ்விலிருந்து ராஜகுமாரியாகும் சின்ட்ரேல்லா பாத்திரம் க்ரீம் சகோதரர்களால் உருவாக்கப்பட்டது.அழகிய சின்ட்ரெல்லா, சின்ட்ரெல்லா......



3.டின் டின் (Tintin) – இது ஒரு துப்பறியும் பத்திரிகையாளர் கதாபாத்திரம்.பெல்ஜியத்தை சேர்ந்த ஹெர்ஜினின் என்பரால் உருவாக்கப்பட்டு இன்று வரை சக்கைப்போடு போடுகிறது. டின் டின் டி டின்...


4.டார்ஜான்(Tarzan) – இவரைப்பத்தி கேள்விப்பட்டிருப்பிங்க.எட்கார் பரோஸ் என்பவரால் “டார்ஜான் ஆஃப் த ஏப்ஸ் “ல் ஒரு வாலில்லாக்குரங்கால் வளர்க்கப்படும் ஒரு செல்வந்தனின் மகனாக புனையப்பட்டு பெரும் புகழ் அடைந்த கதாபாத்திரம்.


5.சாம்வெல்லர் (SamWeller) – சார்லஸ் டிக்கின்ஸ் எழுதிய “The Pickwick Papers” என்ற நாவலில் தனது முதலாளிக்கு விசுவாசமும் அன்பும் மட்டுமே காட்டிய ஒரு கதாபாத்திரம்.இன்றைக்கும் இருக்கிறார்கள் பல சொம்பு(சோப்பு)வெல்லர்கள் பல அலுவலகங்களில்.



6.பிராங்கேன்ஸ்டீன்(Frankenstein) – இயற்கையைப் பற்றி ஆராயும் ஒரு மாணவன் உருவாக்கிய ஒரு ஜீவராசி எல்லாவற்றையும் அழித்து விட்டு கடைசியில் உருவாக்கியாரையும் அழித்துவிடுகிறது.உருவாக்கியவரையே அழிக்கும் தன்மை என்பது இதற்க்கு அர்த்தம்.கிட்டதட்ட சிட்டி ரோபோ போல.


7.ஷைலோக் (Shailock) – இவரும் சேக்ஸ்பியரின் கைவண்ணம் தான்.’மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்’ –ல் புனையப்பட்ட அதிக வட்டி வாங்கி மக்களை நசுக்கும் கொடூரன் .இன்றைய ஷைலோக்குகள் நாகரீக தோற்றத்தில் உலவுகிறார்கள் பேங்கின் பிரதிநிதி என்ற பெயரில்.


8.ஜேம்ஸ்பாண்ட் (JamesBond) – இவரப்பத்தி அறிமுகம் தேவை இல்ல இயான் பிளம்மிங் நாவலில் உருவாக்கப்பட்ட வீர தீர,யாராலும் செய்ய முடியாத சாகசங்கள் செய்யும் துப்பறியும் கதாபாத்திரம்.முதலில் தோன்றியது 1953-ல் கேசினோ ராயலில்.கார்களும் பெண்களும் இவருக்கு இஷ்டம் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?



9.ஹாரி பாட்டர் (Horry Potter) – இந்தப் பையனை தெரியாதவர்கள் ரொம்பக்கம்மியாதான் இருப்பாங்க.தமிழ்நாடு TNPSC தேர்வில் ஹாரி பாட்டரை எழுதியது யார் என கேள்வி கேக்கும் அளவுக்கு பிரபலம்.கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்மணியை(ஜே.கே.ரௌலிங்)உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வைத்த பெருமை இவரை சேரும்.



10. ஃபாகின்(Fagin) – இவர்(ன்) சார்லஸ் டிக்கின்சின் ‘’ஆலிவர் ட்விஸ்ட்’’ நாவலில் வரும் ஜகஜாலத்திருடன்,பிக்பாக்கெட்,ஜேப்படி வேலைகள் செய்யும் மாயக்காரன்.
சிறுவர்களுக்கு உலகின் கருப்புப்பக்கங்களை கற்றுக்கொடுக்கும் கயவன்.இந்த நாவல் நான் +1 படிக்கும் போது பாடப்பகுதியாக இருந்தது.இப்போது இருக்கிறதா தெரியவில்லை.


என்ன?உண்மையிலே இவையெல்லாம் வெயிட்டான பாத்திரங்களா? இன்னும் சில இந்திய பாத்திரங்களையும்(கதா,கதா) சேர்த்து இன்னுமோர் பதிவில் சொல்கிறேன்.


நட்புடன்.
ம.கோகுல்

மேலும் வாசிக்க "வெயிட்டான பாத்திரங்கள் ( கதா ,கதா )"

Friday, November 25, 2011

இப்படி நன்றி செய்வாயோ?


பிறந்த போது
பேருவகை அடைந்த
தந்தையை
எத்தனையோ இரவுகளில்
தூங்க விடாமல்


தவழ்ந்து நடக்கையில்
அசந்த சமயங்களில்
அடிக்கடி சாலைக்கு ஓடி
பிள்ளையை பத்திரமா பாத்துக்குங்க
என பலரையும் பேச வைத்து


மேலும் வாசிக்க "இப்படி நன்றி செய்வாயோ?"

Thursday, November 24, 2011

எனக்குள் நான் ! (ஒரு பயங்கர டேட்டா !!! )





வணக்கம் நண்பர்களே!இந்த எனக்குள் நான் நான் கல்லூரியில் படிக்கும் போது வாங்கிய ஆட்டோகிராப் நோட்டில் என்னைப்பற்றி கிறுக்கியது.சில மாற்றங்களுடன் இப்போது .




நான் -                சொன்னா தெரியுற அளவுக்கு பிரபலம் கிடையாது       
தெரிஞ்சவங்களுக்கு கோகுல்    தெரியாதவங்களுக்கும் கோகுல்.
இன்னும் சொல்லனும்னா ,அப்பா அம்மாவுக்கு        மகன்,அக்காக்களுக்கு தம்பி,நட்புகளுக்கு நண்பன்
 பணிபுரியும் நிறுவனத்துக்கு ஊழியன்அதுக்கு மேல
 தெரியல(முடியல).

சந்தோசத்தருணங்கள் – மாலைநேர மழை,மழலைச்சிரிப்பு,பேருந்தில்
  இசைப்பயணம்(இரைச்சலல்ல),பனிக்கால   
  போர்வைத்தூக்கம்.


மறக்க முடியாதது  -   பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள்.

வாழ்க்கை –            என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.

காதல் –                சந்திக்கவும் இல்லை,சிந்திக்கவும் இல்லை.


நட்பு –                 மனம் பார்க்கும் கண்ணாடி.

மரணம் –              வரும்போது வரட்டும்.அது வரை வாழ்க்கையை   
                       அனுபவி.

சோகம் –               கும்பகோண சீரழிவு,சுனாமியின் 
  பேரழிவு,இன்னும்பல

கோபம் –               அது தான் வர மாட்டேங்குது.ரௌத்திரம்
  “பழக”முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்!


நினைப்பது –           முடிந்தவரை முடியாதவர்களுக்கு உதவ

கவர்ந்த வரிகள்-       உலகின் வாயைத்தைப்பது கடினம்!
                        உந்தன் செவிகளை மூடுவது சுலபம்
                        (வைரமுத்துவோடது)


ஓய்வு கிடைத்தால்-     தோன்றுவதை எழுதுவது,பிடிப்பதை(கிடைப்பதை) 
                         படிப்பது,இசை கேட்பது,இணையத்தில் உலவுவது.   

பலம்-                  சொல்லுங்க +பண்ணிக்கறேன்.

பலவீனம்-              சொல்லுங்க – பண்ணிக்கறேன்.


கல்லூரியில் நண்பர்களிடம் பகிர்ந்தது,உங்களிடமும் பகிரனும்னு தோணுச்சு. 
படங்கள் கூகுள் தேடலில்(முதலாவது என்னை நானே எடுத்தது)


நட்புடன்
ம.கோகுல்



மேலும் வாசிக்க "எனக்குள் நான் ! (ஒரு பயங்கர டேட்டா !!! )"

Tuesday, November 22, 2011

கலைஞர் செய்தது சரியா?



கலைஞர் தமிழுக்கும் தமிழர்க்கும் எவ்வளவோ செய்திருக்கார்(?)நான்

எதைப்பத்தி சொல்லப்போறேன்னு கேக்குறிங்களா?இந்த பதிவுக்கும்

கலைஞருக்கும் சம்பந்தம் இல்ல.அப்புறம் எதுக்கு தலைப்பு இப்படி

வைச்சேன்னு ரொம்ப யோசிக்காதிங்க.

போன வாரம் கலைஞர் தொலைக்காட்சியில ஒரு நிகழ்ச்சி போட்டாங்க.பேரு

தில்,தில்,மனதில்’லாம்.ரொம்ப தில்லான காரியம் செய்பவர்களின் திறமையை

உலகுக்கு கொண்டு செல்வது இந்நிகழ்ச்சியின் நோக்கமாம்.மகிழ்ச்சிதான்.பல

வெளியில் தெரியாத திறமைகளை கொண்டுள்ளவர்கள் அறிமுகமாகிறார்கள்

சந்தோஷம்.


ஆனால் இதில் தில்லான செயல் என சில அபத்தங்களையும் ஒளிபரப்பி

ஊக்குவிப்பதாக எனக்குப்படுகிறது.உதாரணமா நான் பார்த்த போது ஒருத்தர்

பைக் ஒட்டுறாரு.எப்படி?ஹாண்டில் பார்ல ஒக்காந்துகிட்டு,அப்புறம்

இன்னொருத்தரு இவருக்கும் மேல ஓடுற பைக்குல இருவதோ முப்பதோ

வகையான யோகா செய்யுறாரு.


இதுல என்ன தப்பு இருக்கு?அவங்களுக்கு திறமை இருக்கு செய்யுறாங்கன்னு

சொல்றிங்களா?எனக்கொரு சந்தேகம்.எனக்கு தெரிந்தவரை யோகா

சொல்லிதரவங்க,செய்யுரவங்க யாரும் இப்படி செஞ்சு

பாத்ததில்லை.அதுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கறதாவே

எனக்குப்படுது.



அதெல்லாம் விடுங்க இந்த சாதனையை(?)ஏதாவது ஒரு மைதானத்திலோ

யாருமில்லா சாலையிலோ செய்திருந்தால் பரவாயில்லை.நான்

பார்த்தஇரண்டுமே போக்குவரத்து மிகுந்த சாலையில்

நிகழ்த்தப்பட்டது.அரசு,தனியார் பேருந்துகள்,கார்கள், பக்கமாகவும்,எதிரிலும்

போய் வருகின்றன.காவல்துறையின எப்படி அனுமதித்தார்கள் என

தெரியவில்லை.கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் வண்டி ஒட்டியதாக

காட்டினார்கள்.என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும்

சாலையில் செல்லும் பிற ஓட்டுனர்களுக்கு கவனம் சிதற நிறைய

வாய்ப்பிருக்கு.

அது மட்டுமில்லாம நிகழ்ச்சியை பார்க்கும் சிலரும் இது போல செய்து பார்க்க

வாய்ப்புள்ளது.அவங்க என்னதான் நீங்க இது போல செய்து பாக்காதிங்க இது

ஆபத்தானதுன்னு அறிவிப்பு செஞ்சாலும் சக்திமான் காப்பாத்துவார்னு செத்து

போனவர்கள் எத்தனை பேர் இருக்காங்க இங்கே.இல்ல சிகரெட்

அட்டையில்,மது பாட்டில்ல உயிருக்கு கேடுன்னு போட்டிருக்கறதால யாரும்

அதை தொடுரதில்லையா?

                                                 (ஒழுங்கா ஒட்டுவியா?ஒட்டுவியா?)
                                                 
என்ன நண்பர்களே!திறமையை வெளிக்கொண்டு வரேன் பேர்வழினு சில

தொலைக்காட்சிகள் இது போன்றவற்றை ஒளிபரப்புவது எனக்கு

அபத்தமாகபடுகிறது.இல்ல இது போன்ற சாதனைகள் வெளியே

கொண்டுவரத்தான் வேண்டுமா? உங்க கருத்துகளை சொல்லுங்க.


நட்புடன்,
ம.கோகுல்.

மேலும் வாசிக்க "கலைஞர் செய்தது சரியா?"

Saturday, November 19, 2011

அதுக்குள்ளே என்ன அவசரம் ?


விலையேத்தறதுன்னு முடிவு பண்ணியாச்சு.ஆக்கப்பொறுத்து ஆறப்பொறுக்க
முடியாதது போல அறிவிச்ச உடனே எதுக்கு அமுல் படுத்தணும்?ஒரு வாரம்
அட ஒரு ரெண்டு நாளாவது இடைவெளி விட்டு இருக்கலாமில்ல?இந்த
கேப்புல நஷ்டத்துல இயங்குற நிறுவனங்கள் தலை தூக்கிடுமா?

பெட்ரோல் விலையெல்லாம் சொல்லிட்டு அன்னைக்கு நள்ளிரவே ஏத்திடறாங்களே?ஆமாங்க.பெட்ரோல் போடப்போகும் போது விலை ஏறி இருந்தா சரி ஒரு பத்து ரூபாய்க்கு கம்மியா போட்டுக்கலாம்.பஸ் பஸ் கட்டணத்தை ஒரே நாள்ல ஏத்திட்டா சாமி பட திரிசா மாதிரி கரெக்டா காசு எடுத்துட்டு வர்றவங்க நிலைமை?அவருக்காவது விக்ரம் ஆட்டோ பிடிச்சு அனுப்பினாரு நாம ஒரு பத்து கிலோமீட்டர் முன்னாடியே எறக்கி விட்டுடுப்பான்னு சொல்ல முடியுமா?கண்டக்டர் பாடு கொஞ்ச நாளைக்கு சொல்லி மாளாதுங்க.

எத்தனை பேரு டெய்லி நாட்டுல என்ன நடக்குதுன்னு முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிஞ்சுக்குறாங்க?நாட்டு நடப்பு ஏதும்தெரியாம தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருக்குற மக்கள் இந்த ஊருக்கு இவ்வளவுதான் டிக்கேட்டுன்னு நினைச்சுக்கிட்டு காசு எடுத்துட்டு போவாங்களே?என்ன பண்ணுவாங்க?செய்திகளை பாக்காம பால் வாங்கப்போய் எத்தனை பேர் திரும்பி வந்தார்களோ?

உங்களை விட்டா வேற எனக்கு வேற யாரு இருக்கா? எங்கே நான் போய் இருக்கற கஷ்டத்த எல்லாம் எறக்கி வைப்பேன்னு சொன்னிங்க சரி.வடிவேல் ஒரு படத்துல சொல்லுற மாதிரி சித்தெரும்பு சொரண்டற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா எறக்கி வைக்கலாமே?இப்படி யானை நெஞ்சுல மிதிச்ச மாதிரி ஒரேடியா தூக்கி அடிச்சுட்டிங்களே?

மின் கட்டண உயர்வுக்கு பரிந்துரை செய்தது பத்தி யாருக்கும் கவலை இல்லை.பாதி நேரம் இல்லாத ஒன்னுக்கு விலை ஏத்தினா என்ன,ஏறக்குனா என்ன?
இவங்களுக்கும் நிறைய ஏத்தி கொஞ்சம் இருக்குற விளையாட்ட விளையாட நினைக்குறாங்களோ?
மத்திய&மாநில அரசு-ரெண்டு பேரும் விலையை ஏத்தி இறக்கி விளையாடுவோமா?
மக்கள்-???????????????????????????????


(பாத்து காசு எடுத்துட்டு போங்க)


படங்கள்-கூகுள் தேடல்.
மேலும் வாசிக்க "அதுக்குள்ளே என்ன அவசரம் ?"

Thursday, November 17, 2011

விட்டுப்போவது எதை?




சமீப காலமாக நம்மிடையே ஒரு கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது.  அது என்னன்னா, 

நீங்க கூட பாத்திருப்பிங்க, முன்பெல்லாம் கல்யாணம்,காதுகுத்து,வளைகாப்பு,வரவேற்ப்பு இப்படி சுபகாரியங்களின் போது நடக்கும் விருந்துகளில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர் வைப்பர்.(சிறு வயதில் நான் இது போன்ற விசேசங்களில் ஜக்கில் தண்ணீர் எடுத்து ஊற்ற அப்போது என் வயது பொடுசுகளோடு போட்டியிட்ட ஞாபகம்)

(யாராவது டம்ளரை திருப்பி தண்ணி ஊத்துங்க )


ஆனா இப்ப என்னை நடக்குது,கொஞ்ச நாள் முன்னாடி வரை சில்வர் தம்ளருக்கு பதில் பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தினர்,
இப்ப உலகம் ரொம்ப வேகமா சுத்துதோ என்னமோ தெரியலசாப்பிட போறத்துக்கு முன்னாலேயே இலையப்போட்டு எல்லா பதார்த்தங்களையும் வைத்துவிட்டு(நமக்கு பிடிக்குதோ இல்லையோ சாப்பிடுறமோ இல்லையோ.இதில் கொடுமை என்னான்னா குழந்தைகள் உட்காரும் இலைகளிலும் பெரியவர்கள் சாப்பிடும் அளவுக்கு பரிமாறப்பட்டிருக்கும்.ஒக்கே.இதைப்பற்றி இன்னொரு பதிவு போடலாம் இப்ப மேட்டேருக்கு வரேன்)கூடவே தண்ணியை ஒரு பெட் பாட்டிலில் வைத்து விடுகிறார்கள்.நாமும் குடித்துவிட்டு வந்துவிடுகிறோம்.


நாம்குடித்துவிட்டு பாட்டிலை விட்டுவிட்டு வருங்காலத்திற்கு என்னத்த எடுத்து சென்று விடப்போகிறோம்.இது போன்ற பிளாஸ்டிக் குப்பைகளின் கூடாரத்தையா?

சமீபத்தில் ஒரு மண்டபத்தில் ஒராமாக காலியிடத்தில் இது போன்ற பாட்டில்களின் குவியல் இருந்தது.இதை என்னை செய்ய போகிறீர்கள் என்று நிர்வாகிகளிடம் கேட்டேன்.அவர்களிடமிருந்து தெளிவான பதில் இல்லை.(யார் கண்டா அடுத்த கல்யாணத்தில் நீங்கள் முன்பு குடித்த பாட்டிலிலே மீட்டும் தண்ணீர் குடிக்க நேரிடலாம்)


இது இல்லாமல் நாம் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள இயற்க்கை வளங்களை  நம்மால் முடிந்த வரை இந்த பாட்டில்கள் மூலம் அழித்து வருகிறோம்.இந்த பத்திவின் மூள அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்னன்னா அடுத்த முறை நம்ம வீட்லயோ,நண்பர்கள் வீட்லயோ விருந்து நடக்கும் போது இது போன்ற பாட்டில்களை பயன்படுத்த மாட்டோம்னும்,சுற்றுலா செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்னும் உறுதி எடுத்துக்குவோம்.




சமீபத்துல பெய்த மழையில் வெள்ளம் வடியாமல் அலைகழித்ததில் இது போன்ற பிளாஸ்டிக் குப்பைகளும் பெரும்பங்கு வகித்தன.அதேபோல் ஓரிரு நாட்களுக்கு முன் பேப்பரில் கண்ட விசயத்தை நண்பர் சம்பத்குமார் சொன்னார் ராமேஸ்வரத்தில் பிளாஸ்டிக் கவர்களை தின்று இரு பசுமாடுகள் இறந்து போனதாக.


நாம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுசெல்லப்போவது எதை?
வசந்ததையா?குப்பைகளின் கூடாரங்களையா?


மீள்வு-சில மாற்றங்களுடன்
படங்கள்-கூகுளில் பிடித்தது.
                                                                             
மேலும் வாசிக்க "விட்டுப்போவது எதை?"

Wednesday, November 16, 2011

கனி(?)வான கவனத்திற்கு...



வணக்கம் நண்பர்களே!ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு உங்களையெல்லாம் சந்திப்பதில் 

மகிழ்ச்சி!நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்ள நாகர்கோவில் வரைசென்று 

வந்தேன்.இந்த பயணத்தில் எனது சில “கனிவான” அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.


விழுப்புரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு(எரனியல்) அனந்தபுரி எக்ஸ்ப்ரஸ்சில் கல்யாண 

மாப்பிள்ளையே முன்பதிவு செய்து கொடுத்து நீங்க வந்தா மட்டும் போதும் என அன்பு 

காட்டியிருந்ததால் தூரத்தை காரணம் காட்டி மறுக்க முடியவில்லை.அது மட்டுமில்லாம 

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் திண்டுக்கல்லை தாண்டியதில்லை.அதனால ஓசியில ஊர் 

சுத்தி பாத்துடலாம்னு கிளம்பிட்டேன்.  



சென்னையில் இருந்து வரும் நண்பர்களிடம் டிக்கெட் இருந்தது.பிளாட்பாரம் டிக்கெட் 

மட்டும் வாங்கிக்கிட்டு,வடிவேல் கடைய எப்ப சார் தொறப்பீங்க கேக்குற மாதிரி.ட்ரெயின் 

எப்ப சார் வரும்னு கவுண்டரில் இருக்கவங்கக்கிட்ட கேட்டேன்.(கிளம்புகையில் டி.வி.யில் 

விழுப்புரம் வழியே வரும் ரயில்கள் ஒரு மணிநேரம் தாமதமாகும் என செய்தி 

ஓடியது).வரும் போது அனவுன்ஸ் பண்ணுவோம்னாங்க(கனிவு).ரயிலில் வரும் 

நண்பர்களுக்கு போன் செய்து தாமதம் இல்லையென தெரிந்துகொண்டேன்.காத்திருக்கும் 

எல்லோருக்கும் யாராவது ஒருவர் ரயிலில் வருவார்களா?.




ரயில் வந்தது.அவர்கள் சொன்ன அனவுன்ஸ் செய்தார்கள்.எப்படி?பயணிகளின் கனிவான 

கவனத்திற்கு திருவனந்தபுரத்தில் இருந்து விழுப்புரம்,தாம்பரம் வழியாக சென்னை வரை 

செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தடம் ரெண்டில் வந்து நிற்கும்.அடங்கோ!சென்னையில் 

இருந்து வரும் ரயிலை சென்னைக்கு போகும் ரயிலாக கனிவுடன் 

அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.கிட்டத்தட்ட பதினைந்து முறை.ஊழியர்கள் யாருக்கும் காது 

கேட்காதோ?அல்ல ஏதோ அறிவிச்சா போதும் என்கிற அலட்சியமா?என்னதான் பதிவு 

செய்யப்பட்ட கணினியின் குரலாக இருந்தாலும் ஒரு முறை கேட்டவுடனாவது 

மாற்றியிருக்க வேண்டாமா?ரயில் கிளம்பும் வரை மாற்றவேயில்லை.பலர் சந்தேகத்துடன் 

கடைசி நேர பரபரப்பில் அவதிப்பட்டார்கள்.(இதுதானா சார் உங்க அனவுன்சு என மனசுக்குள் 

அனவுன்சு பண்ணுவோம் என சொன்னவரை கேட்டுக்கொண்டேன்)



இன்னொரு கனிவு திருநெல்வேலி சந்திப்பில்.கால்மணி நேரம் அங்கே ரயில் 

நின்றது.மற்றொரு பாசஞ்சர் அங்கிருந்து தூத்துக்குடிக்கு கிளம்பியது.ரயில் கிளம்பி பத்து 

நிமிடங்களாகியும்,இன்னும் சற்று நேரத்தில் தூத்துக்குடி பாசஞ்சர் கிளம்பும் என கனிவாக 

அறிவித்துக்கொண்டிருந்தார்கள்(யாருமில்லா கடையில் டீ).




திரும்ப வருகையில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்ல் 

பயணம்.ரயில் நிலையத்தில் ரயில் பிளாட்பாரத்தில் நிற்கும் கோச் எண் காட்டப்படும் 

டிஸ்ப்ளே வேலைசெய்யவில்லை.ஒருவர் போய் கேட்டார்.வேளை செய்யவில்லையா என 

அதுக்கு ஹெல்ப் கவுண்டரில் இருந்தவர் போடவில்லை என்றார்.பக்கத்திலிருந்த ஊழியர் 

ஒருவர் என்னவாம்?என்றார்.டிஸ்ப்ளே வேலை செய்யவில்லையாம் என்றார்.கேட்டவரது 

கனிவான பதில் ரொம்ப முக்கியம்..ஆமாங்க ரொம்ப முக்கியம் தான்னு 

சொன்னதுக்கப்புறம் முனகிக்கிட்டே ஆன் பண்ணாங்க.முக்கியமில்லேன்னா எதுக்குங்க 

பணத்தை வீணாக்கி செலவு பண்ணி வைக்கணும்.ஒரு பட்டன தட்ட என்னா ஒரு 

அலட்சியம்?



இரவு நேரங்களில் பல ரயில் நிறுத்தங்களில் ரயில் வந்து புறப்படும் அறிப்விப்புகள் 

செய்யப்படவில்லை.(எல்லா நிறுத்தங்களிலும் அல்ல).இதனால் தூங்கும் பயணிகள் 

ஸ்டேஷனை தவறவிட வாய்ப்பு அதிகம்.நான் வந்திறங்கிய விழுப்புரம் சந்திப்பிலும் ரயில் 

வந்து கிளம்பிய வரை எந்த அறிவிப்பும் இல்லை.(நேரம் காலை நான்கு மணி)










எங்கே இருக்கிறது கனிவு?வெறும் அறிவிப்பில் மட்டும் தானா?


பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த போவதாக பேச்சு அடிபடுகிறது போல தெரிகிறது.ம்ம்ம்.


மேலும் வாசிக்க "கனி(?)வான கவனத்திற்கு..."

Friday, November 11, 2011

அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........



நேற்று சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது கூட்டமாக சில பள்ளி 


சிறுவர்கள் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர் நானும் அவர்கள் 


பேசுவதை கவனித்துக்கொண்டே நடந்தேன்.அவர்கள் அநேகமாக எட்டாவது 


அல்லது ஒன்பதாவது படிக்கலாம்.


அதில் ஒரு சிறுவன் டேய் நேத்து மேட்ச்ல அவன் மட்டும் சதம் 


அடிக்கலன்னா கண்டிப்பா நாம தோத்து இருப்போம்ன்னான்.இன்னொருவன் 


ஆமாம் வர்றவன் எல்லாம் ஒரு ஓவர் ரெண்டு ஓவர்ல 


அவுட்ஆயிடரானுங்க ன்னான்.






அப்போதுதான் யோசித்தேன் இவர்கள் மட்டுமல்ல இவர்களுக்கு உலகத்தை 


கற்றுக்கொடுக்க,சமுதாயத்தை அடையாளம் காட்ட வேண்டிய 


பெரியவர்களான(நான் சின்னவன் தாங்க) நாமும் இப்படித்தான் பல சமயங்களில் 


பேசுகிறோம்.

அன்றாடம் நமக்கு அத்தியாவசிய 


பணி செய்யும் பணியாளர்களை நாம் 


மரியாதையாக பெரும்பாலும் 


அழைப்பதில்லை.துணி 


தேய்க்கிறவன் இன்னம் வரல,பேப்பர்காரன் வர வர சரியான டைம்க்கு 


வரமாட்டேங்கறான்,பால்காரன் போய்ட்டானா?, முடியை கொஞ்சம் 


விட்டு வெட்ட சொன்னேன் ரொம்ப ஷார்ட்டா வெட்டிட்டான்,துணியை 


நேத்தே குடுக்கறேன்னான் இன்னும் கொடுக்கல.

ச்சே!இந்த நேரம் பாத்து கரண்ட்ட 


கட் பண்ணிட்டானே,ஆட்டோ 


ஒட்றவன்கூட,மாடு மேய்க்கிரவன் 


கூட நிம்மதியா இருக்கான்,
அதே போல் அலுவலகங்களில் நமக்கு கீழ பணிபுரியும் 


பணியாளர்களையும் நாம் மரியாதையோடு அழைப்பதோ வேலை 


வாங்குவதோ கிடையாது.ஏய் இங்க வா! இதை கிளீன் பண்ணு!இப்படி 


ஒருமையில் தான் அவர்களை அழைக்கிறோம்.ஒரு சிலர் தம்மை விட 


வசதி குறைந்தவர்களை ஒருமையில் பேசுவதுண்டு.






இவர்கள் மட்டுமல்ல .பிரபலங்களும் நம்மிடம் தப்புவதில்லை.நேத்து ஒரு 


படம் பாத்தேன் அதுல ஹீரோ என்னமா டான்ஸ் ஆடுறான்,செமையா 


பைட்பண்றான்,இவன எப்படி டீம்ல செலக்ட் பண்ணாங்க,போன சீரிஸ்ல 


ஒரு மேட்ச்லகூட இவன் ஒழுங்கா விளையாடல,போன எலக்சன்ல 


ஜெயிச்சவன் நிக்கல இப்ப வேற ஒருத்தன் நிக்கறான்.






நம்மைப்பார்த்து தான் நம் குழந்தைகளும் கற்றுக்கொள்கிறார்கள் நாம் தான் 


அவர்களுக்கு முன்மாதிரியாய் இருந்து நம்மை விட வயதில் 


மூத்தவர்களை மரியாதையோடு அழைக்கவும்,பேசவும் கற்றுக்கொடுக்க 


வேண்டும்.அதுக்காக கவுண்டமணி சொல்றது போல அவர்ர்ர் 


,இவுர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சொல்ல சொல்லுல .நம்ம விட வயசு அதிகமா இருந்தா 


பெரியவரே ன்னும்,வயசு கம்மியா இருந்தா தம்பின்னோ கூப்பிடுங்கோ.


(இது அவர்கள் நேரில் இல்லாத போது அவர்களைப்பற்றி பேசும் போதும்)  


சுருக்கமா நான் என்னை சொல்ல வர்றேன்னா


அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும் வயசுக்கு மரியாதை 


குடுங்க!!!  


                                                          - மீள்வு
மேலும் வாசிக்க "அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்.........."

Wednesday, November 9, 2011

தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?



பதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ 

கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொத்தத்தில் 

ஒரு சினிமா ரசிகன் அவ்வளவுதான்(அப்பாடா நடுநிலை விளக்கம் கொடுத்தாச்சு)



தமிழ் சினிமாவுல யாருதான் தோல்விப்படம் கொடுக்கல?நம்ம சூப்பர்ஸ்டாரே தோல்வி 

கண்டிருக்கிறார்.அப்பறம் ஏன் விஜய் மட்டும் எஸ்.எம்.எஸ்களிலும், facebook,twitter,blog 

இன்னும் என்னென்ன இருக்கிறதோ எல்லாவற்றிலும் கண்ணாபின்னாவென்று கலாய்க்கப்பட 

என்ன காரணம்?அப்படி கலாய்ப்பவர்கள் தல ரசிகர்களா?அப்படினா தல படம் வரும் போது 

தளபதி ரசிகர்களால் படாத பாடு படனுமே?படுது ஆனா ரொம்ப கம்மியாத்தான்.அப்படின்னா 

தளபதி ரசிகர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையை ரசிக்கும் 

கண்ணியம்(கடமை,கட்டுப்பாடு இல்லையான்னு கேக்காதீங்க) மிக்கவர்களா?என்ன தான் 

நடக்கிறது?



தல அப்படியென்ன சாதனை செஞ்சுட்டார்? கொஞ்ச நாள் கழித்து திரும்பிப்பார்க்கும் போது 

தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்று என்று இவரது படம் ஏதாவது இருக்குமா?

இல்லை தளபதியைவிட அதிக ஹிட் கொடுத்து விட்டாரா?எனக்குத்தெரிந்து தளபதியை 

விட இவரே அதிக பிளாப்பை கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். 

ஜனா,ராஜா,ஆழ்வார்,ரெட்,ஆஞ்சநேயா,ஜீ போன்றவை உதா”ரணங்கள்”.அவ்வளவா தமிழ் 

சினிமாவின் பெரிய இயக்குனர்கள்  என சொல்லப்படும் இயக்குனர்களின் படங்களிலும் 

நடித்ததில்லை.



நம்ம தளபதி என்ன செய்திருக்கார்?ஆ”ரம்ப” காலங்களில் சங்கவி,சுவாதி போன்றோருடன் 

அவரது அப்பா(டேக்கர்)வின் படங்களில் நடித்து(!) தமிழ் சினிமாவில் தனது இடத்தை தக்க 

வைத்துக்கொண்டார்.அவரை பலருக்கும் எடுத்துச்சென்ற படம் 'லாலா' புகழ் விக்ரமனின் 

பூவே உனக்காக.அப்பறம் காதலுக்கு மரியாதை மூலமாக இளைஞர்களின் குறிப்பாக 

காதலர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.அதன் பிறகு ரஜினி வழியை ,எம்.ஜி.ஆர் வழியை 

பின் பற்றுகிறேன் என்று ஐஞ்சு பாட்டு,நாலு பைட்டு,பார்முலாவில் குதித்து அதையே இன்று 

வரை தொடர்கிறார்.ஆனால் ரஜினி நடுநடுவே பார்முலாவில் இருந்து விலகி நடித்த 

படங்களையும் ஆரம்ப காலங்களில் தர மான படங்களில் நடித்து தன்னை திரையுலகில் 

நிலை நாட்டியதையும் மறந்து விட்டார்(முள்ளும் மலரும்,ஜானி,போன்ற சில படங்கள்).



 தல நடித்(டந்)ததில் அவரை ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சேர்த்தது 

வாலி,அமர்க்களம்,தீனா போன்றவை.ஆனா பாருங்க இதுல எல்லாமே அவரு நெகடிவ் 

ரோல்ல நடிசிருப்பாரு.(பல காலமா நம்ம சினிமாவுல ஹீரோ வில்லன் ரெண்டு பேரும் 

ஒரே வேலைய தான செய்யுறாங்க).இதுல தீனா தல’க்கு ஒரு மாஸ் படம்.அப்படி ஒரு படம் 

தளபதிக்கு கில்லி,அப்பறம் போக்கிரி புண்ணியத்துல ரொம்ப நாள் கழிச்சு தான் கிடைச்சது.




நாலு பைட்டு,ஐஞ்சு பாட்டு பார்முலாவில் இருவருமே இருந்தாலும் அந்த பாட்டுக்கும் 

பைட்டுக்கும் இருக்கும் இடைவெளியில் உள்ள விஷயங்கள்தான் இங்கே 

முக்கியம்.தளபதியாரின் படங்களில் அவை எல்லா 

படங்களிலும்(சிவகாசி,திருப்பாச்சி,குருவி,வேட்டைக்காரன்,சுறா,வில்லு,ஆதி) ஒரே மாதிரி 

வருவது,பைட்டுகளில் அளவுக்கதிகமா தாவிக்குதிக்கறது,அப்பறம் 

அரசியல் ஆர்வம்(அதனாலதான அணில்?),அவங்க அப்பாவோட பேட்டிகள்,டாகுடர் பட்டம் இதெல்லாம் அவரோட 

இமேஜை நடுநிலை ரசிகர்கள் மத்தியில் டேமேஜ் ஆகிடுச்சு.இவர் இடைக்காலங்களில் 

நடித்த து.ம.துள்ளும்,குஷி,பிரண்ட்ஸ் போல தொடர்ந்திருந்தால் கூட இந்த அளவுக்கு ஆகி 

இருக்கிறது என நினைக்கிறேன்.



இந்த ஐஞ்சு பாட்டு நாலு பைட்டுக்கு நடுவுல தல படத்துல ஏதோ கொஞ்சம் 

வித்தியாசத்தை(முகவரி,க.கொ க.கொ,சிட்டிசன்,வரலாறு,வில்லன்,பில்லா,மங்காத்தா)காட்டி 

வருவது,அரசியலில் ‘தல’யிடாதது ஆதரவின்றி திரையுலகில் தடம் பதித்த திறமை,ரசிகர் 

மன்றத்தை கலைத்த அதிரடி,ஒளிவு மறைவில்லா பேச்சு போன்ற சில ஆரோக்கியமான 

விஷயங்கள் இவரை கலாய்க்க யோசிக்க வைக்கிறது.



கவனிக்க பெரும்பாலும் கலாய்ப்பது நடுநிலை ரசிகர்களே.அப்பறம் தளபதி புதிய 

வெற்றியின் மேல நம்பிக்கையில்லாம அதிகம் ரீமேக் பண்றதும் ஒரு 

காரணமாயிருக்கலாம்.இப்ப கொஞ்சம் மாற்றம் இருக்காப்புல தெரியுது தளபதியோட 

மூவ்ல.ஷங்கர்,முருகதாஸ்,கெளதம்மேனன்,விஜய்,சீமான் படங்கள்ல அடுத்தடுத்து 

நடிக்கப்போறதா இருக்கு இது ஒரு நல்ல மாற்றம் போல தெரியுது.பாப்போம்.அப்படி நல்ல 

மாற்றங்கள் வந்தும் தொடர்ந்து கலாய்ப்புகள் தொடர்ந்தா அது நடுநிலை ரசிகர்கள் அல்ல 

என்பது நிச்சயம்.


டிஸ்கி-மீண்டும் ஒரு முறை ஆரம்ப வரிகளைப்படிக்க.   


மேலும் வாசிக்க "தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?"